Sunday, December 21, 2014

Hanumath Jayanthy - 2014

ஹரி நாமமும் ஹர நாமமும் சேர்ந்ததே ராம நாமம். ஹரியின் அவதாரமான ராமனுக்கு உறுதுணையாக இருக்க ஹரனின் அம்சமாக ஹனுமான் அவதரித்தார். பராசர பட்டர் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் ஸ்ரீராம சரித்ரத்தைச் சொல்லும் நாமங்கள் வருமிடத்தில் தன் வ்யாக்யானத்தில் “அத ம்ருதஸஞ்ஜீவநம் ஸ்ரீராம சரிதம் ப்ரஸ்த்தூயதே” என்றார். இனி மரித்தவர்களையும் பிழைக்கச் செய்யும் ஸஞ்ஜீவினி மருந்து ராமநாமம் என்கிறார். த்யாகராஜர் தனது க்ருதிகள் மூலமாக கோடி ராமநாமங்களைச் சொன்ன பேறு பெற்றார். ராமனைக் காணவேண்டுமென்றால் அனுமனை பஜிப்போம். அனுமனை வரவழைத்தால் ராமர் அங்கு ப்ரஸன்னமாகுவார். இதனை துளஸிதாஸர் மூலம் அறிவோம்.
இன்று ஹனுமத் ஜயந்தி. ராமஜபம் செய்து ஹனுமனை இங்கு வரவழைபோம். இ ங் கு ராமனும் ப்ரஸன்னமாவார். நாராயணீயத்தில் இரண்டு ஸர்கங்கள் மூலம் இருபது ஸ்லோகளால் ராமாயணம் என்ற ரமணீயமான மாலையை நாராயண பட்டத்ரி அருளியதை எனது தந்தையார் “ராகஸ்ரீ” அருமையாக தமிழில் தொடுத்து ரஞ்சகமான ராகங்களின் கலவைகளினால் அதற்கு அழகு ஊட்டியுள்ளார். அதனைப் பாடி உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமர் கோவிலில் 7 அக்டோபர் 2014ல் நடந்த பவித்ர உத்ஸவத்தில் இரண்டாம் நாள் அன்று மாலையில் நடைப்பெற்ற ஹோமத்தின் போது பூர்ணாகுதியின் பொழுது ப்ரதான அக்னி குண்டத்தில் ஹனுமான் ப்ரத்யக்ஷமாக அருள்பாலித்த அற்புதக் காட்சியினை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

Saturday, December 20, 2014

Vyasa Depicts Bagawatha to Sukha - a beginning


Some of my blog followers who can speak and understand tamil but could not read, requested bagawatham translated in English. My sincere thanks to Mr.Sridharan, Yogacharya of KYM, Chennai for his crisp clear translation. The translated version is more interesting than the Tamil version. I am requesting Mr.Sridharan to continue helping me, in bringing out the English version of Bagawatham in future.
-----------------------------------------------------------------------------------------------------------------
Narada, son of Kalavati, attained pure glory by  hearing and singing  the captivating stories of Lord Vasudeva everyday.  He attained that path leading to the lotus feet of Lord Vishnu which Sadhus reach through Jnana.  The mother of the young lad (Narada) died bitten by snake.  After the death of his mother, the boy proceeded in the northern direction. In dreadful forest which was the living place of snakes, owls and jackals, he drank water from a lake and sat under a Peepul tree and started meditating on the Supreme Being as per vedic injunctions.  At that time Lord Vasudeva entered and took place in his mind.  After some time, loosing sight of Him, he became sad and called the Lord.  But he could not see Lord Vasudeva in that life and his last days came.

At the end of Brahma Kalpa, taking back the three worlds when Lord Narayana entered the Yoganidra in the great deluge, the soul of the young man entered the breath of Lord Brahma who wanted to go to sleep.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 सहस्रयुगपर्यन्ते उत्थायेदम् सिस्रुक्ष्त:
मरीचीमिस्रा रुषय: प्राणेप्योहम् च जजिरे
स्रिमथ्भागवथम् 1.6.31
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
As per the calendar of Brahma at the end of 1000 yugas, from the breath of Brahma who rises up from sleep to create, nine sages including Marichi were born.  Then Narada was also born.
देवदत्तामिमाम् वीणाम् स्वरबर्ह्म्मविभूषिताम्
मूर्च्छ्यित्वा हरिकथाम् गायमानस्चराम्यहम्
स्रिमथ्भागवथम्  1.6.33
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Narada started wandering singing the stories of Lord Vasudeva by playing on the Veena which decorated with the Nada Brahmam of Nishadam, etc and given by Lord himself.  After hearing the story of Narda, Vyasa who mind was dispelled of disturbances composed ‘Srimad Bhagavadam’ in the Ashramam called ‘Samyaprasa” which was full of Badari (jujube) trees.
-----------------------------------------------------------------------------------------
यस्याम् वै स्रुयमाणायाम् क्रुष्णे परमपुरुषे
भक्तिरुत्पद्यते सोह पुम्स: शोकमोहभ्यापहा
स सम्हिताम् भागवतीम् क्रुत्वानुक्र्म्य सात्मजम्
शुकम्ध्यापयामास निव्रुत्तिनिरतम् मुनि:

स्रिमथ्भागवथम्  1.7.7,8
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
That story of the Lord (Bhagavadam) which on hearing dispels sorrow, delusion and fear and induces devotion, was instructed to Suka his son by Sage Vyasa.

Sunday, December 7, 2014

Vyasa Depicts Bagawatha to Sukha - a beginning

அங்கு மனோகரமான ஸ்ரீவாஸுதேவனின் கதைகளைக் தினந்தோறும் கேட்டும் கானம் செய்தும் பரிசுத்தமான கீர்த்தியை கலாவதியின் பாலகனான நாரதர் அடைந்தார். எந்த ஞானத்தால் விஷ்ணுபதத்தை ஸாதுக்கள் அடைந்தார்களோ அந்த மார்கத்தை அந்த பாலகன் அடைந்தான். அந்தப் பாலகனின் தாயார் ஒரு நாள் இரவு பாம்பு தீண்டியதால் இறந்தாள். அவளது மரணத்திற்குப் பின் அந்த பாலகன் வடக்குத் திக்கை நோக்கிப் புறப்பட்டான். ஸர்ப்பங்கள், கோட்டான்கள், நரிகள் இவைகளின் இருப்பிடமாக உள்ளதும் மிகக் கோரமான பெருங்காட்டில் ஒரு தடாகத்தில் நீர் அருந்தியபின், அரச மரத்தடியில் உட்கார்ந்து, பரமாத்மாவை மனத்தினால் வேத முறைப்படி த்யானித்தார். அப்பொழுது ஸ்ரீவாஸுதேவன் மெதுவாக அவனது மனத்தினில் அமர்ந்தார். சிறிது நேரம் கழித்து அது மறைந்தவுடன் மிகவும் மனம் வருந்தி அந்த பகவானை அழைக்க, அந்தப் பிறவியில் அந்தப் பாலகன் பகவான் வாஸுதேவனைப் பார்க்க இயலாததால் மரண காலமும் தோன்றிற்று.
ப்ரும்ம கல்பத்தின் முடிவில் இந்த மூன்று உலகையும் தன்னுள் அடக்கிக் கொண்டு ப்ரளய சமுத்திர ஜலத்தில் ஸ்ரீநாராயணன் படுக்கும் பொழுது துயில் கொள்ள விரும்பிய ஸ்ரீப்ரும்மதேவனின் மூச்சுக் காற்றோடு அந்த பாலகனின் ஆத்மா உள்ளே ப்ரவேசித்தது.
-----------------------------------------------------------------------------------------------------
ஸஹஸ்ரயுக பர்யந்தே உத்தாயேதம் ஸிஸ்ருக்ஷத:
மரீசிமிஸ்ரா ருஷய: ப்ராணேப்யோஹம் ச ஜஜ்ஞ்சிரே 
ஸ்ரீமத்பாகவதம்  1.6.31
----------------------------------------------------------------------------------------------------------------
ப்ரும்மாவின் கணக்குப்படி ஆயிரம் யுகங்களின் முடிவில் எழுந்து இந்த அகில் உலகத்தையும் படைக்க விரும்பிய ப்ரும்மாவினது ப்ராண வாயுக்களிலிருந்து மரீசி முதலிய ஒன்பது மகரிஷிகள் ஜனித்தார்கள். பிறகு நாரதரும் ஜனித்தார்.
-------------------------------------------------------------------------------------------------------------
தேவதத்தாமிமாம் வீணாம் ஸ்வர ப்ரஹ்ம விபூஷிதாம்
மூர்ச்சயித்வா ஹரிகதாம் காயமான ஸ்சராம்யஹம்
ஸ்ரீமத்பாகவதம் 1.6.33
----------------------------------------------------------------------------------------------------------------
பகவானால் நேரில் கொடுக்கப்பட்டதும் “நிஷாதம் முதலிய நாத ப்ரும்மத்தால் அலங்கரிக்கபட்டதுமான வீணையை மீட்டிக் கொண்டு ஸ்ரீவாஸுதேவனது சரிதத்தை கானம் பண்ணுகின்றவராய் நாரதர் ஸஞ்சரிக்கத் தொடங்கினார்.
நாரதரது இந்த வ்ருத்தாந்தத்தை கேட்டபின் மனது சஞ்சலம் நீங்கி இலந்தைமர ஸமூகங்களால் அலங்கரிக்கப்பட்ட “சம்யாப்ராஸம்” என சொல்லப்படும் ஆஸ்ரமத்தில் “ஸ்ரீமத் பாகவதம்” என்ற ஸம்ஹிதத்தை செய்தார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ ஸம்ஹிதாம் வை ஸ்ரூயமாணாயாம் க்ருஷ்ணே பரம் பூருஷே
பக்தி ருத்பத்யதே பும்ஸ: ஸோகமோஹ பயாபஹா
ஸ ஸம்ஹிதாம் பாகவதீம் க்ருத்வானுக்ரம்ய சாத்மஜம்
ஸுகமத்யாபயாமாஸ நிவ்ருத்திநிரதம் முனி:
ஸ்ரீமத்பாகவதம் 1.7.7,8
-------------------------------------------------------------------------------------------------------------
எந்த பாகவதக் கதையானது கேட்டபொழிதினிலேயே ஜனங்களுக்கு க்ருஷ்ண பரமாத்மாவிடத்தில் “துக்கம், மோஹம், பயம்” இவைகள் போகக்கூடிய பக்தி ஏற்படுகிறதோ அந்த ஸம்மிதையை பரிசோதனை செய்தும் முற்றும் துறந்த தனது பிள்ளையான சுகருக்கு கற்பித்தார்.

Garuda - King of Birds

நமது பாட்டி தாத்தா நமக்கும் நமது குழந்தைகளுக்கும், நமது பேரக் குழந்தைகளுக்கும் சொல்லும் கதைகளில் முக்கியமானது, “கஜேந்த்ர மோக்ஷம்”.
பாண்டிய கண்டாதி ராஜன் இந்திரத்யும்னன் மலய பர்வதத்தில் பகவானை த்யானித்துக் கொண்டிருக்கும் போது, அகஸ்தியர் அங்கு வர, அவரை கவனியாததால் ஏற்பட்ட சாபம் கஜேந்த்ரனாக அவதரித்து த்ரிகூடமலையில் வருணனுடைய குளத்தில் தனது ஸஹாக்களுடன் இருக்கையில், ஹூஹூ என்ற கந்தர்வன் தேவலர் என்ற மகரிஷியின் சாபத்தால் அங்கு முதலையாக அவதரித்து, கஜேந்திரனின் கால்களைப் பீடிக்கயில், பல வருடங்கள் தனது கால்களை அதனுடைய பிடியிலிருந்து காப்பாற்ற முடியாமல் “ஆதிமூலமே” என்று அறற்றி ஸ்ரீமன் நாராயணன் கருடன் மேல் அமர்ந்து வந்து அவர்கள் இருவருக்கும் மோக்ஷம் அளித்ததாக வ்ருத்தாந்தம்.
---------------------------------------------------------------------
ஸவை ந தேவாஸுர மர்த்ய திர்யங்
ந ஸ்த்ரீ ந ஷண்டோ ந புமான் ந ஜந்து
நாயம் குணம், கர்ம ந ஸன் ந சாஸன்
நிஷேதஸேஷோ ஜயதாத ஸேஷ
ஸ்ரீ மத் பாகவதம்  8-3-24
--------------------------------------------------------------------------
என்று கஜேந்த்ரன் ஸ்தோத்திரம் செய்த்தாகச் சொல்வர். 
சிறுவயதில் இக்கதை நம்மைத்தூங்கவைக்கவும், உணவு உண்ணவும் ஏதுவாக இருந்தது. வயது முதிர்ந்தவுடன் இதனை ஆராய்ச்சி செய்கிறோம்.
  1. யானை 100 வருடங்கள் எவ்வாறு குளத்தில் இருக்கும்.
  2. அதனுடன் சண்டை புரியும் முதலை எவ்வாறு அங்கு வந்தது.
  3. சாபம் என்றால் என்ன, விமோசனம் என்றால் என்ன.
  4. ஆதிமூலமே என்று கூட்டால் கடவுள் எப்படி பறந்து வருவார்.
  5. கருடன் மேல் எவ்வாறு அமரமுடியும். சூரியனது கிரணங்கள் அவர்களை ஒன்றும் செய்யாதா?
  6. கருடன் பாம்புகளை சாப்பிட்டு உயிர் வாழ முடியுமா.
மேலே சொன்ன ஸ்லோகப்படி கடவுள் என்பவன் ஒரு பரம்பொருள். அவன் தேவனும் அல்ல, அஸுரனும் அல்ல, மனிதனுமல்ல, மிருகம், பக்ஷி, புழு, பூச்சி முதலியவுனும் அல்ல. ஸ்திரீயுமல்ல, புமானுமல்ல, ஸத்துமல்ல, அஸத்துமல்ல, இத்தனையும் இல்லாமல் எதுவோ அது தான் பரம்பொருள். 
கருட தண்டகத்தின் சாராம்சம்
கருடன் தான் அமரும் இடமும் வாழும் கூடும் வேதங்களே.
வைகுண்டத்திலிருந்து ஸ்ரீமன் நாராயணனை அழைத்துச் செல்லும் வாகனம். பகவான் அதன் முதுகில் உட்கார்ந்து சத்ரு ஸம்ஹாரம் செய்து பக்தர்களை காப்பாற்றுகிறார். ருத்ரை, சுகீர்த்தி என்று இரண்டு மனைவிகள உடையவர். அவரது இறக்கைகள் முள் போன்று கூர்மையாக உள்ளதால், “இரண்டாகப் பிளந்த நாக்குகளையுடைய பாம்புகளைக்” கொல்ல வசதியாக உள்ளது. அந்த இறக்கைகளே அவருக்கு ஒரு அணிகலனாய் உள்ளது. கருடனுக்கு வெற்றியைத்தருவது அவரது இறக்கைகளே. பெரிய பாம்புகளே அவரது உணவு. ஒரு சமயம் தேவலோகத்திலிருந்து தாயின் அடிமைத்தனத்தைக் காப்பாற்ற அம்ருதத்தை எடுத்து வரும் பொழுது, இந்திரனுடன் சண்டையிட்டு, அவனது வஜ்ராயுதத்தால் ஏற்பட்ட வடு ஒரு ஆபரணாமாக அமைந்த்து. கருடன் உண்மையில் மறு உருவம். ப்ராணா, அபானா, சமானா, உதானா வ்யானா என்ற ஐந்து காற்றுகளின்/வாயுக்களின் உருவம். ரிஷிகளின் நண்பன். உனது இறக்கைகளின் வேகத்தால் கடலில் அலைகள் உண்டாகின்றது. அப்பொழுது ஏற்படும் ஓசை பாதாள லோகத்தில் பூமியைத்தாங்கும் யானைகளின் காதுகளை அடைத்து ஒரு சலனத்தை ஏற்படுத்துகிறது. உனது கால்களில் உள்ள நகங்களும், உனது வலிமையான மூக்கும் எதிரிகளுக்கு பயத்தை உண்டாக்குகிறது. உனது பற்கள் இந்திரனின் வஜ்ராயுதத்தைவிட கூர்மையானது. ஓம் ஸ்வாஹா என்று அக்னியில் கொடுக்கும் ஆஹூதியை பகவான் நாரயணனுக்கு அளிக்கவல்லவன். வாலகியா என்ற ரிஷிகளின் சாபத்திலிருந்து இந்திரனை காப்பாற்றியவர்.


விஞ்ஞான ரீதியாக

 கருடனைப் பற்றின ஒரு தொகுப்பு

Friday, December 5, 2014

Bhopal gas tragedy - 30 years later


போப்பால் பேரழிவு அல்லது போப்பால் துன்பம் டிசம்பர் 3, 1984 ல் இந்தியாவில் உள்ள போபாலில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வளிமக் கசிவினால் (வாயுக் கசிவினால்) ஏற்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளை நினைவுகூறும் ஒரு துன்ப நிகழ்வாகும்.


யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் மீத்தைல் ஐசோ சயனேட் எனும் நச்சு வளிமம் கசிந்ததினால் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். உடனடி உயிரிழப்பாக ஏறத்தாழ 2,259 பேர் நச்சு வளிமம் தாக்கி இறந்தனர். அதற்கடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 8,000 பேர் இறந்தனர். இன்னும் 8,000 பேர் வளிமத்தின் தாக்கத்தினால் ஏற்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர். போப்பால் பேரழிவு உலகில் உள்ள தொழிற்சாலைகளால் ஏற்பட்ட பேரழிவுகளில் மிக அதிகப் பாதிப்பை ஏற்படுத்திய பேரழிவாகக் கருதப்படுகிறது. இதனால் அங்குள்ள பாதிப்புகளை ஆராய 1993 ஆம் ஆண்டு அனைத்து நாடு மருத்துவக்குழு ஆணையம் இங்கு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வுக்குக் காரணமான யூனியன் கார்பைடு இந்தியா லிமிடட் என்ற நிறுவனம் 51% உரிமையுடன் 1969 ல் போப்பாலில் நிறுவப்பட்டதாகும். இதன் உரிமை யூனியன் கார்பைடு கார்ப்பொரேசனுக்கு சொந்தமானதாகும். இதன் 49% உரிமை இந்திய நிர்வாகத்திற்குச் சொந்தமானதாகும். இந்நிறுவனத்தின் முக்கிய குற்றவாளியாக சித்தரிக்கப்பட்ட யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அப்போதைய முதன்மை செயல் அதிகாரி வாரன் அண்டர்சன் இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். விபத்து நடந்தபின் இந்தியாவில் வைத்துக் கைது செய்யப்பட்ட வாரன் அண்டர்சன், அப்போதைய அரசியல் தலையீடுகளால் இந்தியாவை விட்டு கௌரவத்தோடு விமானத்தில் ஏற்றி அவரது தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். [1] பிணையம் பெற்று வெளிவந்த அண்டர்சன் அமெரிக்காவிற்கு திரும்பிய பின் மீண்டும் இந்தியா வர மறுத்தார். அமெரிக்கக் குடிமகனான ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க அரசு மறுத்து வந்தது.செப்டம்பர் 29, 2014 அன்று அமெரிக்காவில் இவர் இறந்தார்.[2]
இந்நிகழ்வுக்குக் காரணமானவர்களை தண்டிக்கக் கோரியும், போதுமான நட்ட ஈடு வழங்கக் கோரியும் தொடர்ந்து மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Bhopal gas tragedy - 30 years later


Tuesday, November 25, 2014

Aaradhrigam by Swami Vivekananda (Aarathi of Ramakrishna Mutt)

Srimad Bagavata advocates the path of Bakthi through nine kinds viz. Sravana, Keerthana, Smarana, Padasevana, Archana, Vandana, Dhaasya Sakhya and Atmanivedana. Out of these nine modes only Keerthana that eaily captivates the minds of all, since it is in the form of Music. To be perfect, such devotional music should have six aspects viz. Sahitya or good text, Sruthi or background of harmoniously tuned musical instruments, Raga or tune, Laya of rhythm, Tala or beat, Bhaavaa or feeling which is brought while singing or hearing the music. Whereas such perfect music, rendered by one endowed with a sweet and rich voice, can enthrall even animals, there is no gainsaying the fact that it does enrapture the minds of devotees of God.
To effect produced by such devotional music, especially at dawn and dusk, is indescribable. It is precisely due to this reason that the singing of the Suprabhatham early in the mornings and Aratrikam hymns in the evenings has been in vougue in many of the temples and places of worship over the centuries.
After establishing the main monastery of the Ramakrishna Math at Belur, Swami Vivikananda introduced certain rituals which have now become tradition in all the branches, too. One of these is a short worship to Sri Ramakrishna at dusk, followed by waving of lamps and other puja materials before the deity to the accompaniment of music. Swamiji himself composed the text of this song and also set it to music. It has now become well known as the ”KHANDANA BHAVA BHANDANA STOTRA” and is sung all over the world in the monasteries of the Ramakrishna Order, during the evening service.
It is singnificant to note here that nowhere in this hymn has Swamini mentioned Sri Ramakrishna by name. The various adjectives he has used are so general that they can be applied to any incarnation or aspect of God. Yet each one of them fits in admirably with the personality of Sri Ramakrishna. While commenting on these, quotations from the scriptures as also incidents from the life of Sri Ramakrishna have been brought in, wherever possible, to elucidate or support them.
My guru Poojyasri Nadhamuni Narayana Iyengar has taught me this aarathi and we are singing in our bajans from 1960s. I started learning playing of harmonium only when I started accompanying this Aarathy recitation. Smt.Nadhamuni Gayatri Bharat has sung this Arathi. As narrated in the introduction if sung with devotion and dedication, this aarathi to God, no doubt, it can enthrall all.

 

Sunday, November 23, 2014

Brahma curses Narada - Narada's various births


“யாதொரு ப்ரும்மம் ஊண்டோ அதனை அறிந்தீர். தருமங்களோடு கூடிய மிகப் பெரிய அபூர்வமான பாரதத்தை செய்துள்ளீர். இருப்பினும் ஏன் உமக்கு இந்தக் கவலை?” என்று நாரதர் வ்யாசரைப் புகழ்ந்தார். வ்யாஸர் அதற்கு பதில் அளிக்கயில் அவர் நாரதரை இரண்டே வரிகளில் எவ்வாறு புகழ்கிறார் என்பதை பின் வரும் ஸ்லோக மூலம் அறியாலாம்.
த்வம் ப்ரியடந்நர்க இவ த்ரிலோகி 
மந்தஸ்சரோ வாயுரிவாத்மஸாக்ஷி
பராவரே ப்ரஹ்மணி தர்மதோ வரதை: 
ஸ்நாதஸ்ய மே ந்யூனமாலம் விசக்ஷ்வ:
“சூரியபகவானைப் போன்று மூன்று உலகங்களையும் சுற்றுகிறவராயும், வாயு பகவானைப் போன்று உள்ளே மூச்சுக் காற்றாய் ஸ்ஞ்சரிக்கின்றவராயும், அதனால் புத்தி வ்ருத்தி அறிந்தவராயும், பரப்ரம்மதிலும், வேதத்திலும், யோகாப்யாஸத்திலும் கரைகண்டவர்” எங்கிறார், 

பின் அவரது கவலையைப் போக்க தனது அவதாரச் சுருக்கத்தை ஐந்து ஆறாவது அத்யாயத்தில் வயாசருக்கு அருளுகிறார்.

ப்ரும்மாவின் மானஸீகப் புத்திரர்கள் ஸனகர், ஸநந்தனர்,ஸநாதனர், ஸனத்குமாரர். ப்ரபஞ்சத்தை விஸ்தரிக்க ப்ராஜபத்யம் செய்யதூண்டினார். அருவருக்கத்தக்க இச்செயலை நாங்கள் செய்யமாட்டோம் என்று சொல்லி நாரயண சரணாரவிந்தத்தை அடையச் சென்றனர். வெகுண்ட ப்ரும்மாவின் கோபக்கனல் ஏகாதச ருத்ரர்களைப் படைத்தது. பிறகு தனது ஒவ்வொரு உருப்புகளிலுருந்தும் ப்ரபமஞ்சத்தின் மூல புருஷர்களான பதின்மரைப் (புலஸ்த்யர், புலஹர்,அத்ரி, க்ருது, மரீசி, அங்கீரஸ், ப்ருகு, தக்ஷர், கர்தமர், வஸிஷ்டர்) படைத்தார். இவர்கள் வளர்த்த ப்ராஜாபத்யம் இன்றும் ப்ரபஞ்சத்தில் நிலை கொண்டுள்ளது. ப்ரும்மாவின் கழுத்திலிருந்து தோன்றியவர் நாரதர். இவர் ப்ராஜாபத்யம் செய்யாது தகப்பனுக்கே உபதேசம் செய்தார். வெகுண்ட ப்ரும்மா சாபம் கொடுக்க நாரதரின் பல அம்சங்கள் நமக்குத் தெரியவருகிறது.

புஷ்கரக்ஷேத்திரத்தில் கந்தர்வன் ஒருவன் சிவனைக் குறித்து தவம் செய்து பரமவைஷ்ணவனான ஒரு பிள்ளையை வேண்டி நாரதரை அடைந்தான். இப்பிறவியில் உபஹர்ணன் என்ற பெயருடன் யௌவனப் பருவத்தை அடைந்தான். கந்தர்வப் பத்தினிகள் அவனிடம் காமமுற்று அவனை அடைய தங்கள் உயிரைத்துறந்து அடுத்த பிறவியில் சித்ரரதன் என்ற கந்தர்வனுக்கு ஐம்பது பெண்களாகப் பிறந்து உபஹர்ணனை மணந்தனர். இவ்வாறு இருந்தும் ஹரிபக்தியை விடாது கையில் வீணையுடன் ஹரிநாமத்தை சொல்லியவண்ணம் இருத்தார். ஒருசமயம் ப்ரும்மாவின் சபைக்குச் செல்ல அங்கு ரம்பை இவரைப் பார்த்து மோஹித்து நாட்டியத்தை பாதியில் நிருத்தியதால் பூவுலகில் வேளாளனாகப் பிறக்குமாறு சாபத்துடன் பூவுலகை அடைந்தார்.

கன்யாகுப்ஜத்தின் அரசனான ஆயனுக்கும், கலாவதிக்கும் மகனாய்ப் பிறந்தார். பஞ்சத்தால் வாடிய அந்த நாட்டைல் இவர் பிறந்தவுடன் மழை பெய்து பஞ்சம் நீங்கியதால் இவருக்கு நாரதர் என்ற பெயர் சூட்டினார்கள். நாரம் என்றால் ஜலம் என்ற பொருள். நாரதன் என்றால் ஜலத்தைக் கொடுத்தவன் என்று பொருள். நாரதர் ஐந்து வயது பாலகனாய் இருந்த போது அந்தணர்கள் பலர் வந்தனர் அப்போது ஆயன் கலாவதி தம்பதிகள் அதிதி பூஜை செய்தனர். அதன் எஞ்சிய உணவை நாரதன் உட்கொண்டதாலும், அவர்கள் உபதேசித்த விஷ்ணு மந்திரப் ப்ரயோகத்தாலும் பழைய நாராயண பக்தி மேலிட அவர்களுடன் கானகம் சென்றார்.  

Sunday, November 16, 2014

Satyavathi alias Vasavi - Raj Matha of Kuru Dynasty


"த்வாபரே ஸமனுப்ராப்தே த்ருதீயே யுகபர்ய்யே
ஜாத: பராஸராத் யோகீ வாஸவ்யாம் கலயா ஹரே:"
ஸ்ரீமத்பாகவதம் ஸ்கந்தம் 1 அத்தியாயம் 4 ஸ்லோகம் 14
-----------------------------------------------------------------------------------------------------------
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சத்தியவதி மகாபாரதக் கதையில் வரும் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் கொள்ளுப்பாட்டி ஆவார். இவர் உபரிசரன் என்ற மன்னனின் மகள். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் கொள்ளுப்பாட்டன் சாந்தனுவின் இரண்டாவது மனைவி. வேதங்களையும் மகாபாரதத்தையும் தொகுத்தவருமான வியாசரை இளவயதில் பெற்றெடுத்தத் தாய். மிகப் பெரிய குரு வம்சத்தின் இராஜமாதா.

உபரிசரன் ஒரு நாள் வேட்டை முடிந்து ஒரு மரத்தின் அடியில் ஓய்வு எடுத்த போது தன் மனைவியோடு இன்பமாக இருப்பது போல் நினைத்துக்கொள்ள உடனே அவரிடமிருந்து விந்து வெளிபட்டுவிடவே அதை வீணாக்க மனம் இன்றி ஓர் இலையில் விட்டு ஒரு கிளியிடம் கொடுத்து தன் மனைவியிடம் கொடுக்கக் கேட்டுக் கொள்ள, அதை எடுத்துக் கொண்டு கிளி பறந்த போது கிளியை ஒரு பருந்து தாக்கிவிட, இலையிலிருந்த விந்து கடலில் விழுந்து விட, அதை ஒரு மீன் உண்டு விடுகிறது. அந்த மீன் பிரம்மாவின் சாபத்தால் மனித குழந்தைகளைப் பெறும் வரை மீனாக இருந்த அப்ஸர கன்னிகையாகும்.

சில நாட்களுக்குப் பின் செம்படவ மீனவர்கள் அந்த மீனை பிடித்தபோது அதன் வயிற்றில் ஆணும், பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் இருக்கக் கண்டு மன்னன் உபரிசரனிடம் கொடுத்தனர். ஆண் குழந்தையை எற்றுக் கொண்டு பெண் குழந்தையை மீனவர்கள் வசம் வளர்க்க கூறிவிட்டார். அந்த மீனவத்தலைவன் சத்தியவதி என்றே அழைத்து வந்தான். அவளிடமிருந்து மீன் வாடை வீசியதால் மத்ஸ்யகந்தா எனப் பெயரிட்டு கிண்டலாக கொஞ்சுவான்.


மத்ஸ்யகந்தா கங்கையின் இக்கரையிலிருந்து எதிர்க் கரைக்கு படகில் மக்களை ஏற்றியும், எதிர்கரையிலிருப்பவர்களை இக்கரைக்கும் ஏற்றிச் செல்வாள். ஒரு நாள் படகில் முனிவர் பராசரர் பயணம் செய்தார். பாதி பயணத்தின் போது சத்தியவதியின் மீது மோகம் கொண்டு படகைச் சுற்றி பனிப் படலம் ஏற்படுத்தி யாரும் அறியாமல் தாயாகிப் பின்னர் கன்னியும் ஆகி விடுவாய் என்றும் அவளிடமுள்ள மீன் வாடையும் போகுமென்றும் உறுதியளித்தார். சத்தியவதி உடன்படவே அவரது தந்திரவலிமையால் படகு எதிர்கரையை அடையும் முன் மத்ஸயகந்தா தாயாகியும், பின் கன்னியும் ஆனாள். படகு பயணத்தின் போது மத்ஸ்யகந்தாவுக்கும் பராசர முனிவருக்கும் பிறந்தவரே கிருஷ்ண த்வைபாயனன் என்ற வியாசர் ஆவார். இவரை சத்தியவதி யமுனை ஆற்றின் ஒரு தீவில் பெற்றெடுத்தார். பின்னாளில் இவரே மகாபாரதத்தை எழுதினார். இச்சம்பவத்திற்குப் பின் மத்ஸ்யகந்தாவின் புதிய வாசனை மிகுந்த உடல் அத்தினாபுரத்தின் அரசரான சாந்தனுவை ஈர்த்தது. சத்தியவதியை மணந்துகொள்ள விரும்பினார். மணம் செய்துகொண்டால் தனது பிள்ளைகள் நாடாள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் சத்தியவதி சந்தனுவை மணம் செய்துகொண்டார். சித்திராங்தனும், விசித்திரவீரியனும் இவர்களுடைய மகன்கள் ஆவர்.

Swathi Thirunal's Compositions in Hindustani Music

In Hindustani music, a gharānā is a system of social organization linking musicians or dancers by lineage or apprenticeship, and by adherence to a particular musical style. A gharana also indicates a comprehensive musicological ideology. This ideology sometimes changes substantially from one gharana to another. It directly affects the thinking, teaching, performance and appreciation of music.

The word gharana comes from the Hindi word 'ghar', which means 'family' or 'house'. It typically refers to the place where the musical ideology originated; for example, some of the gharanas well known for singing khyals are: Agra, Gwalior, Indore, Jaipur, Kirana, and Patiala.

Justice Shri V R Krishna Iyer while unveiling the portrait of Sri Swathi Thirunal Maharaja at Sree Karthika Thirunal Theatre, on 7th May 1974 at Thiruvananthapuram delivered a speech with a tribute to the Maharaja as National Integrator.  He gave a vivid picture about his interest in Hindustani music and praised his compositions.

Maharaja as National Integrator. 

"Now, Swati Tirunal was, as I mentioned in the same hall on a former occasion, a great integrator.  We have today plenty of talk about National Integration.  Just three days ago, I think it was on the 4th, the day after the Courts closed, I went to Pilani, Birla’s Institute and was requested to speak on National Integration.  And all that I could tell them was, if we could find some mehod of arresting a little, the forces of national disintegration, we would have achieved much; because everything that is happening is fissiparous in its essence and nothing that is happening is pointing towards a hopeful omen in regard to national unity and integration.  This formed the burden of my soul-I concluded saying: “With these discouraging words let me conclude honestly.” Now this is what I had to tell the Pilani young men and women."

Maharaja's own Gharana.

"And yet long ago in Travancore there was a Prince whose duties did not oblige him to learn Hindustani – nay the Britishers might have induced many Princes in this country to acquire some little knowledge of English. Of course,  Swati Tirunal had studied English too,  but he mastered Hindustani and composed songs in Hindustani.  He mastered cultivated himself in the system of Hindustani music so as to produce compositions in its stylized forms.  They are very different from our kriti. For instance few in the North know what is a kirtana or Jaweli; on the other hand few here may bother to know what is gazzal or thumri.  But here was the royal composer whose vision had encompassed the entire country including upper India and so he studied the languages of the people of that region; he studied the forms of art of North India and went to the extent – shall I say to a daring extent – of composing Hindustani songs in their styles and forms – highly stylized are those musical patterns, which could really be popularized among Hindustani musicians.  As a matter of fact, it is inadequate homage to the Maharaja Swati Tirunal that his votaries should be only South Indians or his compositions should be sung only by South Indian artistes.  He composed pieces in Hindustani music, his repertoire of compositions  includes Marathi songs and there is obvious justification for us to persuade our brethren in those areas to render Swati songs.  Kumara Gandharva, for instance, sings so enchantingly.  If only we request men of that musical stature to sing some songs of Swati Tirunal composed in Marathi; if we appeal to some of the ustads of North India and persuade them to sing some of the Hindustani Kritis by Swati Tirunal, I suppose we would have laid the aesthetic foundation for national integration and exchange for stronger than the propagadist vapourisings of politicians. After all, culture is the strongest bond between people.  These days after Semmangudi popularised Swathi Tirunal’s songs, many of his disciples and other artistes have taken to singing in every music concert a song or two of Swati Tirunal.  Indeed, dancers who perform Bharatha natyam pick up a song or two of Swati Tirunal for abhinaya, because they lend themselves to expression of exquisite emotion on the stage with considerable effect.  Only when we succeed in including at Hindustani music concerts, Swati Tirunal compositions in their language and art form then I suppose we would have done justice to the prince composer.  I would not be satisfied with holding mere amateur competitions on the compositions of Swati Tirunal among Malayalis and Tamilians.  In fact   I must confess when we arranged music competitions in Delhi, the competitors or the entrants were some Malayalis and a larger number of Tamils.  I would consider this adventure to be a happy cultural conquest, only when we win the hearts of our friends in Delhi, the “assal” Delhivala, the Utharpredeshvala, the Rajasthani, the Maharashtrian.  They must come to take and start rendering Swati songs even as our vocalists sing meera bhajans and other Hindustani pieces.  This two-way process would really start a Swati Tirunal movement spread over the whole country.  This cultural expansion is, I suppose, the best tribute to the hero whose likeness I have just unveiled.  Of course, Sri Vaidyanatha Aiyer has made a magnificent contribution to popularising Swati Tirunal songs.  We have – as part of this pan-Indian programme, to undertake considerable research.  Research has been done by Muthayya Bhagavathar, Semmangudi and others.  Now there are collections of Swati Tirunal’s songs, which are available.  This treasure house has been thrown open and in that publication process, what you might call the communication gap has now been eliminated to some extent by the efforts of men like Sri Vaidyanatha Aiyer.  The next stage which is equally important is in introducing Swati Tirunal’s Hindustani compositions to the real North Indian musicians and to the North Indian audience.  If we do that and only then - a proper appreciation of the prince’s aesthetic personality, in its lustrous fullness would emerge.  I salute this great Indian. "

"Sangita Acharya" Thiruvaiyaru Krishnan has rendered the following Swathi Thirunal Kritis during  "Swathi Thirunal Maharaja Festival concert 2002" at Los Angeles. Sarvasri Krishnan Kutty on Violin, Vadiraja Bhat on Mridangam, Kotecha on tabla and Nookala Kamesh on Kanjira accompanied him for this concert.









Vyasa's Paridosha

ப்ரவசனம் அல்லது கதை சொல்லுவது என்பது ஒரு கலை. வேதகாலம் தொட்டு இன்றுவரையிலும், அன்னை பரிவுடன் சோறு ஊட்டுதல் தொடங்கி முதிய வயதில் மரணத்தை எதிர்பார்த்து பகவானின் நாமத்தில் ஈடுபடும் ப்ராயாம் வரையிலும், எல்லாக் காலங்களிலும், எல்லா மதத்தவரும் அவரவர்கள் மத சம்பந்தமான் கதைகளைக் கேட்பதில் எல்லோருக்கும் ஆர்வம் உண்டு.
தீர்க்க ஸத்ரம் என்ற யாகம் செய்த மகரிஷிகளுக்கெல்லாம் முக்கியமானவரும், ரிக்வேதியுமான சௌனக மகரிஷி ஸூதபௌராணிகரை,  பாகவத வ்ருத்தாந்தங்கள் எந்தெந்த யுகங்களில், எந்த இடங்களில், யாது காரணம்கொண்டு தூண்டப்பட்டு வ்யாஸபகவான் பாரதத்தைச் செய்தார் என்று கேட்க, பாகவதத்தின் முதல் ஸ்கந்தத்தில் நான்காவது அத்யாயம் மெல்ல ஸ்வாரஸ்யமாக நடைபோடுகிறது.
வ்யாஸரின் வ்யஸனம்
யுகக் கணக்கில் மூன்றாவதான த்வாபரயுகம் ஏற்பட்ட அளவில், பராசரர், விண்ணில் க்ரஹ ஸஞ்சாரங்கள் நல்ல இடத்தில் இருக்கும் ஒரு அறிய முஹுர்த்ததில் இருக்கும்போது வாஸவியிடத்தில் கூட,  ஞானியான வ்யாஸர் அவதரித்தார். 
ஜாபாலியின் மகளான வாடிகாவிற்கும் வ்யாஸ மகரிஷிக்கும் மகனான சுகர் அவதரித்தார்.வ்யாஸர் சுகருக்குச் சொல்ல; பின்பு சுகர் பரீக்ஷித் ராஜனுக்குச் சொல்ல; பின்பு ஒரு சமயம் பாகவதக் கதையை ஸூதர் சொல்ல சௌனகர் கேட்க என்று வ்ருத்தாந்தம் இன்று வரை தொடருகிறது.
சாதுர் ஹோத்ரம் கர்ம ஸுத்தம் ப்ரஜாநாம் வீக்ஷ்ய வைதிகம்
வ்யததாத் யஜ்ஞஸந்தத்யை வேதமேகம் சதுர்விதம்
ஹோதா, அத்வர்யு, உத்காதா, ப்ரும்மா என நான்கு ரித்விக்குகளால் ஏற்படுத்தப்பட்ட வேத ஸம்பந்தமான கர்மாவை யாகம் செய்யும் பொருட்டு ஜனங்கள் பரிசுத்தப்படுத்துவதற்காக ஒரே வேதத்தை ரிக், யஜுர், ஸாமம், அதர்வணம் என்று நான்காகப் பிரித்தனர்.
ஆனால் முதன் முதலில் வேதங்களை "த்ரை வித்யா" என்றுதான் வழக்கத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
“யக்ஞோபவீததாரண மஹா மந்த்ரஸ்ய
ப்ரஹ்மா ரிஷி: த்ரிஷ்டுப் சந்த:
த்ரைவித்யா தேவதா:”
பில்லி, சூனியம், மாந்திரீகம், மருத்துவம், ராஜநீயம், யுத்தவ்யூகம், அஸ்த்ர ஸஸ்த்ர ப்ரயோகங்கள் முதலியவைகளுக்கு உண்டான மந்த்ரங்கள் அடங்கிய பகுதி அதர்வண வேதம். இந்த மந்திரங்கள் பல தகாத காரியங்கள் செய்யவும் பயன்படுத்தப்பட்டதால் வஸிஷ்டர் இந்த மந்த்ரப் பகுதிகளை ஒதுக்கி ரிக், யஜுர், ஸாம முன்று பகுதிகளை மட்டும் ஆதரித்தார்.
அதர்வண வேதத்தை வேதங்களில் ஒன்றாக கருதாத வழக்கம் வஸிஷ்டர், அவரது மகன் சக்தி, சக்தியின் மகன் பராஸரர் என்ற மூவர் காலத்திலிருந்து வந்துள்ளது. "மஹா அதர்வான்" ஜாபாலிக்கும் பராஸரருக்கும் இதனால் சிறு சிறு பூசல்கள் ஏற்பட்டன. எனினும் ஜாபாலியின் மகள் வாடிகாவை மணந்து நான்கு வேதங்களாக வடிவமைத்தும் இதிஹாஸங்களையும் புராணங்களயும் ஐந்தாவது வேதமாக வ்யாஸர் வகைப்படுத்தியும் செய்தார்.
பைலர் ரிக் வேதத்தையும், ஜைமினி ஸாமவேதத்தையும், வைசம்பாயனர் யஜுர் வேதத்தையும், ஸுமந்து அதர்வண வேதத்தையும், அவரவர் சீடர்கள் மூலமாக வேத விற்பன்னர்கள் அறியச் செய்தனர். மந்தபுத்தியுள்ள புருஷர்களால் அத்யயனம் செய்யுமாறு வ்யாஸர் பல பிரிவுகளாகப் பிரித்தார். வேத அத்யயனம் செய்யத்தகாத மகளிர், நான்காவது வர்ணத்தார்கள் பயனடைய இதிஹாசங்களை இயற்றினார்.
பகவான்  சம்பந்தமான தருமங்கள் யாவையும் அனேகமாக வேதங்கள் இதிஹாசங்கள் மூலமாகச் சொல்லப்பட்டாலும் இவைகளில் சொல்லுவதில் குறையுள்ளதுபோல் கருதி வருத்தத்துடன் ஸரஸ்வதீ நதிக்கரையில் த்யானம் செய்யும் தருவாயில், இவரது வருத்ததைப் போக்க நாரதர் அங்கு ப்ரஸன்னமாகிறார். தேவர்களால் பூஜிக்கபடும் நாரதரை முறைப்படி பூஜித்து தனது வ்யஸனத்தை வெளிப்படுத்தினார். அவர் வருத்தம் தீர நாரதர் தனது அவதார வ்ருத்தாந்தத்தை வ்யாஸருக்கு கூறி ஸ்ரீமத் பாகவதத்தை பின் வரும் சந்ததிகள் அடைய வழி வகுத்தார்.