Tuesday, October 28, 2014

Kandha Sashti - கந்த ஷஷ்டி 2014


இன்று கந்த ஷஷ்டி. ஐப்பசி மாதத்தில் சுக்ல பக்ஷ ஷஷ்டி அன்று முருகப்பெருமான்  சூரனை வதம் செய்த நாள்.  ஆறு படை வீட்டில் ஒன்றான திருசெந்தூர் இன்று விழாக் கோலம் பூணும் நாள். 

எனது தந்தையார் திரு ஸ்ரீனிவாச ராகவன், ராகஸ்ரீ என்ற முத்திரையில் ஐநூருக்கும் மேற்பட்ட பாடல்களைப்  புனைந்து அதற்கு மெட்டு அமைத்துள்ளார். 1958ம் ஆண்டு நடந்த ஆறுபடை யாத்திரையில், திரு.திருப்புகழ் மணி, திரு ஆதிசேஷ ஐயர், திருமதி ஆண்டவன் பிச்சை, பித்துக்குளி முருகதாஸ் இவர்கள் முன்னிலையில் முருகக் கடவுளை மனது உருகி பல பாடல்களைப புனைந்து எனது தமக்கை திருமதி பூமா, எனது அண்ணன் திரு. திருவையாறு க்ருஷ்ணன் இவர்களால் பாடி  அரங்கேற்றினார். அவற்றில் ஒன்றினை இன்று இசைத்து  உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Wednesday, October 22, 2014

Kuruyadhunandhana-Ashtapathi24

कुरु यदुनन्दन चन्दनशिशिरतरेण करेण पयोधरे
मृगमदपत्रकमत्र मनोभवमङ्गलकलशसहोदरे॥१॥
निजगाद सा यदुनन्दने क्रीडति हृदयानन्दने॥
अलिकुलभञ्जनमञ्जनकं रतिनायकसायकमोचने।
त्वदधरचुम्बनलम्बितकज्जलमुज्ज्वलय प्रिय लोचने॥२॥ (निजगाद….)
नयनकुरंगतरंगविलासनिरोधकरे श्रुतिमण्डले
मनसिजपाश विलासधरे शुभवंशे निवेशय कुण्डले ॥३॥  (निजगाद….)
भ्रमरचयं रचयन्तमुपरि रुचिरं सुचिरं मम सम्मुखे।
जितकमले विमले परिकर्मय नर्मजनकमलकं मुखे ॥४॥ (निजगाद….)
मृगमदरसवलितं ललितं कुरु तिलकमलिकरजनीकरे।
विहितकलंककलं कमलानन विश्रमितश्रमशीकरे ॥५॥ (निजगाद….)
मम रुचिरे चिकुरे कुरु मानद मनसिजध्वजचामरे
रतिगलिते ललिते कुसुमानि शिखण्डिशिखण्डकडामरे ॥६॥ (निजगाद….)
सरसघने जघने मम शम्बरदारणवारणकन्दरे।
मणिरशनावसनाभरणानि शुभाशय वासय सुन्दरे ॥७॥ (निजगाद….)
श्रीजयदेववचसि शुभदे हृदयं सदयं कुरु मण्डने।
हरिचरणस्मरणामृतनिर्मित कलिकलुषज्वरखण्डने ॥८॥ (निजगाद….)
அதகாந்தம் ரதிஸ்ராந்தம் அபிமண்டன வாஞ்சயா
ஜகாத மாதவம் ராதா முக்தா ஸ்வாதீன பர்த்ருகா
ராகம் மங்களகௌசிகம்                          தாளம் ரூபகம்
குரு யதுநந்தன சந்தன ஸிஸிர தரேண கரேண பயோதரே
ம்ருக மத பத்ரகம் அத்ரமனோபவ மங்கள கலச ஸஹோதரே

நிஜகாத ஸா யது நந்தனே க்ரீடதி ஹ்ருதயானந்தனே
நந்த நந்தனே பக்த சந்தனே                        - நிஜ

அளிகுல பஞ்ஜனம் அஞ்ஜனகம் ரதி நாயக ஸாயக மோசனே
த்வததர சும்பன லம்பித கஜ்ஜலம் உஜ்வலயப்ரிய லோசனே - நிஜ

நயன குரங்க தரங்க விலாஸ நிரோதகரே ஸ்ருதி மண்டலே
மனஸிஜ  பாஸ விலாஸதரே ஸுபவம்ஸேனிவேஸய குண்டலே - நிஜ

ப்ரமரசயம் ரசயந்தமுபரி ருசிரம் ஸுசிரம் மம ஸம்முகே
ஜிதகமலே விமலே பரிகர்மய நா்மஜன கமலகம்முகே - நிஜ

ம்ருக மத ரஸ வலிதம் லலிதம் குரு திலக மளிக ரஜனீகரே
விஹிதகளங்ககளம் கமலானன விஸ்ரமிதஸ்ரம ஸீகரே - நிஜ

மம ருசிரே சிகுரே குரு மானத மனஸிஜத்வஜ சாமரே
ரதிகளிதே லளிதே குஸுமானி ஸிகண்டி ஸிகண்டகடாமரே - நிஜ

ஸரஸகனே  ஜகனே மம ஸம்பர தாரண வாரண கந்தரே
மணி ரஸனா வஸனா பரணானி ஸுபாஸய வாஸய ஸூந்தரே நிஜ

ஸ்ரீஜயதேவ வசஸி ஸுபதே ஹ்ருதயம் ஸதயம் குரு மண்டனே
ஹரிசரண  ஸ்மரணாம்ருத நிர்மித கலிகலுஷஜ்வர  கண்டனே - நிஜ
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த அஷ்டபதியை ராமகரி ராகத்தில் யதி தாளத்தில் பாடவேண்டும் என்று போடப்பட்டுள்ளது. தென்னாட்டில் மங்களகைசிகம் என்ற ராகத்தில் பாட ஸ்வரப்படுத்தியுள்ளார்கள். காந்தார, மத்யமம் ஸ்வரங்களைப் ப்ரதானமாகக் கொண்டு ஸ்வரப்படுத்தியுள்ளார்கள். ஆரோகணத்தில் “ஸரிகமபமகபதநிஸ்” என்று வக்ரகதியிலும், ஸ்நிதபமகரிஸ என்று அவரோகணத்திலும், மாயாமாளவகௌத்தின் ஜன்யமாக வகைப்படுத்தியுள்ளார்கள். “ஸ்ரீபார்கவி” என்ற தீக்ஷிதரின் க்ருதியின் ப்ரயோகங்களையும், எங்கள் குருநாதர் பூஜ்யஸ்ரீ நாதமுனி நாராயண ஐய்யங்கார் அவர்கள் பஜனை ஸம்ப்ரதாயத்தில் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தபடியும் பாடி முயற்சித்துள்ளேன். பாடியதில் ப்ரயோகங்களில் தவறுகள் இருந்தால் ஜீமெயிலில் குறிப்பிட விழைகிறேன்
நன்றி "ராகஸ்ரீ நரசிம்ஹன்"
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------