Saturday, October 7, 2017

Bagawathathilakam Brahmasri Ramaswamy Iyengar joined the realm of Sants


நாம ஸங்கீர்த்தனம் என்ற ஒரு யஞ்யத்தை, எந்த ஒரு ப்ரதிபலனையும் எதிர்பார்க்காமல் ஒரு யாகமாய் 1955 முதல் இந்த நீண்ட 62 வருடங்கள் அனுஷ்டித்த ஒரு பாகவத ஸ்ரேஷ்ட்ரான திரு.ராமஸ்வாமி ஐயங்கார், திருவனந்தபுரம் நகரத்தில் ஒளிர்ந்த, நாம ஸங்கீர்த்தன ஆசாரியர், இந்த வருடம் செப்டம்பர் மாதம், 25ம் தேதி திங்கட்கிழமை அன்று ஆசாரியன் திருவடிகளை அடைந்தார்.
எப்பொழுதும் நாமதேவ், முக்தாபாய், ஸோபன், நிவ்ருத்தி, ஞானேஸ்வர், துக்காராம் என்று. இவர்களது பெருமைகளைச் சொல்லி எப்பொழுதும் அபங்களைப் பாடிக் கொண்டிருந்த ப்ரும்மஸ்ரீ திரு.ராமஸ்வாமி ஐயங்கார், அந்த ஸந்த்துக்கள் சமூகத்தில் ஒன்றானார்.
ஏப்ரல் 5, 1925ம் ஆண்டு திருநெல்வேலி ஜில்லாவில் பிள்ளையார்குளம் என்ற ஸ்தலத்தில் ஸ்ரீமான் அடைச்சாணி வானமாமலை ஆச்சாரியருக்கும், திருமதி சேஷம்மாளுக்கும் ஸத்புத்திரனாய் ஜனித்த இவர், பெற்றோர்களின் நல் ஆசியுடன் 1945ம் வருடம் திருவனந்தபுரம் வங்கியில் சேர்ந்து 40 வருடங்கள் நன்கு பணியாற்றினார். வங்கியில் பணியாற்றினாலும் அவர் நாம ஸங்கீர்த்தனத்தை ஒரு நித்ய கர்மானுஷ்டானகளில் ஒன்றாக செய்து வந்தார்.  புதுகோட்டை கோபாலக்ருஷ்ண பாகவதர் வகுத்துக் கொடுத்த நாம ஸங்கீர்த்தன பத்ததியை அனுஷ்டித்து அவரது சிஷ்யபரம்பரைகளில் ஒருவராக ப்ரகாசித்து நாம ஸங்கீர்த்தனம் செய்து ப்ராபல்யமாய் நிலவி வந்தார்ஸ்ரீகல்யாண க்ருஷ்ண பாகவதரிடம் ஜயதேவரின் 24 அஷ்டபதிகளையும் முறையாய் பயின்று அஷ்டபதிகளை பாடுவதில் ஒரு ஜயதேவராய் மிளிர்ந்தார். திருவனந்தபுர சமஸ்த்தானத்தில் ஹார்மோனிய சக்ரவர்த்தியாய் திகழ்ந்த திரு வைத்யநாத பாகவதரிடம் முறையாய் சங்கீதமும் டோலோத்ஸ்வபத்ததியை பயின்று நாம சங்கீர்த்தனத்தை செவ்வனே செய்து வந்தார். இதுபோன்ற குருமார்களின் வழியில் அவர்களது புகழ் அதிகரிக்குமாறு 72 வருடங்களாய் இந்த வேள்வியை நடத்திவந்தார்.
1945ம் வருடம் ஹ்ருஷிகேச சிவானந்த ஆஸ்ரம ஸ்வாமி ப்ரும்மானந்தா Divine Life Society என்ற பக்தியை பரப்பும் ஒரு சேவாஸ்ரமத்தை துவக்கிவைத்து, அதன் முக்கிய பொருப்பாளராய் திரு.ராமஸ்வாமி ஐயங்காரை நியமித்தார். அன்று ஆரம்பித்த இந்த வேள்வியை இன்று வரை மிகவும் ஸ்ரத்தையுடன் சரித்திர புகழ் உள்ளதாய் செய்து வந்தார்.
1955ல் ஸ்ரீவேங்கடேஸ்வர ஐய்யர், திரு ஸ்ரீனிவாசன் போத்தி, ஸ்ரீகேசவன் போத்தி, திரு ஜனார்த்தனன் போத்தி, ஸ்ரீசுப்பிரமணிய ஐய்யர் என்ற முக்கிய ப்ரமுகர்களின் உதவியுடன் திரு.ராமஸ்வாமி ஐயங்கார் ஆரம்பித்த பஜனை மண்டலி இன்றும் சிறப்பாய் நடந்து வருகிறது.
எல்லா வியாழக்கிழமைகளில் அனுமார் கோவிலிலும், எல்லா சனிக்கிழமைகளில் தெற்குத் தெருவிலுள்ள சங்கரமடத்திலும், எல்லா ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீவராகர் சந்நதியிலும், திரு.ராமஸ்வாமி ஐயங்காரால் நாம சங்கீர்த்தனம் இன்றுவரை நடத்தப்பட்டு வந்தது. கார்த்திகை மாதத்தின் முதல் தேதியன்று தொடங்கி 41 நாட்கள் ஸஹஸ்ர நாம ஜபம் மற்றும் நாமசங்கீர்த்தனம் இன்று வரை நடத்தப்பட்டுள்ளது. மார்கழி மாதத்தில் 30 நாட்களும் கோட்டையைச் சுற்றி உள்ள அக்ரஹாரத்தில் வீதி பஜனை செய்யப்பட்டு வந்தது. இந்த 30 நாட்கள் வீதி பஜனை, ராதா கல்யாணத்துடன் பூர்த்தியாகும். இந்த நாம சங்கீர்த்தன வேள்வியை எந்த விதாமான ஆதாயத்திற்கும் அல்லாமல், தனது ஆத்ம த்ருப்திக்காக இன்று வரை நடத்தி வந்த ப்ரும்மஸ்ரீ பாகவத திலகம் திரு.ராமஸ்வாமி ஐயங்காரின் இந்த வேள்வியை, திருவனந்தபுர ஸத்குரு கோபாலக்ருஷ்ண நாம ப்ரசார பஜனை மண்டலி, இவரது ஆசியுடன் இன்றும் தொடர்கிறார்கள் / தொடர்வார்கள்.


Monday, August 7, 2017

My Journey of Nama Sankeerthanam

எனது 60 வருட நாம ஸங்கீர்த்தன அனுபவங்களை இந்தப் பதிவின் மூலம் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன். 
1956-57 களிலில்  திருவல்லிக்கேணி திரு.ராகவாச்சாரி அவர்கள், 14, தெற்கு மாடவீதியில் உள்ள அவர் இல்லத்தில் நடந்த நாம சங்கீர்த்தன குழுவில் நானும்  பங்கு வகித்து, வீதி பஜனைகளில் வலம் வந்த பிராயம். திரு.தாஸ் என்பவர் ஹார்மோனியத்தில் இசை மழை பொழிய, திரு வேணு என்பவர் நந்தி போல ம்ருதங்கம் வாசிக்க, திருவல்லிக்கேணியின் நான்கு மாடவீதிகளில், தெருக்களை அடைத்தவாறு வலம் வந்த நாட்களை சிறிதே எண்ணிப் பார்த்தேன். எனது தந்தை திரு.ராகவன் (ராகஸ்ரீ) வேங்கட சுப்பய்யார் ஸாஹித்யங்களைப் பாடவைத்து எனது நாம ஸங்கீர்த்தன பயணத்தை ஆரம்பித்து வைத்தார். 
மேலும் வெங்கடாசலம் செட்டித்தெருவில் அமைந்த பாண்டுரங்க பஜனை மண்டலியில் நாம சங்கீர்த்தனக் குழுவில் என்னைப் பாடவைத்து, நாம ருசியை அனுபவிக்கக் கற்றுக்கொடுத்தார். திரு.நாட்டண்ணாஜி ராவ், திரு.நாராயண சாஸ்த்ரி, திரு.க்ருஷ்ண ஐய்யர், திரு.சந்தானம் ஐய்யர், பூஜ்யஸ்ரீ ஹரிதாஸ் அவர்கள், திரு.க்ருஷணமூர்த்தி பாகவதர்  என்ற பல ஜாம்பவான்கள் தங்களது சிம்மக் குரலில் பாடி, அந்த பாண்டுரங்கனையே நேரில் கொண்டு வந்து நிறுத்திய ஸ்தலத்தில் நானும் பல வருடங்கள் நாம சங்கீர்த்தனத்தில் கலந்து கொள்ளும் ஒரு ஆன்மீக அனுபத்தை, எனது தந்தை மறைந்த பின், எனது அம்மான் திரு.நாராயண ஐயங்கார் வளர்க்க ஏதுவாக இருந்தார்.  
பூஜ்யஸ்ரீ திரு.நாராயண ஐயங்கார் 1956ல்,  சனிக்கிழமை நாம சங்கீர்த்தனத்தை ஆரம்பித்து, என்னை அதில் ஊக்குவித்து, ஹார்மோனியம் பயில உதவி, இன்றும் அதன் தொடர்ச்சி நடந்து வருகிறது.
பூஜ்யஸ்ரீ திரு.நாராயண ஐய்யங்காரின் 14வது ஆராதனை விழா நடக்கும் இந்தத் தருணத்தில் அவர் அனுபவித்த பல பாடல்களை “YouTube“ல் பகிர்ந்துள்ளேன். 
உங்களுடன் நானும் அனுபவிக்கும் – லக்ஷ்மீ நரசிம்மன். 
Poojyasri Nathamuni Narayana Aiyangar Aaradhanam 
on 8th August 2017 will be between 02.00pm to 7.30pm. 
The live telecast can be seen by entering the following 
"You Tube" link. 
Be blessed by watching the live telecast 
and feel the presence of being with us.

Tuesday, August 1, 2017

Poojyasri Nathamuni Narayana Aiyangar Aaradhana - 08082017

Image result for dattatreya
गुरु ब्रम्हा गुरु विष्णू गुरुः देवो महेश्वरा
गुरु शाक्षात परब्रम्हा तस्मै श्री गुरुवे नमः
-------------------------------------------------
ஸ்ரீகுருப்யோ நம:
நிகழும் ஹேவிளம்பி வருடம் 
ஆடி மாதம் 23ம் நாள்
செவ்வாய்க் கிழமை பௌர்ணமியன்று
Tuesday, August 8th 2017
பூஜ்யஸ்ரீ நாதமுனி நாராயண ஐயங்கார்
அவர்களின் பதினான்காவது ஆராதனை விழா
புதிய எண் 19, பழைய எண் 10, சம்பங்கி தெரு,
மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸர்வஸ்ரீ இல்லத்தில்
நடைபெற உள்ளதுஅன்று தங்களது குடும்பத்துடன்
வந்து குருநாதரின் ஆசியைப் பெறவும்.
======================================

அன்றைய நிகழ்ச்சி நிரல்
மதியம் 02.00 மணி முதல் 4.00 மணி வரை
விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம்
மாலை 04.30 மணி முதல் 07.30 மணி வரை
நாம ஸங்கீர்த்தனம்


गुरु बिना ज्ञान् नहीं ज्ञान् बिना आत्मा नहीं
----------------------------------------------------

Saturday, June 24, 2017

Table showing Shradhdha Thithis - 2017-2018



சிலர் நமது முன்னோர்கள் திதியை அவரவர்களது க்ரஹத்தின் ப்ருஹஸ்பதி சொல்லட்டும் என்று உள்ளனர். நாம் தான் அதில் அக்கரையுடன் இருக்க வேண்டும். பல சமயம் நாம் சரியாக திதியை கணிக்காது, ப்ருஹஸ்பதியை குறை கூறுவோம். அதற்கான காரணங்கள்
1. திதித்துவையம் வரலாம்.
2. சூரியோதயத்திலிருந்து எவ்வளவு நாழிகைகள் அன்றைய திதி உள்ளது என்பதை அறிவதில் தவறாகலாம்.
3. மற்றும் க்ருஷ்ணபக்ஷமா அல்லது சுக்லபக்ஷமா என்ற ஒரு சம்சயம் வரலாம்.
சுலபமாக முன்னதாகவே நாள்களை குறித்து நமது நாட்காட்டியிலோ அல்லது கூகுள் / விண்டோஸ் நாட்காட்டியில் முன்னதாகவே இதனை பதிவு செய்து நம்மை நினைவு படுத்தச் செய்யலாம். இதனை செயவதற்கு முன், நம்மிடம் உள்ள நமது முன்னோர்களின் சர்மஸ்லோகம் எழுதப்பட்ட தஸாஹஸ் கடுதாசியினை பத்திரப் படுத்தி வைத்து குறித்துக்கொள்ளலாம்.

சுலபமாக நாளினைக் குறித்துக் கொள்ள கீழே தரப்பட்டுள்ள அட்டவணை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஸ்ரீபரந்தாமன் பஞ்சாங்கம் அச்சிட்டவர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கலாம்




Tuesday, June 20, 2017

Sri.R.Sundararajan Attained Lotus Feet


குருஜீ பூஜ்யஸ்ரீ நாராயண ஐயங்கார் அவர்களின் மருமான் திரு சுந்தரராஜன்,
 
திங்கட்கிழமை (19.06.2017) அன்று ஆசாரியன் திருவடிகளை அடைந்தார்.

பாகவத ஸ்ரேஷ்டரான இவர், பூஜ்யஸ்ரீ நாராயண ஐயங்கார் வழியில் ஸத்காரியங்களில் மிகவும் ஈடுபாடுடன் இருந்து எல்லோராலும் போற்றப்பட்ட ஒரு எளிமையான, அமைதியான உத்தம சீலர்.


இவரின் முன்னோர்கள் போல் நல்ல ஸாயுஜ்யம் அடைய ஸ்ரீமன்நாராயணனை நாம் எல்லோரும் ப்ரார்த்திப்போம்.


Saturday, April 1, 2017

Ramanavami - துர்முகி வருட ராமநவமி பண்டிகை 2017


“ராம பட்டாபிஷேகம்” என்ற இந்த சாமா ராகப் பாடல் ராகஸ்ரீ” என்ற திரு. ஸ்ரீநிவாச ராகவன் (1910) அவர்களின் படைப்பு.
திரு GN பாலசுப்ரமணியன், ஆதிசேஷ ஐய்யர், ஆண்டவன் பிச்சை, திருபுகழ் மணி இவர்களின் சமகாலத்தவர். திரு ராகஸ்ரீ அவர்கள் நானூறுக்கும் மேற்பட்ட பல க்ருதிகளைப் புனைந்து மெட்டமைத்துள்ளார்.
நாராயணீயத்தின் செய்யுள்களை மூலமாகமாகக் கொண்டு, தமிழில் பல பாடல்களை மெட்டமைத்து பாடியுள்ளார்.  ஆறுபடை யாத்திரைப் பாடல்கள் பல இயற்றி, படி உற்சவத்தின் போது திரு. ஆதிசேஷ ஐய்யர், ஆண்டவன் பிச்சை, திருபுகழ் மணி இவர்களுடன்  திருமதி பூமா நாராயணன், திரு க்ருஷ்ணன் இந்த இருவர்களால் பாடப்பட்ட பல பாடல்கள் இன்றும் “திருவல்லிக்கேணி PTPani & Co.,”  மூலமாக ப்ராபல்யமாக பேசப்பட்டுள்ளது.
2015வது ராம நவமியில், இவரது ராமாயணப் பாடல்  முன்னமேயே இங்கு பதிவு செய்துள்ளேன். ராம பட்டாபிஷேக காட்சியினை நம் கண் முன் நிறுத்தும் இந்தப் பாடலை  இந்த சமயத்தில், திருமதி அம்புஜம் ஸ்ரீநிவாஸ ராகவன் அவர்களின் ஞாபகமாக , எனது தமக்கை திருமதி ரமாரங்கனாதனுடன் இணைந்து  வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.