Showing posts with label cut and paste. Show all posts
Showing posts with label cut and paste. Show all posts

Tuesday, April 23, 2013

MAANDAVA RISHI became AANI MAANDAVAR


ஆனிமாண்டவரும் தர்மதேவதையும்
நான் சிறுவனாக இருந்த போது, எனது தாய் தும்பி போன்ற சிறு பூச்சிகளை நான் துன்புருத்தாமல் இருப்பதற்காக “ஆனி மாண்டவர் என்ற ஒரு ரிஷி மஹானைப்பற்றிய ஒரு ஸ்வாரஸ்யமான பத்ம புரணாக் கதைத் தொகுப்பினைச் சொல்லுவார்கள்.
மாண்டவ ரிஷி சிறு வயதில் செய்த தவற்றினால், கழுவில் ஏற்றப்பட்டார் என்ற ஒரு செய்தியைச் சொன்னார். அதன் பின்னணியில் உள்ள வ்ருத்தாந்தத்தை இன்று அறிந்தேன். அதனை உங்களுக்கும் தெரிவிக்கிறேன். இதனை முன் அறிந்தவர்கள் இந்தச் செய்தியில் ஏதேனும் பிழை இருந்தால் சொல்லலாம். அதனைச் சரி செய்து கொள்கிறேன்.
நாம் அறிந்தது 18 புராணங்கள். உடலின் கூற்றுகளை இந்த 18 புராணங்களின் உருவகமாகக் கூறுவது ஒரு பண்டைய வழக்கம்
ப்ரஹ்ம புராணம் – முன் நெற்றி
பத்ம புராணம் - இதயம்
விஷ்ணு புராணம் – வலது புஜம்
சிவ புராணம் – இடது புஜம்
ஸ்ரீமத்பாகவத புராணம் – இரண்டு நேத்ரங்கள்
நாரத புராணம் – நாபி
மார்கண்டேய புராணம் – வலது கால்
அக்னி புராணம் - இடது கால்
பவிஷ்ய புராணம் – வலது முட்டிக்கால்
ப்ரஹ்மவைவாரி புராணம் – இட்து முட்டிக்கால்
லிங்க புராணம் – வலது கணுக்கால்
வாராஹ புராணம் – இட்து கணுக்கால்
வாமன புராணம் – ரோமம்
கூர்ம புராணம் – சருமம்
மத்ஸ்ய புராணம் – வயிறு
கருட புராணம் – ம்ஞ்சையும் கொழுப்பும்
ப்ரஹ்மாண்ட புராணம் – எலும்பு
 பத்ம புராணக் கதைத் தொகுப்பில் வருவது மாண்டவ மகரிஷியின் சரித்திரம். மாண்டவ மகரிஷி, வசிஷ்டருக்கு சமமான நிலை தனக்கு வருவதற்காக ஒரு தவயோகத்தைக் கையாளுகிறார். கடவுளை அடைய தவம் இருக்கலாம். ஆனால் ஒருவர் போல் மற்றொறுவர் வர வேண்டும் என்ற பேராசை ரிஷிகளிடம் இருக்கக் கூடாத ஒரு நிலை. 
ப்ரஹ்ம தேவதையின், அம்சம் மஹாபாரத சமயத்திற்கு உதவ வரவேண்டும். அதே சமயம் மாண்டவரின் தப வலிமை வசிஷ்டரின் நிலைக்குச் சமமாக வருவதற்கு உதவாமல் அந்த வலிமை பூலோகத்திற்கு விதுரனாகவும், தர்மபுத்திரனாகவும் வருவதற்கான ஒரு சந்தர்பம் கிடைக்க வேண்டும். அதற்காக தரும தேவதை ஒரு சிறிய நாடகத்தை உண்டு பண்ணுகிறார்.

ஒருசமயம் கள்வர்கள் அரண்மனையில் உள்ள பொருள்களை களவாடியவனுடன், சிப்பாயகள் துரத்த, மாண்டவய்யர் பர்ணசாலையில் புகுந்து கொள்கின்றனர். சிப்பாய்கள், கள்வர்களுடன் மாண்டவர்யையும் அழைகின்றனர். பதில் சொல்லாததால் அவரைத் தூக்கிக் கொண்டுவந்து அரசன் முன் நிறுத்துகின்றனர். அப்பொழுதும் அவர் தவம் கலையாததால் அவரால் பதில் கூறமுடியவில்லை. அரசன் அவரையும் கள்வன் என்று நினைத்து கழுவில் ஏற்ற கட்டளையிடுகிறான். மற்ற கள்வர்கள் அன்று இரவு இறந்துவிடுகிறார்கள். நிசி வேளையில் ரிஷிக்கு நினைவு திரும்புகிறது. அன்று இரவு மற்றொறு நிகழ்வும் நடக்கிறது.

ப்ரதிஷ்டானபுரம் என்று அழைக்கப்படும் அந்த பட்டிணத்தில், கௌசிகன் ஷைய்வ்யா என்ற ப்ரஹமண தம்பதியனர் இருந்தனர். ஷைய்வ்யா நளாயினி போன்ற பதிவ்ருதை. குஷ்டரோகத்தில் பீடித்திருந்த தனது கணவனின் வினோத ஆசையை நிறைவேற்ற ஒரு தாசியின் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றாள். அச்சமயம் இருட்டில், கௌசிகனது கால், மாண்டவரது சூலத்தில் இடிபட, அவர் வேதனையில், கௌசிகன் சூரிய உதயத்திற்குள் இறப்பான் என்று சாபமிட்டார். தெரியாமல் செய்த தவற்றுக்கு இந்த சாபத்தை இட்டதால் வெகுண்ட பதிவ்ருதை சூரியோதயம் நிகழாமல் செய்துவிட்டாள். தேவர்கள் வந்து அவளை சமாதனம் செய்து, முதலில் சூரிய உதயம் நிகழச்செய்து, பின்பு இறந்த கௌசிகனை உயிர் பெறச் செய்கின்றனர். அவர்கள் இருவரும் ஸ்வர்கம் செல்லுகிறார்கள். இதைக் கண்ணுற்ற மாண்டவர் தர்மராஜனை வருவித்து, தனக்கு நேர்ந்த இந்த அவலத்திற்கு காரணம் கேட்டார். அவரும் சிறு வயதில் செய்த தவற்றினை உணர இந்த தண்டனை என்று சொல்ல, மாண்டவர் வெகுண்டு சாபம் இடுகிறார். விவரம் தெரியாத வையதினில் செய்யும் தவறுகள் தாய் தந்தையரைத் தான் சேரும் என்ற வழக்த்துக்கு மாறாக தன்னை தண்டித்ததால் யமதர்மராஜனை தாசியின் வயிற்றில் பிறக்கக் கடவாய் என்று சபித்தார். முதலின் கௌசிகனையும் பின்பு யமதர்மராஜனையும் சபித்ததால் அவர் யோக பலன்களை இழந்தார். தர்மராஜன் நினைத்தது எல்லாமே இனிதே நடந்து முடிந்தது. மாண்டவரும் தனது அறியாமையை நினைந்து வெட்கமுற்று, பகவானை த்யானிக்கச் சென்றார். மஹாபாரதம் என்ற இதிஹாசம் உருவாக இவரும் ஒரு காரணகர்த்தாவாக் திகழ்ந்தார்.

Saturday, April 20, 2013

Rudhra Geethai

ருத்ர கீதை என்ற ஸ்லோகங்களைப் பற்றி வலையில் தேடிய போது எனக்குக் கிடைத்த சில முக்கியத் தகவல்களை உங்களுடன் ஆராய்கிறேன். உங்களது கருத்துக்களையும், இதனைப் பற்றி நீங்கள் அறிந்த மற்றய தகவல்களயும் இந்த தபாலின் விமர்சனப் பகுதியை உபயோகித்து, எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
1. ருத்ர கீதை ஸ்ரீமத் பாகவதத்தில் வராஹ புராணத்தில் 70-72 பகுதிகளில் உள்ளது. நான்காவது ஸ்கந்தத்தில் 16லிருந்து 79 வது ஸ்லோகங்கள் ருத்ர கீதையாய் உள்ளன.
2.மொழி ஆராய்ச்சியாளர்கள் இந்த வேத புராணங்கள் எழுத்து வடிவில் 6th century B.C. to the 12th century A.D என்ற காலகட்டத்தில் கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் அளிக்கின்றனர்.
3.புராணங்களை முக்கிய புராணங்கள் அல்லது மஹா புராணங்கள் மேலும் உப புராணங்கள் என்று வகைப் படுத்துகின்றனர்.
4. மஹாபுராணங்களில் உள்ள பஞ்ச கீதைகள் பின்வருமாறு
1. உத்தவ கீதா, 2. ருத்ர கீதா, 3. பிக்ஷு கீதா,
4.ஸ்ருதி கீதா, 5.ஹம்ஸ கீதா.
5. ருத்ரன் ப்ரசேதஸ் என்ற அரசனுக்கு பகவான் நாரயணரை எவ்வாறு பூஜிக்க வேண்டும், அதனால் அடையும் உயர்ந்த மார்க்கம் என்ன என்ற பல செய்திகள் உபதேசித்தார். அதுவே ருத்ர கீதை எனப்படும். இந்த கீதையைப் பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரையை இங்கே கொடுத்துள்ளேன். படித்து உங்களது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.

Tuesday, January 15, 2013

Sivalaya Marathon

சிதம்பரம் நடராஜர் கோவிலின் வாசலில் காவல் தெயவமாக் வழிபடும், இந்த வினோதமான மிருகத்தின் பெயர் “புருஷமிருகம். எகிப்திய வழிபாட்டில் உள்ள “ஸ்பின்க்ஸ் (sphinx) , பெண் புருஷமிருகம் என்று அழைக்கப்படும். 
த்ரிபுவனத்தில் உள்ள வரதராஜர் பெருமாள் கோவிலின் சுவர்களில் இந்த பெண் புருஷமிருக சிலை உள்ளது


மேலே சொன்ன செய்தியான புருஷ ம்ருகத்திற்கும், சிவாலய ஒட்டத்திற்கும் என்ன சம்பந்தம். முதலில் சிவாலய ஓட்டம் என்ன என்று பார்ப்போம்.
மாரதான் ஓட்டம் பற்றி கேட்டுள்ளோம். அதன் இலக்கு 45 கிலோ மீட்டர் தூரம் தான். 
சிவாலய ஓட்டம் பற்றி கேட்டுள்ளீர்களா. அது 100 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். சிவராத்ரி பண்டிகையின் போது குமரி மாவட்டத்தில் உள்ள திருநட்டா சிவத்தலத்தில் தொடங்கி, திருமலை மகாதேவர், திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திகரை, பொன்மனை தீம்பிலாங்குடி, திருபன்றிபாகம், கல்குளம்நீலகண்ட ஸ்வாமி, மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருபன்னிக்கோடு, திருநட்டாலம் சங்கரநாராயணன் கோவில் வரை ஓடி வலம் வருவர். பதினோரு சிவத்தலத்தில் திருநீறு தருவர். திருநட்டாலத்தில் சந்தனம் வழங்கப்படும். 
இந்த ஓட்டம் மூன்று தத்துவங்களைச் சொல்கின்றது. 1. அகந்தை கூடாது. 2. ஹரியும் ஹரனும் ஒன்று, 3. நீதி அனைவருக்கும் சமம். இன்றய காலகட்ட்த்தில் இந்த மூன்றையும் அநேகமாக பலரும் மதிப்பதில்லை. மகாபாரத்தின் ஒரு நிகழ்வு, இந்த செய்தியின் பின்னணியாக உள்ளது.
தருமபுத்திரர் செய்த யாகத்திற்கு, மனிதன் தலையும் புலியின் உடலும் கொண்ட புருஷ ம்ருகத்தின் பால் தேவைப்பட்டது.
புருஷ ம்ருகம் மனிதத் தலையும் புலியின் உடலமைப்பையும் உடையது. அதனைப் பிடித்துவர பீமன் காட்டிற்குக் சென்றான். புருஷ ம்ருகம் ஒரு சிவபக்தை. தனது எல்லைக்குள் வருபவர் எவரானாலும் அவர்களைக் கொன்று தின்ன சிவபிரான் அதற்கு வரம் அளித்திருந்தார். பீமன், புருஷம்ருகம் இருவரது “நான் என்ற கர்வத்தை அடக்க க்ருஷ்ணபிரான் ஒரு யுக்தியைக் கையாண்டார். பீமனிடம் 12 சிவ லிங்கங்களை கொடுத்து அனுப்பினார். “என்னிடம் அகப்படாமல் என்னைத் தாண்டிச் சென்றால் உனக்கு வேண்டியதை தருவதாக ம்ருகம் ஒத்துக் கொண்டது. ஒவ்வொரு தடவையும் பீமன் அந்த ம்ருகத்திடம் பிடிபடும் பொழுதும் ஒரு லிங்கத்தை அங்கே வைக்க, புருஷ ம்ருகம் அங்கே சிவ பூஜையைத் தொடங்கும். பீமனும் அதன் எல்லையை தாண்ட, ஒட வேண்டும். இவ்வாறு பன்னிரண்டு தடவை ஓடி எல்லையை விட்டு வெளியே வர யத்தனித்தான். பன்னிரண்டாவது தடவை எல்லைக் கோட்டிற்குள் அவனது கால் இருந்த்தால், அந்த ம்ருகம் பீமனை பிடித்தது. பீமன் அதன் எல்லையை தாண்டியதாக வாதிட்டான். அதனை நிரூபணம் செய்ய தருமபுத்திரரை அழைத்தது. தருமரும் பீமன் தோற்றதாக உண்மையை உரைத்ததால், மகிழ்ந்து பீமனை விட்ட்து. வேண்டியதை அளித்தது. பீமனின் செருக்கும் அகன்றது. ம்ருகத்தின் வீர்யம் அழிந்து சிவனடி அடைந்தது. பீமன் வைத்த 12 சிவலிங்கங்களே இன்றும் பூஜிக்கப் படுகிறது. அவன் ஓடிய ஓட்டம் தான் இன்றும் சிவாலய ஓட்டமாக கொண்டாடப் படுகிறது.

Friday, August 10, 2012

Talk of (Chemical) Tablets



In India, Pharmacist plays a main role in the field of Medicine.
Patients get their medicine directly from pharmacy by consulting them for their ailments. The general view of public, why they are avoiding doctors for consultation:
1.   Crowd in the clinics or the patients have to pay consulting fees for each visit, exorbitantly.
2.   Compulsory pathology tests in clinical laboratories with some vested interests.
3.   Directing the patients to the hospitals which they are visiting, even for trivial ailments.
Recently I took one of my relative for normal eye check-up. The patient had the rare opportunity of seeing all the scanning instruments which the hospital got imported recently. Of course at patient’s cost only as well as usual lab tests viz. blood test, urine test, x-rays etc.


 I got the following forward in my e-mail box which is really interesting.

For The medicines prescribed either by doctors or by pharmacists we pay more because of the brand name. We can follow the following steps which will give us a light how costly the branded medicines when compared to the generic drugs.
1. Log on to www.medguideindia.com
2. Click on 'Drugs'
3. Click on 'Brand'
4. Type the brand name which you are using (e. g. Metocard XL (50 mg). The site will also help you with drop down menu) & Click on 'Search'
5. Click on 'Generics'. It will display the ingredients of the tablet.
6. Click on 'matched brands'
7. Don't be surprised to see that same drug is available at very low cost also. And that to by other reputed manufacturer.

e. g. Metocard XL 50 is for Rs. 62.00 & same drug by Cipla (Mepol) is available ONLY @ Rs. 7.00

Thursday, May 31, 2012

Shakespeare the 2012

வலையில் சிக்கிய ஒரு விஷமத்தனமான விவரம். 
இதனை அனுப்பிய அன்பர் மிகவும் ரசித்துள்ளார். 
நானும்........ நீங்கள் எப்படியோ ?
ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கிட்டிருந்தான். பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப் பார்த்து, மருந்து, இஞ்செக்‌ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை. கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி ஒரு நாள் சொன்னாநீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே (மிருக டாக்டர்) போய் உடமைபைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்க சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்னாள்.
என்னது மிருக டாக்டர்கிட்டேயா? உனக்கென்ன மூளை கெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன்.
எனக்கொண்ணும் கெட்டுப் போகல! உங்களுக்குத்தான் எல்லாமே கெட்டுப் போய் கிடக்கு! காலாங்காலத்தாலே கோழி மாதிரி விடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்க! அப்புறம் காக்காய் மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி லபக் லபக்னு ரெண்டு வாய் தின்னுட்டு, பயந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஓடிஆபிசுக்குப் போறீங்க!
அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க! உங்களுக்கு கீழே வேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க! அப்புறம் ஆபிஸ் விட்டவுடனே, ஆடு மாடுங்க மாதிரி பஸ்லே அடைஞ்சு வீட்டுக்கு வர்றீங்க! வந்ததும் வராததுமா, நாள் பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே நாய் மாதிரி என்மேலே சீறி விழறீங்க! அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை சரக் சரக்னு முழுங்கிட்டுஎருமை மாடு மாதிரி போய் படுத்து தூங்கறீங்க!
மறுபடியும் விடிஞ்சா அதே மாதிரி கோழி கதைதான்! இப்படி இருக்கிறவங்களை மனுஷ டாக்டர் எப்படிங்க குணப்படுத்த முடியும்? அதனாலதான் சொல்றேன், நாளைக்கே ஒரு கால்நடை டாக்டரைப் போய் பாருங்க!என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் மனைவி.
என்ன பதில் சொல்வதென்று தெரியாம கணவன் முழிக்க, கோட்டான் மாதிரி முழிக்காதீங்கபோங்கன்னு முத்தாய்ப்பு வச்சாளாம் மனைவி..!



Thursday, May 17, 2012

Well seen and well said

நெட்டில் சுட்டது



Out of Clutter find simplicity
From discord find harmony
In the middle of difficulty lies opportunity

Every Day may not be good but 
there is something good in every day.

It is crazy how you can do nice things for people 
all the time and they never notice. 
But once you make one mistake 
it has never been forgotten.

Imagination is more important 
than knowledge

I have no special talents. 
I am only passionately curious. 

Saturday, April 9, 2011

Do you want to see more than one Sunrise & Sunset Every Day?

Today I read an article that the astronauts and cosmonauts on the International Space Station witness around 15 sunrises and 15 sunsets every day.
The International Space Station orbits about 354 kilometers (220 miles) above the Earth and travels at approximately 27,700 km/hr (17,211 mph), so it takes about 92 minutes to circle the Earth once. For this reason, every 45 minutes the astronauts on-board see a sunrise or a sunset, with a total of 15 – 16 of each every 24 hours.
A space sunset is said to be a spectacular sight that shows in vivid detail the many layers of the Earth’s thin atmosphere. The first layer displays the dark part of the Earth experiencing night. Above that, in deep orange and yellow is the Earth’s troposphere, which contains almost all of the clouds in the sky. Then the pink to white region above the clouds which gradually turn to a light blue band, essentially the stratosphere, is that part of the Earth’s atmosphere where airplanes fly.  The layer above the stratosphere appears as a darker blue band that gradually fades away into the cold dark vacuum of outer space.
·         The in-orbit construction of the International Space Station (ISS) began in 1998 and is scheduled for completion by late 2011. The station is expected to remain in operation until at least 2015. The ISS is operated by Expedition crews of six astronauts and cosmonauts, with the station program mandating maintaining an uninterrupted human presence in space since the launch of Expedition 1 on October 31, 2000, a total of little over 10 years thus far.
·     The International Space Station can be seen from Earth with the naked eye. Since 1998, the International Space Station’s orbit is inclined to the equator by 51.65°. At its most northerly, it is at the latitude of London, England, and at it most southerly, it is over the latitude of the Falkland Islands.
·         More shooting stars can also be seen from the ISS than from a person standing on Earth. The primary reason being that the astronauts have a much wider view of the sky.

·         The clock on the International Space Station ticks about 0.0000000014% slower than an earthbound clock because of relativistic effects. In 2014, the International Space Station is expected to receive the most accurate clock ever launched into space, which is a cesium clock.

·         Due to the weightlessness of space, dust does not settle down, it just floats around. Because of this, astronauts aboard the ISS sneeze about 100 times a day!

·         Another bad thing about living aboard the ISS is that every time someone farts or the like, that air has nowhere to go.  Also, given the tight quarters and limited bathing facilities, body odor tends to be rampant.  There are filters that try to clean up the smelly air, but astronauts frequently report that the first thing you notice when opening the air lock to the ISS is the bad smell. 
·         In April 2001, Dennis Tito became the first ever space tourist. He paid $22 million to stay aboard the ISS for eight days.
·         The record for the longest single stay in space was broken by cosmonaut Valeri Poliakov after he stayed in space for 438 days, 17 hours, 58 minutes, and 16 seconds!
·         Because of the relative speed of the Space Station, each sunrise or sunset aboard that vessel only lasts a few seconds.

Koda Koda Maami

In 60s my uncle used to make fun of me that I am doing “koda koda mami work” whenever I draw some pictures by seeing some magazines or do some projects for my children for their school curriculum. That Mami used to create wall hangings and table top articles from old calendars and pictures available in the house. Those days only scissors, gum and white chart boards were available for affordable price. With that she could do so many artistic and creative wall hangings. The extension of this is nothing but Collage.

A collage is a work of formal art, primarily in the Visual Arts, made from an assemblage of different forms, thus creating a new whole.
A collage may include newspaper clippings, ribbons, bits of colored or hand-made papers, portions of other artwork, photographs and other found objects, glued to a piece of paper or canvas. The origins of collage can be traced back hundreds of years, but this technique made a dramatic reappearance in the early 20th century as an art form of novelty.

Now I continue that “cut and paste” in electronic media viz. in blog.