Wednesday, November 16, 2016

Ragasri Remembered

ராகஸ்ரீ படைப்புகள் பல.
முருகனுக்கு அவர் சூட்டிய பாமாலைகள் பல.
அவரது நாளான இன்று, அவரை நினைவு கொண்டு, 
அவர் படைத்த இந்த பாடலால் அவரை நாம் வணங்குவோம்.

Sunday, September 25, 2016

Thiru Venkatapathy Iyengar - Centenary Celebrations

எங்களது குருநாதர் பூஜ்யஸ்ரீ நாதமுனி நாரயண ஐயங்காரைப் பார்த்து அளவாளாவ, மற்றும் அவரது ஆசி பெற, பலர், நாங்கள் முன்பு வசித்த வெங்கடரங்கம் பிள்ளைத் தெரு இல்லத்திற்கு வந்ததுண்டு. 1956ம் ஆண்டிலிருந்து அவர் ஸம்ப்ரதாய பஜனையை நடத்தி வந்தார். நாம ஸங்கீதத்தில் பங்குகொள்ளவும் பலர் வந்துள்ளனர். விதவிதமாய் அனுபவங்கள். அவரது ஆகர்ஷண சக்தியால் அவரைக் காண வந்த பலர் அவரை குருவாக ஏற்றுக் கொண்டனர். எங்கள் இல்லத்தில் இருந்தவர்களுக்கு இத்தகைய தொடர்பால் பல அதிசய ஆனந்த அனுபவங்கள்.
எங்கள் குருநாதரின் ப்ரதம சிஷ்யரான (தொலைக்காட்சி முன்னாள் உதவி இயக்குனர்) கலைமாமணி ராமக்ருஷ்ணன் பலரை எங்களது குருநாதருக்கு அறிமுகம் செய்வித்துள்ளார். அவ்வாறு ஒரு நாள், திரு வெங்கடபதி ஐயங்காரை எங்களது இல்ல நாமசங்கீர்த்தனத்தில்  அறிமுகப்படுத்தினார். அவரது கணீர் என்ற குரலும், பாடல்களை கையாள்வதின் லாவகமும் எங்களை ப்ரமிப்பூட்ட வைத்தது. பின்பு அறிந்தோம் அவரைப்பற்றி.  
ஸ்ரீ SPS வேங்கடபதி ஐயங்கார்
(1916 – 2016)
 இன்று திரு வெங்கடபதி ஐயங்காரின் நூற்றாண்டு விழா தக்கர் பாபா பள்ளி அரங்கில் நடந்தது.  Dr.Col. கிருஷ்ணன், ஸ்ரீ.சுப்ரமணியன், Dr.சடகோபன், ஸ்ரீ கண்ணன், ஸ்ரீ.விப்ர நாராயணன் மற்றும் சங்கீத ரசிகர்கள் முன்னிலையில்  திரு ராமக்ருஷ்ணன், திரு வெங்கடபதி ஐயங்காரப் பற்றியும், ஸத்குரு த்யாகராஜர் கீர்த்தனைகளின் சங்கீத பொருள் கலவை பற்றியும், சங்கீதமாக வெளிப்படுத்தினார். ஒர் அருமையான அனுபவம்.

திரு வெங்கடபதி ஐயங்காரைப் பற்றி மின் வலையில் சிக்கிய ஒரு கற்கண்டு.  இவரது மகள் வழி பேரன் திரு விஜை ஆனந்த் ராமானுஜத்தின் ஒரு தொகுப்பு மிகவும் சுவையாகவும், செய்திகள் நிறைந்ததாகவும் உள்ளது.


Monday, September 12, 2016

HAYAGREEVA JAYANTHI - 13th September 2016

Image result for hayagreeva perumal

இன்று “புச்ச ஏகாதசி அல்லது வைஷ்ணவ ஏகாதசி, மற்றும் ஸ்ரவண வ்ருதம் அனுஷ்டிப்பவர்களுக்கான நாள். மேலும் இன்று ஹயக்ரீவ ஜயந்தி கொண்டாடும் ஒரு புண்ணிய வ்ரத தினம். ஒரே நாளில் நாம் ஹயக்ரீவரையும்  வாமனரையும் நமஸ்கரிக்க கிடைத்த தினம். 

ஹயக்ரீவர் என்றாலே நம் எல்லோர் நினவிலும் வருவது திருவஹீந்தபுர தேவனாதரும், “கவிதார்க்கிக ஸிம்ஹம் ஸ்வாமி தேசிகரும் ஆவார்கள்.
மது கைடபன் எனும் அசுரர்கள் படைக்கும் கடவுளான பிரம்மாவிடமிருந்து வேதங்களைப் பறித்துக் கொண்டனர். அத்துடன் பாதாள உலகத்திற்குச் சென்றனர். அதனை மீட்டுத் தரும்படி பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணுவை  வேண்டினார். மதுவும், கைடபனும் படைக்கும் தொழிலை செய்ய ஆசை கொண்டனர். அவர்கள் குதிரை முகம் உடையவர்கள் என்பதால் விஷ்ணுவும் குதிரை முக அவதாரம் எடுத்து அவர்களுடன் போர் புரிந்தார். இந்த ரூபமே ஹயக்ரீவர் என்று அழைக்கப்படுகிறது. அசுரர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார்.

Hayagriva restoring Vedas to Brahma which were taken to Rasatala.jpg

மது, கைடபன் அசுரர்களை அழித்த பின்னும் ஹயக்கிரீவருக்கு உக்கிரம் தனியாதால் லட்சுமி தேவியை அவர் மடியில் அமர வைத்துள்ளனர். இத்திருவுருவத்திற்கு லட்சுமி ஹயக்ரீவர் என்று பெயர். ஹயக்ரீவருக்கு கல்வி கருவாக இருந்தமையால் கல்விக்கு தெய்வமாகவும், லட்சுமி உடனிருப்பதனால் செல்வத்திற்கு தெய்வமாகவும் ஹயக்கிரீவர் வணங்கப்படுகிறார்.
Image result for lakshmi hayagriva

கி.பி. 1480 ஆண்டு காலத்தில் வாழ்ந்த மத்வ குருவான மஹான் ஸ்ரீவாதிராஜர்,  ஹயக்ரீவரை உபாசனைத் தெய்வமாகக் கொண்டவர். அவர் தினமும் ஹயக்ரீவருக்கு படைக்கும் பிரசாதத்தை ஹயக்ரீவரே வந்து உண்பாராம்.
Image result for vadiraja and hayagreeva
எட்டு வயதில் சன்யாசம் பெற்ற பூவராஹர் என்ற ஸ்ரீவாதிராஜர் விஷ்ணுமை ஹயக்ரீவ வடிவத்தில் பூஜித்து அவரின் அருள் பெற்றவர். ஸ்ரீவாதிராஜர் “கடலை பிண்டி என்ற ப்ரசாதத்தை தனது சிரஸித்தில் வைத்து ஹயக்ரீவரை வேண்டி அழைப்பார். அவரும் வாதிராஜரின் அழைப்பை ஏற்று குதிரை வடிவில் வந்து, முன் கால்கள் இரண்டையும் அவரது தோளில் வைத்து அவரது பின்புறத்தில் நின்று உண்பது தினம் நடந்த ஒரு அற்புதம். 
Image result for vadiraja and hayagreeva
அது நிஜம்தானா என்று பார்க்க விழைந்த ஒரு மூடன், இக்காட்சியை கண்ட மறுநிமிடம் அவனது இரண்டு கண்களும் குருடாயிற்று. 
Image result for bhootha raja
வாதிராஜர் ப்ருந்தாவனம், கர்நாடக மாநிலத்தில் சிர்சி என்ற பட்டிணத்தில், “சோதே என்ற கோவிலில் அமைந்துள்ளது. தவளகங்கா என்ற அங்குள்ள குளத்தில், இரண்டு மூலைகளில் தான் நீராடலாம். ஒரு மூலையில் “பூதராஜா இன்றும் இருப்பதாக ஒரு ஐதீகம். இங்கு ஒரு புதுமையான் ஒரு சம்பிரதாயம் உண்டு. கோவிலுக்கு வருபவர்கள் அனைவரும் பூதராஜாவிற்கு தேங்காய் சமர்ப்பிப்பது என்பது ஒரு வேண்டுதலாகும்.



தூய மெய்ஞ்ஞான வடிவமும் ஸ்படிகம் போன்று தூய்மையானவரும் அறிவு யாவற்றுக்கும் ஆதாரமானவருமாகிய ஹயக்கிரீவரை வணங்குகிறேன் எனும் பொருளுடைய ஸ்தோத்திரம்.
"ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே"
'ஓம் தத் வாகீச்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹஸெள ப்ரஸோதயாத்'
'உத்கீத ப்ரணவோத்கீத, ஸர்வ வாகிச்வரேச்வர:
ஸர்வ வேதமயா சிந்த்யா, சர்வம் போதய போதய
ஓம்கார உத்கீத ரூபாய ருக்யஜீர் ஸாம மூர்த்தயே நம:
அஸ்து தேவதேவாய வாஞ்சிதார்த்த ப்ரதாயினே:
வேத வேதாந்த வேத்யாய வேதாஹரணே
கர்மணே ஸர்வாஸ்த்வ மஹாமோஹ பேதினே ப்ரஸ்மணே நம:


பகவான் ஹயக்ரீவர் தென்னிந்தியாவிற்கு மாத்திரம் சொந்தமா என்ன?
வடகிழக்கிற்கும் சொந்தம். அஸ்ஸாமில் உள்ள மோனிகுட் என்ற மலைப் ப்ரதேசத்தில் அமைந்துள்ள “ஹயக்ரீவா மாதவ கோவில் ஒரு தொன்மையான ஒரு வழிபாட்டு ஸ்தலமாகும். கௌகாத்தியிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த மலைப் ப்ரதேசத்தில், ராஜா ரகுதேவா நாரயன் கி.பி.1583ம் ஆண்டில் புனர் அமைக்கப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. பாலா என்ற வம்சத்து அரசர்கள் கி.மு. ஐந்தாவது நூற்றாண்டில் நிர்மாணித்த்தாகவும் ஒரு கூற்று உண்டு. அதன்படி இந்த புனிதத் தலத்தில் தான் புத்தர் முக்தி பெற்றதாகவும் கூறுவர்.

இந்தக் கோவிலில் நரசிம்மர் தான் முதற்கடவுளாக வழிபடுகின்றனர். வரிசையான் யானைகள் சிற்பம் அஸ்ஸாமின் கலைத்திறனை வெளிப்படுத்துகிறது. இங்கு ஹிந்து மதமும் புத்த மதமும் கைகோர்த்து பரிமளிக்கிறது.

Monday, August 29, 2016

FAITH - HTIAF


Faith is like WIFI
IT IS INVISIBLE
BUT IT HAS THE POWER
TO CONNECT YOU
TO WHAT YOU NEED

31.देवे तीर्थे द्विजे मन्त्रे देवज्ञे भेषजे गुरो
यादृशी भावना यस्य सिध्दिर्भवति तदृशी

தெய்வம், புண்யதீர்த்தம், ப்ராமணன், மந்த்ரங்கள், ஜோதிடர்கள், மருத்துவர், குரு இவர்களிடம் ஒருவன் எப்படிப்பட்ட நம்பிக்கை வைக்கிறானோ, நம்பிக்கைக்கு ஏற்ற  வெற்றி கிடைக்கும்.


கடவுளிடம் நம்பிக்கை என்பதற்கு ஒரு நிகழ்வு ஒன்று இன்று நடந்தது. எங்களது குருநாதர் பூஜ்யஸ்ரீ நாதமுனி நாராயணன் ஸ்வாமிகள் பல ஆண்டுகளாக பூஜித்து வந்த “வேல் பிள்ளையார் செய்த அதிசயம், நம்பிக்கை பலனை அளிக்கும் என்ற பழம் சொல்லுக்கு இலக்கணமாக வழிவகுத்தது.

நாங்கள் வசிக்கும் அடுக்கு மனைகளில், ஒரு மனையில் குடியிருப்பவர்; ஒரு நடுத்தர வயதினர்; பொருளாதார ரீதியில் சற்று பின் தங்கியவர்; கடவுள் அளித்ததை நிறைவாகக் கொண்டு வாழ்ந்து வருகையில், அவருக்கு கடவுள் ஒரு சிறிய சோதனையை முன் வைத்தார். திடீரென்று நோய்வாய்ப்பட அவரை நகரத்திலுள்ள ஒரு பெரிய வைத்தியசாலையில் சேர்த்தனர். மூளையில் ஒரு இரத்த அடைப்புள்ளதென்று மருத்துவர்கள் சொல்ல, கவலையில் ஆழ்ந்தனர்.


எங்களுக்குத் தெரிந்த வைத்தியம் “வேல் பிள்ளையார் ஒருவர் தான். அந்த தம்பதியினரும் “வேல் பிள்ளையாரின் விபூதியை உள்ளும் வெளியிலும் உட்கொள்ள, மருத்துவ செலவையும் குறைத்து, நோயின் தன்மையையும் குறைத்து அவர்கள் வாழ்வில் மறுபடியும் ஒரு நல்ல வசந்தம் வந்தார்ப் போல செய்தார் எங்கள் “வேல் பிள்ளையார். பிள்ளையார் சதுர்த்தி இதோ வருகிறது. நாமும் அவரை துதிப்போம்.

Saturday, July 16, 2016

Nathamuni Narayana Iyengar Aaradhanam - 19th July 2016 - நாதமுனி நாராயண ஐயங்கார் ஆராதனை




 शरीरं सुरूपं तथा वा कलत्रं यशश्र्चारु चित्रं धनं मेरुतुल्यं
मनश्र्चेन लग्नं गुरोरङ्घ्रिपद्मे ततः किं ततः किं ततः किं ततः किं ||1
One’s physique may be superb, one’s consort likewise, one’s reputation resplendent and renowned, and one’s riches as high as Mount Meru; yet if one’s mind be not centred upon the lotus feet of the Guru, what then, what then, what then?
कलत्रं धनं पुत्रपौत्रादि सर्वं गृहं बान्धवाः सर्वमेतद्धि जातम्
मनश्र्चेन लग्नं गुरोरङ्घ्रिपद्मे ततः किं ततः किं ततः किं ततः किं ||2
Wife, wealth, sons, grandsons and all such; home and kindred; all these things maybe there; yet if one’s mind be not centred upon the lotus feet of the Guru, what then, what then, what then?
षडङ्गादिवेदो मुखे शास्त्रविद्या कवित्वादि गद्यं सुपद्यं करोति
मनश्र्चेन लग्नं गुरोरङ्घ्रिपद्मे ततः किं ततः किं ततः किं ततः किं || 3
The Vedas with their six limbs and the knowledge of all sciences may be on one’s lips; one may possess the poetic gift and may compose fine prose and poetry; yet if one’s mind be not centred upon the lotus feet of the Guru, what then, what then, what then?
विदेशेषु मान्यः स्वदेशेषु धन्यः सदाचारवृत्तेषु मत्तो न चान्यः
मनश्र्चेन लग्नं गुरोरङ्घ्रिपद्मे ततः किं ततः किं ततः किं ततः किं ||4
“I am honoured in other lands and I am prosperous in my homeland; in the paths of righteous conduct there is none who surpasses me”, thus one may think; yet if one’s mind be not centred upon the lotus feet of the Guru, what then, what then, what then?
क्षमामण्डले भूपभूपालवृन्दैः सदासेवितं यस्य पादारविन्दं
मनश्र्चेन लग्नं गुरोरङ्घ्रिपद्मे ततः किं ततः किं ततः किं ततः किं ||5
 One may be constantly extolled and one’s presence highly honoured by hosts of emperors and rulers of this world; yet if one’s mind be not centred upon the lotus feet of the Guru, what then, what then, what then?
यशो मे गतं दिक्षु दानप्रतापा जगद्वस्तु सर्वं करे यत्प्रसादात्
मनश्र्चेन लग्नं गुरोरङ्घ्रिपद्मे ततः किं ततः किं ततः किं ततः किं || 6
“My repute has travelled in all directions through my philanthropy and prowess; all the things of this world are in my hands as rewards for my virtues”, yet if one’s mind be not centred upon the lotus feet of the Guru, what then, what then, what then?
न भोगे न योगे न वा वाजिराजौ न कान्तामुखे नैव वित्तेषु चित्तं
मनश्र्चेन लग्नं गुरोरङ्घ्रिपद्मे ततः किं ततः किं ततः किं ततः किं ||7
The mind may have turned away from external delights through dispassion and from attainments like Yogic concentration, possessions like horses and the like, the enchanting face of the beloved, in short, the entire wealth of the earth; yet if one’s mind be not centred upon the lotus feet of the Guru, what then, what then, what then?
अरण्ये न वा स्वस्य गेहे न कार्ये न देहे मनो वर्तते मे त्वनर्घ्ये
मनश्र्चेन लग्नं गुरोरङ्घ्रिपद्मे ततः किं ततः किं ततः किं ततः किं ||8
The mind may have lost its charm to live in forests, and likewise in the house; may have lost all desire to achieve whatever; even the concern for the body’s welfare may have been outlived; the most invaluable treasure of the world may not hold any allurement; yet if one’s mind be not centred upon the lotus feet of the Guru, what then, what then, what then?
गुरोरष्टकं यः पठेत्पुण्यदेही यतिर्भूपतिर्ब्रह्मचारी च गेही
लभेद्धाञ्छितार्थं पदं ब्रह्मसंज्ञं गुरोरुक्तवाक्ये मनो यस्य लग्नं ||
Whoever reads, studies and recites this collection of eight verses on Guru and remains devoted and attentive to the sayings of the Guru, he, no matter if he is a holy person, ascetic, king, neophyte, or householder, attains his coveted object, namely the supreme abode of Brahman, the unassailable seat of immortality.



Thursday, June 30, 2016

Shadow and Friendship

आरम्भगुर्वी क्षयिणी क्रमेण लघ्वी पुरा वृद्धिमती च पश्चात् ।
दिनस्य पूर्वार्धपरार्धभिन्ना छायेव मैत्री खलसज्जनानाम्  ॥

ஒருநாளின் முற்பகுதி என்ற காலையில் பெரிதாய் இருந்து க்ரமமாய் சிறிதாகியும்,  பிற்பகுதி என்ற மாலையில் சிறிதாக இருந்து பின்பு வ்ருத்தியடையும் நிழல் மாதிரி, கெட்டவர்கள் நல்லவர்கள் நட்பு அமையும் 
பர்த்துருஹரி என்ற ஸ்மஸ்க்ருத புலவர் 
தனது நீதி ஸஹஸ்ரத்தில் அன்றே சொன்னதை 
மேலை நாட்டவர் இன்று வண்ணமயமாய் 
வார்த்தை ஜாலங்களுடன் கூறுவர்.

Tuesday, April 19, 2016

BAGWAN KRISHNA alone can solve puzzles - Sisupal Vadham

Courtesy "Amar Chitra Katha"
இந்தப் படத்தைக் கண்டவுடன் நம் நினைவில் வருபவை அந்நாளில் நாம் தொலைக்காட்சியில் கண்ட சிசுபால வதம். நம் கண்முன் பார்ப்பது போல் ஒரு நிகழ்வைக் கொண்டுவந்துள்ளது. மொழி ஹிந்தியானாலும் நம்மால் ஒவ்வொரு சம்பாஷணையையும் நம்மால் உணரமுடிகிறது என்றால், காட்சி என்பது நம்மை எவ்வாறு ஈர்க்கின்றது என்பதை அறிந்து கொள்ளலாம். 
உடனே நம் மனதில் எழுபவை.
நல்லதொரு யாகத்தில் சிசுபாலனுக்கு அப்படியரு நிலைமை ஏன் ஏற்பட வேண்டும்? ஜோதிட சாஸ்திர வல்லவனான சகாதேவன்தானே யாகத்துக்கு நாள் குறித்தான்? இப்படியரு உயிர்ப்பலி
நிகழக் காரணமான கெட்ட நாளில், கெட்ட வேளையில் அவன் ஏன் நாள் குறிக்க வேண்டும்? அதே நேரம், சிசுபாலன்தான் முறை தவறி நடந்தான் என்றாலும், தர்மபூமியான யாகசாலையை கண்ணன் ஏன் யுத்த பூமியாக்கி ரத்தம் சிந்த வைக்க வேண்டும்? சிசுபாலனைக் கொல்ல அதுவா இடம்? அதுவா தருணம்? இது தர்மமா?
இப்படியெல்லாம் பல கேள்விகள், தருமன் நடத்திய ராஜசூய யாகம் முடிந்ததுமே எழுந்தன

ஆனால், கண்ணன் அந்தக் கேள்விகளுக்கு அப்போது பதிலளிக்கவில்லை. அதே கேள்விகளைத்தான் ராஜசூயம் நடந்து, பல வருடங்கள் கழித்து உத்தவர் கேட்டார். அப்போது கண்ணன் தெளிவான பதில் தந்தான்.
சிசுபாலன் பிறப்பால் உயர்ந்தவன். வாழ்க்கை அமைப்பாலும், தீய ஒழுக்கங்களாலும் பண்பிழந்தவன். அவன் தாய் நல்லவள். கண்ணனிடம் நன்மதிப்பும் பக்தியும் கொண்டவள். தன் மகன் எப்படியாவது திருந்தி நற்கதி பெற வேண்டும் எனத் தவம் செய்தாள். 'அவன் தவறாக நடந்தாலும், அவனுக்குக் கொடிய தண்டனை தர வேண்டாம்'' எனக் கண்ணனிடம் கேட்டுக் கொண்டாள். 'அவன் நூற்றெட்டு முறை தவறு செய்வதைப் பொறுப்பேன். அதற்கு மேலும் தவறிழைத்தால் தண்டனை தப்பாது' என்று கண்ணன் சிசுபாலனின் தாயிடம் கூறியிருந்தான்.
'அப்படியே என் மகன் சிசுபாலன் தண்டனை பெற்றாலும், அவனை மன்னித்து மோட்ச சாம்ராஜ்யம் நல்க வேண்டும்'' என்று அடுத்ததாக வரம் கேட்டாள் சிசுபாலனின் தாய். விசித்திரமான வரமானாலும், அந்த வரத்தைத் தந்து வாக்களித்தான் கண்ணன்.
இதை நிறைவேற்றுவது எளிதல்ல. தீமைக்குத் தண்டனையும், நன்மைக்கு உயர்வும் நல்குவதே தர்ம நெறி! சிசுபாலனோ நன்மை எதுவுமே செய்யாதவன். அவனுக்கு மோட்சம் கிட்டுவது எப்படி? இதுதான் பிரச்னை.
கண்ணன் ஒருவனால்தான் இந்தப் பிரச்னைக்கு முடிவு காண முடியும். ராஜசூயம் எனும் சிறப்பான யாகத்தில் சிசுபாலன் பங்கு கொள்ளும் வாய்ப்பைப் பெற்றான். முனிவர்கள் ஓதிய மந்திர பலத்தாலும், தூவிய அட்சதையாலும், வழங்கிய ஆசீர்வாதத்தாலும், தெளித்த புனித நீராலும், ஓரளவு புனிதப்பட்டிருந்தான் சிசுபாலன். யாக அக்னியில் தோன்றிய தேவதைகளின் அனுக்கிரகம், அவன் மீதும் விழுந்திருந்தது. சேர்த்த புண்ணியங்களை அவன் கரைத்துவிடும் முன்பே, அவனைக் கரையேற்ற விரும்பினான் கண்ணன். அப்போதுதான் சிசுபாலன் கண்ணனைத் திட்ட ஆரம்பித்தான். அவன் திட்டிய வார்த்தைகளை, தன்னை பூஜித்த மந்திரமாக, - நூற்றெட்டு அர்ச்சனைகளாக ஏற்றுக் கொண்டான் கண்ணன்.
இதன்மூலம் நிந்தனையையே ஸ்துதியாக ஏற்றுக்கொண்டு, அந்தப் புண்ணியமும் சிசுபாலனைச் சேர வழி செய்தான் கண்ணன். காலம் கடந்தால் அவன் மேலும் பாவம் செய்துவிடுவான்; அதோடு, அவன் மோட்சம் செல்லும் தகுதி பெற புனிதமான இடத்தில் உயிர் நீக்க வேண்டும். புனிதமான ஆயுதத்தால் மடிய வேண்டும். மகா சுதர்சனம் அவன் சிரத்தை அறுக்க, அவன் உடல் ராஜசூயமான பூமியில் விழ, அந்தப் புண்ணிய பலனால், அவன் ஆன்மா மோட்சமடைந்தது. தீமைக்கும் நன்மை செய்யவே யாக பூமியை யுத்த பூமியாக்கினான் கண்ணன். உத்தவர் கேட்ட மற்ற கேள்விக்கும் கண்ணன் பதில் தந்தான்.
'ராஜசூயத்துக்கு நாள் பார்த்தவன் சகாதேவனில்லை; கண்ணனேதான்!’ - இதுதான் அந்தப் பதில்.
சகாதேவனுக்கு தன் சாஸ்திரக் கணக்கைவிட கண்ணனின் சங்கல்பக் கணக்கில் நம்பிக்கை இருந்தது. அதனால் கண்ணன் குறித்த நாளையே ராஜசூயத்துக்கு ஏற்பாடு செய்தான்.
'கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், கண்ணன் சொல்வதும் செய்வதுமே மெய்என்ற உண்மையை ஏற்கெனவே உணர்ந்திருந்த உத்தவர், அதனை மேலும் உறுதிப்படுத்திக்கொண்டார்.
-  நன்றி தினமலர் 
-----  நன்றி அமர் சித்ரகதா