Showing posts with label subhashitham. Show all posts
Showing posts with label subhashitham. Show all posts

Monday, April 4, 2016

Faith in Seven Fetches Desired Results.

31.देवे तीर्थे द्विजे मन्त्रे देवज्ञे भेषजे गुरो
यादृशी भावना यस्य सिध्दिर्भवति तदृशी
தெய்வம், புண்யதீர்த்தம், ப்ராமணன், மந்த்ரங்கள், ஜோதிடர்கள், மருத்துவர், குரு இவர்களிடம் ஒருவன் எப்படிப்பட்ட நம்பிக்கை வைக்கிறானோ, நம்பிக்கைக்கு ஏற்ற  வெற்றி கிடைக்கும்
32.दुर्जनः परिहर्तव्यो विद्ययाऽलंकृतोऽपि सन् ।
मणिना भूषितस्सर्पः किमसौ न भयंकर: ॥
பாம்பிற்கு மணியால் அலங்கரிக்கப்பட்டாலும் அதன் பயங்கரம் இருக்கும். அதேபோல் கெட்டவர்கள் கல்வியால் மிளிரினாலும் அவர்களை விட்டு விடவேண்டும்.
33.दुर्जनः प्रियवादी नैव विश्वाकारणम्
मधु तिष्ठति जिह्वाग्रे हृदये तु हलाहलम्
தீயவர்கள் ப்ரியமாக பேசினாலும்  நம்பிக்கையற்றவர்கள்;  நாக்கின் நுனியில் தேன் இருக்கும்  மனதிலோ  கொடியவிஷம் உள்ளவர்கள்.
34.दुर्ल्लभं प्रकृतं मित्रं दुर्ल्लभः क्षेमकृत् सुतः
दुर्ल्लभा सदृशी भार्या दुर्ल्लभः स्वजनप्रियः
உண்மையான நண்பன் கிடைப்பது அரிது;
நன்மை செய்யக்கூடிய புத்ரன் கிடைப்பது அரிது
சிறந்த இணையான மனைவி  கிடைப்பது அரிது
இனிய அன்பான உறவினர்கள் கிடைப்பது அரிது
35.दृष्टिपूतं न्येसेत्पादं वस्त्रपूतं जलं पिबेत्।
सत्यपूतम् वदेद्वाचं मनःपूतं समाचरेत् ॥
கண்களால் நன்கு கவனித்து கால்களை எடுத்து வைக்கவேண்டும்
துணியால் வடிக்கட்டி தூய்மையான ஜலத்தை குடிக்கவேண்டும்
உண்மையுடன் கூடிய வார்த்தைகளயே பேசவேண்டும் 
மனதினால் தூய்மையான கார்யங்களயே செய்தல் வேண்டும்
36.धनधान्यप्रयोगेषु विद्यासंग्रहणेषु च ।
आहारे व्यवहारे च त्यक्तलज्ज सुखी भवेत् ॥
தனம் தான்யம் உபயோகிக்கும் போதும், வித்தையை கற்கும் போதும்,
உணவு உண்ணும் போதும், பெரியோர்களிடத்தில் விஷயத்தை க்ரஹிக்கும் போதும், வெட்கத்தை விட்டவன் சுகம் அடைவான்.
37.धनानि जीवितश्चैव परार्थे प्राज्ञ उत्सृजेत्
सन्निमित्ते वरं त्यागो विनाशे नियते सति
வாழ்க்கையில் செல்வங்கள் அழிந்துபோவது என்பது நியதி.
ஆகையால் அதனை கைவிடவேண்டும் படித்தவர்கள் .
மற்றவர்களுக்காகவும் நற்காரியங்களுக்கும் த்யாகம் செய்வதே
சிறந்ததாகும்.
38.धनिकः श्रोत्रियो राज नदी वैद्यस्तु पञ्चमः
पञ्च यत्रनविद्यन्ते तत्र वासं कारयेत्
செல்வந்தன், ப்ராஹ்மணன்,  ராஜா, நதி ஐந்தாவதாக வைத்யன் ஆகிய 
இந்த ஐவர்கள் எங்கு வசிக்கவில்லையோ  அங்கு வசிக்கக்கூடாது
39.धर्म एव हतो जन्ति धर्मो रक्षति रक्षित:
तस्माद्धर्मो न् जन्तव्यो मा नी धर्मो हथोऽवधीत्
தர்மம் கொல்லப்பட்டால் அது நம்மை கொன்றுவிடும்.
தர்மமானது காப்பாற்றப்பட்டால் அது நம்மை காக்கும்.
ஆகையால் தர்மம் கொல்லப்படவேண்டாம். 
தர்மம் நம்மை கொல்லவும் வேண்டாம்.
40.धृति: क्षमा दमोऽस्तेयं शौचमिन्द्रियनिग्रह:
धीर्विद्या सत्यमक्रोधो दशकं  धर्मलक्षणम्
தைர்யம், பொறுமை, தன்னடக்கம், திருடாமை, தூய்மை, புலனடக்கம், அறிவு, கல்வி, உண்மை, கோபமின்மை, என்ற பத்தும் தர்ம லக்ஷணமாகும்.

Friday, April 1, 2016

Oh! Mirror Mirror Show me "who is the most beautiful"

சுபாஷிதம் பகுதி - 3
21.कोकिलानां स्वरो रूपं नारी रूपं पतिव्रताम्
विद्या रूपं कुरूपाणां क्षमा रूपं  तपस्विनाम्
குயில்களுக்கு அதன் குரல் அழகு
பெண்களுக்கு பதிவ்ருதையாக இருப்பது அழகாகும்
அழகற்றவர்களுக்கு அவர்கள் கல்வியே அழகாகும்
தவம் செய்பவர்களுக்கு பொறுமையே அழகு

22.एकेनापि सुवृक्षेण पुष्पितेन सुगन्धिना
वासितं स्यात्वनं सर्वं सुपुत्रेण कुलं यथा
வாசனை நிறைந்த பூக்களையுடைய ஒரே ஒரு நல்ல மரத்தினால் காடு முழுவதும் நறுமணத்தை உடையது போல
நற்குணம் நிறைந்த மகனால் அக்குலமே சிறப்படையும்.
23.कोऽतिभार: समर्थानां किम् दूरं व्यवसायिनाम्
को विदेश: सविद्यानां, क: पर: प्रियवादिनाम्
திறமை உடையவர்களுக்கு கடினமான காரியம் இல்லை
முயற்சி உடையவர்களுக்கு குறிக்கோள் தொலைவில் இல்லை 
கல்வி அறிவு உடயவர்களுக்கு அயல் நாடு என்று ஒன்று இல்லை
ப்ரியமாக பேசுபவர்க்கு மற்றவர்கள் அந்நியர்கள் அல்ல.
24.कोऽर्थ: पुत्रेण जातेन यो न विद्वान् न भक्तिमान्
कानेन चक्षुषा किं वा चक्षु: पीडैव केवलम्
வித்வானாகவோ பக்திமானாகவோ இல்லாத புத்திரன் 
உயிருடன் இருந்தும் என்ன ப்ரயோஜனம். 
கண் இருந்தும் ப்ரயோஜனம் இல்லை. 
கண்கள் குருடாய் இருப்பதற்கு சமம்.
25.कः कालः कानि मित्राणि को देशः कौ व्ययागमौ।
कस्याहं का च मे शक्तिरिति चिन्त्यं मुहुर्मुहु: ॥
எந்தக் காலம், யார் நண்பர்கள், எந்த நாட்டில் இருக்கிறோம்,
வரவு செலவுகள் என்ன, என்னுடைய சக்தி என்ன,
என்பவைகளை அடிக்கடி எண்ணவேண்டும்.
25.क्वचिद्रुष्ट: कविचित्तुष्टो रुष्टस्तुष्ट: क्षणे क्षणे |
अव्यवस्थितचित्तस्य प्रसादोऽपि भयङ्कर:
சில நேரங்களில் கோபமுடையவனாகவும் சில நேரங்களில் மகிழ்ச்சியுடையவனாகவும் கோபமும் மகிழ்ச்சியும் மாறி மாறி நிலையற்ற எண்ணங்களை உடையவரின் அருளும் ஆபத்தானவை
26.गुणैरुत्तमतां याति नोच्चैरासनमास्थितः।
प्रासादशिखरस्थोऽपि काक: किं गरुडायते ?
உயர்ந்த கோபுரத்தின் உச்சியில் இருப்பதால் காகம் எப்படி கருடனாகும் ஒருவன் நற்குணங்களினால் மட்டுமே உயர்ந்த நிலையை அடைகிறான்; உயர்ந்த ஆசனத்தில் அமர்வதால் அல்ல.
27.चलन्ति तारा रविच्न्द्रमण्डलं चलेच्च मेरुविचलेच्च मन्दर: ।
कदादि काले पृथिवि चलेच्च वै चलेन्न धर्म: सुजनस्य वाचिकम्॥
நக்ஷத்திரங்களும் சூரிய சந்த்ர மண்டலங்களும் நிலை மாறலாம். 
மேரு மலையும் அசையலாம் மந்தர மலை மாறலாம்
எப்பொழுதாவது பூமியும் மாறலாம் 
நல்லோர்களின் தர்மமும் வார்த்தையும் என்றுமே மாறாது
28.ताराणां भूषणं चन्द्रो नारीणाम् भूषणं पतिः ।
प्रिथिव्या भूषणं राजा विद्या सर्वस्य भूषणम् ॥
நக்ஷத்திரங்களுக்கு சந்திரன் அணிகலன்
பெண்களுக்கு கணவன் அணிகலன்
பூமிக்கு ராஜா அணிகலன்
கல்வி எல்லோர்க்கும் அணிகலன்
29.त्यज दुर्जनसंसर्गं भज साधुसमागमं।
कुरुपुण्यमहोरात्रं स्मर नित्यमनित्यताम् ॥
தீயவர்களின் சேர்க்கையை விட்டு விடு
நல்லோர்களின் சேர்க்கையை வைத்துக் கொள்
இரவு பகலாக புண்யத்தை செய்
எப்பொழுதும் நிலையின்மையை நினை
30.दानेन पाणिर्नतुकंकणेन स्नानेन शुद्धिर्नतु चन्दनेन।
मानेन तृप्तिर्नतुभोजनेन ज्ञानेन मुक्तिर्नतु मुण्डनेन ॥
கைகள் தானம் செய்வதால் அழகு கங்கணம் அணிவதால் அல்ல
தூய்மை குளிப்பதால் சந்தனம் பூசிக் கொள்வதால் அல்ல
கௌரவத்தினால் த்ருப்தி சாப்பிடுவதால் அல்ல
முக்தி ஞானத்தினால் தலைமுடியை மழிப்பதால் அல்ல

Sunday, March 27, 2016

Seven Mothers of Mankind

சுபாஷிதம் பகுதி - 2
11.अर्थातुराणां न गुरुनं गुरुर्नबन्धु: कामातुराणां न भयं न लज्जा
विद्यातुराणां न सुखं न निद्रा क्षुधातुराणां न रुविर्न रुचिर्नवेला
தனத்தில் ஆசையுள்ளவனுக்கு குருவும் இல்லை பந்துக்களும் இல்லை;
காமத்தில் பீடிக்கப்பட்டவனுக்கு பயமும் வெட்கமும் இல்லை;
வித்தையில் ஆசையுள்ளவனுக்கு சுகமும் தூக்கமும் இல்லை;
பசி உள்ளவனுக்கு ருசியும் இல்லை காலமும் இல்லை;
12.अहिंसा सत्यमस्तेयं शौचर्मिन्द्रयनिग्रह:
एवं सामाजिकं धर्म चातुर्वण्यैऽब्रवीन्मनु:
அஹிம்சை, உண்மை, திருடாமை, தூய்மை, புலனடக்கம் என்ற தர்மங்கள் நான்கு வர்ணத்தாருக்கும் பொதுவானது என மனு கூறியுள்ளார்.
13.आचार: परमो धर्म: श्रुत्युक्त: स्मार्त एव च
तस्माद अस्मिन सदा युक्तो नित्य स्यादोत्मवान्व्दिज:
நல்லொழுக்கங்கள் உயர்ந்த தருமம் என வேதங்களிலும், ஸ்ம்ருதிகளிலும் கூறப்பட்டுள்ளது;
ஆதலால் ப்ராமணர்கள், தான் என்பதை அடக்கிக்கொண்டு அந்த நல்லொழுக்கங்களை எப்பொழுதும் கடைப்பிடித்தல் வேண்டும்;
14.आदौ माता गुरो: पत्नी ब्राह्मणी राजपत्निका
धेनुर्धात्री तथा पृथ्वी सप्तैते मातर: स्मृता:
முதலில் அம்மா பிறகு குரு பத்னி, ப்ராமணரின் மனைவி, அரசரின் மனைவி; மேலும் பசுமாடு, செவிலித்தாய் அவ்வாறே பூமி
எழுவரும் தாயாகச் சொல்லப்படுகிறது.
15.आपदां अथित: पन्था इन्द्रियाणामसंभव:
तज्जय: सम्पदां मार्गो येनेषटं तेन गम्यदाम्
புலன்களை அடக்காமை துன்பத்திற்கான வழியாகும்;
அதனை அடக்கி வெற்றி கொள்ளுதல் வெற்றிக்கு வழியாகச் சொல்லவர். எது விருப்பமோ அவ்வழியில் செல்லலாம்.
16.आप्तद्वेषाद्भवेन्मृत्यु: परद्वेषाध्दनक्षय:
राजद्वेषाद्भवेन्नाशो ब्रह्माद्वेषात्कुलक्षय:
நெருங்கிய மனிதரின் பகையினால் மரணம் ஏற்படும்;
அந்நியர்களின் பகையால் செல்வங்களின் அழிவு ஏற்படும்;
அரசினிடம் பகையால் நமக்கே அழிவு ஏற்படும்;
ப்ராமணனிடம் பகையால் குலத்தின் அழிவு ஏற்படும்.
17.उदारस्य तृणं वित्तं शूरस्य मरणं तृणम्
विरक्तस्य तृणं भार्या नि:स्पृहस्य तृणं जगत्
தாராள மனப்பான்மையுடையவனுக்கு செல்வம் புல்லிற்கு சமம்;
சிறந்த வீரனுக்கு மரணம் புல்லிற்கு சமம்;
விரக்தி அடைந்தவனுக்கு மனைவி புல்லிற்கு சமம் ஆசையற்றவனுக்கு உலகமே புல்லிற்கு சமம்.
18.उद्योहिनं पुरुषसिंहमुपैति लक्षमी: दैवेन देयमितिं कापुरुषा वदन्ति
दैवं निहत्य कुरु पौरुषमात्मशक्त्या यत्ने कृते यदि न सिध्यति कोऽत्रदोष:
முயற்சியுடைய உயர்ந்தமனிதனை செல்வம் சென்றடையும்;
விதியால் கொடுக்கப்படும் என்று தீயவர்கள் சொல்லுவார்கள்;
விதியை விட்டு முயற்சியை தன் சக்திக்கு செய்தல் வேண்டும்; முயற்சி செய்து பலன் தராவிட்டாலும் அது குற்றம் இல்லை.
19.उपकार: परो धर्म: परार्थ कर्म नैपुणम्
पात्रे दानं पर: काम: परो मोक्षो वितृष्णता
உபகாரம் செய்வது உயர்ந்த தருமம்;
திறன்பட வேலை செய்வது உயர்ந்த செல்வம்;
தானம் அடைபவரை அறிந்து ஈதல் உயர்ந்த செயல்;
ஆசை இல்லாமல் இருத்தல் உயர்ந்த மோக்ஷம்.
20.एकेन सुष्कवृक्षेण दह्यमानेन वह्निना
दह्यते हि वने सर्व कुपुत्रेण कुलं यथा
எவ்வாறு நெருப்பினால் ஒரே ஒரு காய்ந்த வ்ருக்ஷத்தினால் காடு முழுவதும் தீயில் எறிந்துவிடுமோ அது போல் தீயகுணமுடைய மகனால் குலம் முழுவதும் அழியும்

Saturday, March 26, 2016

NITHICHANDRIKA - நீதிமொழி

ஸுபாஷிதம் என்றால் நல்ல அழகான, இனிமையான சொற்கள் என்று பொருள்படும். சமஸ்க்ருத மொழியில் விவேகமுள்ள, பாண்டித்யமுள்ள நீதி மொழியின் தொகுப்பினை ஸுபாஷிதம் என்று அழைப்பர். அது ஒரு குறும் கதையாக இருக்கலாம். நல்ல செய்யுளாக இருக்கலாம். உலகில் தொன்மையான, பல மொழிகளுக்கு தாய் போன்ற இம் மொழியில் கி.மு.5000 ஆண்டுகளுக்கு முன்னமே பல பண்டிதர்கள் வாய் வழியாகும், ஒலைச் சுவடிவழியாகவும், சீடர்கள் வழியாகவும் எண்ணிலடங்கா ஸுபாஷிதங்களை நமக்கு வழங்கியுள்ளார்கள். தமிழில் திருகுறள், ஆத்திச்சுவடி, நாலடியார் என்ற பல ஸுபாஷிதங்கள் உள்ளன. அது போன்று விதுர நீதி, கீதை, பஞ்ச தந்த்ர கதைகள், பர்துஹரியின் முன்னூறு செய்யுள்கள், சோமதேவ பட்டாவின் பல செய்யுட்கள், சாணக்கிய நீதி என்று சமஸ்க்ருத மொழியில் அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த வலைத்தளத்தில் மற்றொரு பதிவின் மூலம் பர்துஹரியின் முன்னூரு செய்யுட்களின் பொழிப்புரையினை மற்றுமொரு வரிசையில் வருகின்றன. இந்த வரிசை “நீதிசந்திரிகா” என்ற ஒரு தொகுப்பின் பதிப்பாகும்.
----------------------------------------------------------------------------------------------------------
1.अजरामरवत् प्राज्ञो विद्यामर्थञ्च साधयेत्
गृहीत इव केशेषु मृत्युना धर्ममाचरेत्
கற்றறிந்தவர்கள் முதுமையும், மரணமும் இல்லாதவன் போல்
கல்வியையும் செல்வத்தையும் சம்பாதிக்க வேண்டும். எவ்வாறு என்றால், எமன் தலை முடியைப் பிடிப்பது போல்.
2.अत्यन्त्कोप: कटुका च वाणी,  दरिद्रता च् स्वजनेषु वैरम्
नीचप्रसङ्ग: कुलहीनसेवा,   चिह्नानि देहे वरकस्थितानाम्
அளவற்ற கோபம், கடுஞ்சொல் ஏழ்மை நிலை உறவினர்களிடம் பகை நீசர்களுடன் சேர்க்கை தீயவர்களுக்கு சேவை இவை நரகத்தில் உள்ளவர்களின் உடலில் உள்ள அங்க அடையாளங்கள்.
3.अनभ्यासेन वेदानामाचारस्य च वर्जनात्
आलास्यादन्नदोषाच्च मृत्युर्विप्राञ्चिधांसति
வேதங்களை அப்யாஸம் செய்யாததாலும், நல்ல ஒழுக்கங்களை கைவிடுவதாலும், சோம்பலினாலும், தோஷமுள்ள உணவை உண்பதாலும், எமன் அந்தணர்களை கொல்லுகிறான்.
4.अनभ्यासे विषं विद्या, अजीर्णे भोजनं विषम्
विषं गोष्टी दरिद्रस्य भोजनान्ते जलं विषम्
அப்யாஸமற்ற கல்வி விஷம், ஜீரணமாகாத பொழுது உணவு விஷம், ஏழ்மையில் உள்ளவர்க்கு தீயவர் சேர்க்கை விஷம், உணவின் முடிவில் தண்ணீர் விஷம்
5.अनारोग्यमनायुष्यस्वग्यं जातिभोजनम्
अपुण्यं लोकविव्दिष्टं तस्मात्तत्परिवर्जयेत्
அதிகமாக உண்ணுதல் என்பது ஆரோக்யமற்றது; ஸ்வர்கத்தைத் தடுப்பது; புண்யத்தைக் குறைப்பது; ஆயுளைக் குறைப்பது. உலகத்தோரால் வெறுப்பது; ஆகையால் அதனை விட்டு விடுதல் வேண்டும்
6.अनित्यानि शरीराणि विभवो नैव शास्वत:
नित्यं सन्निहितो मृव्यु: कर्तव्यो धर्मसंग्रह:
உடல் அனைத்தும் நிலையற்றது; செல்வங்களும் நிலையற்றது; எப்பொழுதும் மரணமானது அருகில் இருப்பது; ஆகையால் தர்மகார்யங்கள் செய்யப்பட வேண்டும்
7.अनेकसंशयोच्छेदि परोक्षार्थस्य द्र्शनम्
सर्वस्य लोचनं शास्त्रं यस्य नास्त्यन्ध एव स:
அனைத்து சந்தேகங்களைப் போக்கடிப்பது, தெரியாத கருத்துக்களை காண்பித்துக் கொடுப்பது, அனைத்திற்கும் கண்போன்ற சாஸ்த்ரங்களின் அறிவு; இத்தகைய அறிவு இல்லாதவர்கள் குருடன் போலே.
8.अन्नदाता भयत्राता विद्यादाता तथैव
जनिता चोपनेता च् पञ्चैते पितर: स्मृता:
உணவைஅளிப்பவன், பயத்தைப் போக்குபவனன், கல்வியை அளிப்பவன் பிறப்பிப்பவனன், உபநயனம் செய்விப்பவன்  என்ற ஐவரும் தந்தை என ஸ்ம்ருதி சொல்கிறது.
9.अपमानं पुरस्कृत्य मानं कृत्वा तु पृष्ठत:
स्वकार्यमुध्दरेत्प्राज्ञा कार्यध्वंसो हि मूर्खता
கற்றறிந்த பெரியோர்கள் அவமானத்தை முன்னிட்டு கௌரவத்தை விலக்கி தான் தொடங்கிய செயலை திறம்படச் செயவர்; செயலை அழிப்பது என்பது முட்டாள்தனமாகும்.
10.अभिवादनशीलस्य नित्यं वृध्दोपसेविन:
चत्वारि तस्य वर्धन्ते आयुर्विद्या यशो बलम्
எப்பொழுதும் பெரியோர்களுக்கு சேவை செய்பவது பணிவோடு இருப்பது என்ற நல்ல குணங்கள் இருப்பவனுக்கு ஆயுள், கல்வி, புகழ், பலம் என்ற நான்கும் வளர்கின்றன.