Saturday, December 26, 2009

The Sixer !! - Guru

‘When I had ego, guru was not there. I attained a guru, ego vanished. The path of love is narrow. It cannot accommodate both ego and God in one place ! This is the doha of Kabir.


1. What can I give in return,so great is the Name of  Ram?
    What gift of mine could please the Guru?
    The wish remains [unfulfilled] in my heart
    No bounty equal to spiritual awakening,
    There is no greater Benefactor than Hari;
    No community equal to that of Hari's devotees.
3. If the Guru be blind the disciple is born blind:
   When the blind lead the blind both fall into well!
4. I was drowning but I was saved
    when the Guru's wave rose up;
    I saw the vessel fall to pieces
    and I myself jumped clear!
5. To find the Guru is a great boon: without Him, you are lost,
    As the moth attracted by the lamp's flame
    falls into it in full knowledge! .
6. Maya is the Lamp, man is the moth,
    circling arround [the flame], he falls:
   Says Kabir, thanks to the Guru's wisdom; a few are saved.

Friday, December 18, 2009

எது அழகு?

ஒரு தமிழ் ஆர்வலர் தனது இல்லத்  திருமண அழைப்பிதழில் இதனை வெளியிட்டிருந்தார். 
இதனைப் பார்பதும் அழகு; படிப்பதும் அழகு 



Horseman without saddle and stirrup iron


Sir Thomas Monroe sculpture which I mentioned in my previous post dated 16th December 2009, you can see that horseman holding the reins without the saddle. Assuming that he is sitting on a saddle with fewer amenities, he is not resting his legs on stirrup iron which normally a horseman will do. Being an Englishman of 18th century and also a good horse man how come his stature has been depicted without proper saddle and added to that the legs are not resting in stirrup iron.  Probably just to attract our attention whether they have done this?

Thursday, December 17, 2009

Your views ?



I enjoyed this drawing. Kindly post what you feel by seeing this art work. Whether it conveys any message for us and for the mankind.

Hanumath Jayanthi

For Hanumath Jayanthi, the following article came in Dinamalar. 
(double click this picture for better viewing)


உணர்ச்சி பூர்வமான ஒரு உண்மை ஆங்கிலக் கடிதம்


(double click this picture for better viewing)

Wednesday, December 16, 2009

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா
இருநுறு ஆண்டுகளுக்கு முன் சென்னையின் கவர்னராக இருந்த சர்.தாமஸ் மன்றோ கட்டளை பெயரில் இன்றும் தினமும் திருப்பதி திருமலையில் பொங்கல் செய்து விநியோகிக்கப் படுகிறது என்றால் நம்பமுடிகிறதா. 

The East India Company took over Tirupathi Tirumala temple in 1801. In 1843 the management was handed over to mahants (priests) until, in 1933, the then Madras Legislature promulgated a special act, which put the temple under the management of a Board of Trustees. Sir Thomas Munroe, Governor of Madras Presidency, who believed he was cured of acute stomach pain by the grace of Lord Venkateshwara, created an endowment by gifting the village of Kotavayulu in Chittoor District, for a daily offering of a gangalam (still known as the Munroe gangalam) of pongal.
Something special is there in this sculpture. Do you know that?

Monday, December 14, 2009

Raghukula Bhushana Rajeeva Nayanaa

ரகுகுல பூஷண ராஜீவ நயனா 
ஈஸ்வராம்பா நந்தன சத்ய ஸாயி ராமா
ஜானகி வல்லப லாவண்ய ராமா
நிருபம சுந்தர சுகுணாபி ராமா
பிரசாந்தி நிலயா பாவன தாமா
ஜெய ஜெய ராமா பிரபு ஸாயி ராமா

Sunday, December 13, 2009

வேதாந்தக் கூத்தன்

எல்லா மொழிக்கும் பல சிறப்புகள் உள்ளன. சொற்களை கையாள்வதிலும், சொற்களின் பதங்களை பிரிப்பதிலும் அர்த்தங்கள் வேறுபடலாம். சில சமயங்களில் அனர்த்தமாகவும் முடியும். 

"வேங்கடநாதனை வேதாந்த கூத்தனை
வேங்கடத்துள்ளே விளையாடும் நந்தியை 
வேங்கட மென்றே விரகறியாதவர்
தாங்கவல் லாருயிர் தாமறியாரே "
திருமூலரின் திருமந்திரத்தில் பத்தாவது திருமறை 

மேற் குறிப்பிட்ட பாடலை அப்படியே கையாண்டால் வேங்கடத்தில் உள்ளவர் யார் என்ற கேள்விக் குறியை எழுப்பும். ஆனால் சொல்லைப் பிரித்தால் அதன் உள் அர்த்தம் வெளிப்படும்.  இந்த திருமந்திரத்தில் உள்ள சொல் "வேங்கடநாதனை"  மேலும் "வேங்கடத்துள்ளே" மற்றும் "வேங்கட" என்கின்ற சொற்களை "வெம்" "கடம்"  என்று பிரித்தால் இது சிவனை அல்லவா கூறுகிறது. 
The human body which is continually scorched by the animal heat is compared to a burning ground where siva is eternally dancing. He is also addressed as “Vedhanta Koottan” that is, reveler in “Vedhantha” and “venkatanaadha”.  Those who do not realize the Siva who is continually dancing in their own body are ignorant of the true way of winning Eternal life. (Vem = that which is scorched, gadam=human body).
மனிதனுக்குள் இருக்கும் இச்சை என்கின்ற தீ எரிந்து கொண்டிருக்கும் இடுகாட்டினை ஒத்தது. அங்கு சிவ பெருமான் நடனமாடுவதை இந்த திருமந்திரத்தில் கூறுகிறது. அவரை வேதாந்தக் கூத்தன் என்றும் அழைப்பர். மனிதனின் உள் எரியும் இச்சை என்கின்ற தீயினை அறியாதார் வேதாந்தக் கூத்தனை அறியார். இங்கு வேங்கடம் என்கின்ற சொல்லை "வெம்" "கடம் " என்று பிரித்து அர்த்தம் கொள்ளாவிட்டால், திருவேங்கடம் சர்ச்சைக் குரியதாக மாறிவிடும் 

Friday, December 11, 2009

Chiththa Raja - Sai Geeth

சித்த ராஜா சித்த ராஜா
சித்த ராஜா சித்த ராஜா
பிருந்தாவன ஜெய மங்கள சரணா
சாம்வரி சூரத பிரேமா பரனா
சித்த ராஜா சித்த ராஜா
ரூப மனோஹர முரளி மதுவன
பர்திபுரீச்வர சித்த ராஜா சித்த ராஜா

சங்கீத ஞானம்







தென் இந்தியாவில் எந்த ஒரு கோவிலை எடுத்துக்கொண்டாலும் அங்கு பிரமிக்கத் தக்க வகையில் சிற்பங்கள் அமைந்துள்ளன. சிற்பக்கலையின் திறமையை காட்டுவதற்காக அமைக்கப்பட்டு உள்ளதா அல்லது தெய்வீக ஞானத்தை உள் உணர்த்துகிறதா? இரண்டுமே சரிதான்.  அன்றைய நாளிலிருந்து இன்றுவரை கோவிலின் பின்னணியில் சங்கீதக் கலையின் மூலமாக தெய்வீக ஞானத்தை நமக்கு பெரியவர்கள் உணர்த்தினர். சங்கீதத்தைக் கலையென்று பயிலும் மாந்தர்களுக்கு ஸ்ரீ த்யாகராஜ சுவாமிகள் ஓர் எச்சரிக்கை விடுகிறார்.




ந்யாயான்யாயமு தெலுஸுனு ஜக3முலு
4மாயாமயமனி தெலுஸுனு து3ர்கு3
5காயஜாதி3 ஷட்-ரிபுல 4ஜயிஞ்சு 
கார்யமு தெலுஸுனு4த்யாக3ராஜுனிகி6 (ஸங்கீ3த)
எது செய்ய தகுந்தது, எது தகாது, அநித்தியம் எது, நித்யம் எது, மாயை எது, மாயை அகல வழி எது, ஆறு சத்ருக்களான காம குரோதங்களை ஜெயிக்கும் உபாயம் எது. பகவத் பக்தியே. அதற்கான உபாயம் சங்கீத ஞானமே. பக்தியோடு பாடு என்றார் தியாகராஜ ஸ்வாமி.
தியாகராஜர் அருளிய சங்கீத ஞானத்தை இப்படிப்பருகினாலும் நன்றாகவே உள்ளது.  இந்தச் சுவையை நான் அனுபவித்தேன். நீங்களுமா?









Tuesday, December 8, 2009

Are you more than 50


“Are you now more than 50?  Try to spend some time before computer.  Spend atleast few hours in browsing, hear some soft divine music, watch some videos and pictures. Then only the neurons in the brain cell will start functioning actively which will solve or minimize the sufferings from the deceases. This is being tried in Western Coutries and scientists agree with this fact”.  I read this article in one of the newspaper. Try and be benefited!

Monday, December 7, 2009

Women Are Happier Than Men


Women usually enjoy the things that they do with their time more than men do. Experts found that the biggest negative for women is doing household chores. They spend about 90 minutes in the kitchen  everyday. Women seem more happier and satisfied in their lives than the men. Dr. Patulny tries to find out the reason and believes that men tend to be more socially disconnected because they spend less time with family and friends and are more likely to see themselves as loners.
Read more here about their happiness.

என்னுடைய சங்கீத குருநாதர்

அன்றொரு நாள் காலைப் பொழுது துளசிங்கப் பெருமாள் கோயில் முட்டு சந்திற்கு எதிரே உள்ள வீட்டின் கூடத்தில் சிறியவரும் பெரியவ்ருமாக இருபது பேர் நெருக்கி உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்தனர். சங்கீத கலாநிதி டாக்டர் ராமநாதன் அனுபவித்து இசையை போதிக்க சிஷ்யர்கள் மனம் உருகி அந்த இசையை பயின்று கொண்டிருந்தனர்.  அதன் நடுவே ஒரு சத்தம். பட பட பட பட .... கட கட கட கட .....அங்கு அருகே உள்ள மாடிப் படியில் ஒரு பிளாஸ்டிக் குவளை உருண்டு வந்தது. உடனே அங்கிருந்த ஒரு வயலின் விதுஷியை "இது என்ன தாளம்" என்று வினவி ஒரு குழந்தைத்தனமான ஒரு சிரிப்பு.  மற்றொரு குழந்தை உள்ளே வருகிறாள். உனக்கு இன்று என்ன சொல்லித் தரவேணும் என்று வினவ அந்தக் குழந்தை நெளிந்துகொண்டே சண்டை வரிசை. உடனே அவர் "யாருடன் சண்டை?" உடனே கொல் என்று ஒரு சிரிப்பு. மாஸ்டர் அவர்களும் ஒரு சிரிப்பு.  இன்று எல்லோரும் கல்யாணி ராகத்தில் ஜண்டை வரிசையை பாடலாம். ஆல் இந்தியா ரேடியோவில் பாடும் எ கிளாஸ் பாட்டு விதுஷிகியும் எங்களுடனும் அந்த குழந்தையுடனும்  பாடுகிறார்கள்.
கேட்பதற்கு ரம்யமான பாட்டு. பார்பதற்கு அதை விட ரம்யமான காட்சி. அனுபவிக்க ஒரு தெய்வீகமான ஒரு சூழ்நிலை . ஆஹா இந்த நிகழ்வு இனிமேல் கிடைக்குமா.
அவரைப் பற்றி மேலும் சில தகவல்களை நமக்கு அவரது பெண் கீதா பென்னெட் அவர்கள்  கல்கியில் அளித்த சில தகவல்களை இங்கே பார்க்கலாம்

சிரித்தருள்வாயே - பாடல்


இது ஓர் சங்கீதக் காலம் 
இன்றைய பாடல் "சிரித்தருள்வாயே"
அரங்கேறும் இடம் சென்னை


பாடல்களை புனைந்தவர் கோபுலு 
ராகம் ஹாச்யப்ப்ரியா 
தாளம் குறும்புசாபு

நீயா நானா


ஆண்கள் பேசும் பத்து பாயிண்ட்ஸ் 
1.நீ சொல்றது மூளை கெட்டதனமாய் இருக்கிறது.
2.உப்புச் சப்பு இல்லாத விஷயத்துக்கு கவலைப் படுகிறே.
3.ஒண்ணுமில்லாததை ஊதிப் பெரிசாக்கரே.
4.நீ சொல்றது ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது.
5.நான் அதைச் சொல்லவே இல்லே.
6.ஆனா அந்த அர்த்தத்திலே சொல்லலே.
7.இது இவ்வளவு பிரச்சனையாக ஆக்கி இருக்கவேண்டாம்.
8.இது நியாயமே இல்லே .
9.ஏன் இதை நாம் அனுபவிக்கவேணும்?
10.பேசாம விவாகரத்து பண்ணிக்கலாம்.


பெண்கள் பேசும் பத்து பாயிண்ட்ஸ் 
1.நான் சொல்றதை காதுலே போட்டுக்கவே மாட்டேங்கறீங்க.
2.என்னை புரிஞ்சிக்கவே மாட்டேங்கறீங்க.
3.நீங்க எப்படி ….அப்படிச் சொல்லலாம்.
4.நீங்க நெனைச்ச மாதிரி நான் நினைக்கலே 
5.ஒரு பொண்ணோட இடத்துலே இருந்தாதான் என் ப்ரச்சனைய புரிஞ்சிக்க முடியும் 
6.ஒங்க கூட பேசவே பயமா இருக்கு.
7.……….வீட்டுகாரரெல்லாம் எத்தனை வேலையை இழுத்துப் போட்டுண்டு பண்றார்.
8.நீங்க ஏன் பண்ணலை
9.நீங்க அதை என்கிட்டே ஏன் சொல்லலை.
10.உங்ககூட இனிமே என்னாலே குப்பை கொட்ட முடியாது.


உணர்வுகளுக்கு அதிக இடம் கொடுக்கும் ஆண் மூளைக்கு பெண்ணின் ஒவ்வோர் செயலும் கேலிக்கு உரியதாகி விடுகிறது. உணர்வு ரீதியாக எதையும் எதிகொள்ளும் பெண்ணின் மூளைக்கு ஆணும் தன்னைப்போலவே சிந்திப்பான் என்ற எதிர்பார்ப்பும், அதனால் ஏமாற்றமும் மிஞ்சி சண்டையும் பின் விவாகரத்து வரை கொண்டு செல்லும் விளைவும் ஏற்படுகிறது  உணர்வுகளை எல்லாம் கொட்டித் தீர்த்துவிட்டால் பெண் மனம் அமைதி அடைந்து விடுகிறாள். உணர்வுகளுக்கு அதிக இடம் கொடுக்காமல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது ஆணுக்குப் பிடிக்கும். கவலைப் படவும் ஆதங்கப் படவும் உனக்கு உரிமை இருக்கு. மொதல்ல நீ சொன்னதை யோசிச்சுப் பார்கிறேன். அப்புறம் இதைப்பத்தி ரெண்டுபேரும் பேசுவோம். எனக்கு கொஞ்சம் டைம் கொடு. இது போன்ற வார்த்தைகள் பிரச்சனையை எளிதாக்கும். 
கல்கி இதழிற்காக Dr.A.V.ஸ்ரீனிவாசன் கூற அதனை கற்கண்டாக லக்ஷ்மி மோகன் எழுத்தில் கொடுத்ததை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் 

Friday, December 4, 2009

ராமநாம மகிமை



வீரமணி என்ற அரசன் சிறந்த சிவ பக்தன். மிகுந்த பலசாலி. சிவன் அவனுக்கு நேரே காட்சி தருவதுண்டு. ராமர் அஸ்வமேத யாகம் செய்யும் தருணத்தில் யாகத்தில் விடப்பட்ட குதிரையை எல்லா தேசங்களிலும் பவனி வந்தபோது அனைத்து அரசர்களும் அதை வணங்கினார்கள். அனால் வீரமணி பணிய மறுத்தான்.  குதிரையுடன் வந்த பரதன்,சத்ருக்னன், ஆஞ்சநேயர் என அனைவரையும் எதிர்த்தான். மற்றவர்கள் மூர்சையாகிவிழுந்தபோது ஆஞ்சநேயர் வீரமணியை எதிர்த்து போராடி விரட்டி அடித்தார். வீரமணி பரமசிவனையே அழைத்து வந்து அனுமனிடம் போரிடச்செய்தான். அனுமன் ராம நாமத்தையே துணையாகக் கொண்டதால் ஈஸ்வரனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. முடிவில் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று ஈஸ்வரன் கேட்க அனுமன் "கீழே மூர்ச்சையாகிக் கிடக்கும் உடல்களை பாதுகாத்துக் கொண்டிருங்கள்.  நான் சஞ்சீவி பர்வதத்தை கொண்டுவருகிறேன் என்றார். சிவன் சிரித்துவிட்டு உன்னிடம் உள்ள ராம நாமத்தினாலேயே இவர்களை எழுப்பலாமே என்றார். அனுமன் வெட்கித் தலை குனிந்தார்.
"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
 
திண்மையும் பாபமும் சிதைந்து தேயுமே 
 ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே
 இம்மையே ராமா என்ற இரண்டெழுத்தினால்"  - கம்பர் 

Thursday, December 3, 2009

அனுமனின் வாலின் பெருமை


வாயுகுமாரனின் வாலில் பொட்டு வைத்து வணங்குவதன் பெருமை என்ன?
அனுமன் சூரியனிடம் சிக்ஷை பெற்று பாடம் கேட்டு வலம் வந்த போது மற்ற க்ரகங்கள் சூரியனையும் அனுமனையும் வலம் வந்தன.
இலங்கையில் ராவணன் அனுமனின் வாலுக்கு தீ வைத்தபோது சீதாபிராட்டி வேண்டியதால் வெம்மையும் குளிர்ச்சியாகவே இருந்தது. நெருப்பினால் ஏற்படும் காயங்களிலிருந்து குணம் அடைய அனுமனை ஆராதியிங்கள்.
ராவணனின் சபையில் அனுமன் தன் வாலால் ஏற்படுத்திய சிம்மாசனத்தில் அமர்ந்தார். அமர்ந்து ராவணின் கர்வத்தை அடக்கினார்.
பீமன் திரௌபதிக்காக சௌகந்திமலர் கொண்டுவர சென்ற போது அனுமன் பீமனின் கர்வத்தை தன் வாலின் மூலம் உணர்த்தி அவன் வீரம் பெருக ஆசீர்வதித்தார்.
அனுமனின் பெருமை அவரது வாலைப் போலே நீண்டுள்ளது. 
இந்தப் பெருமைகள் பக்தியில் நான் பக்தியோடு படித்தது. 
அனுமனின் வாலிற்கு மேலும் எத்தனையோ சிறப்புகள் உள்ளன. நீங்களும் இதனுடன் சேர்க்கலாம். 

சன் (ண்) டே சமையல்



நீங்கள் சாப்பாட்டுப் பிரியரா! ஒன்று ஞாயிற்றுக் கிழமைகளில் நீங்கள் உங்களது மனைவியுடன் சேர்ந்து சமையல் செய்வீர் அல்லது நல்ல சிற்றுண்டிச் சாலைக்கு அழைத்துச் சென்று பயன் அடைவீர்கள். ஒரு ஞாயிற்றுக் கிழமையில் ஒரு கணவன் மனைவியிடம் நடந்த சம்பாஷணையை திறன்பட மங்கையர் மலரில் கொடுத்துள்ளார்கள். நீங்களும் என்னுடன் ரசிக்கலாம். 


மேலும் வீட்டுவேலைகளை மனைவியுடன் எவ்வாறு பகிர்ந்து செய்யலாம் என்று இங்கே கொடுத்துளார்கள். படிக்கலாம்; செய்யாலாம்; பயனும் அடையலாம்.

Gana Gana Neela Vadhana Athi Sundara

கண கண நீல வதன அதி சுந்தர
கண கண நீல வதன அதி சுந்தர 
மேகச்யாமள மாதவ முரஹர 
கண கண நீல வதன அதி சுந்தர 
மந்தஸ்மித முக ராதா மனோஹர 
கோவிந்த கோபால நடவர கிரிதர 
மேகச்யாமள மாதவ முரஹர

Murali Ghana Lola Nanda Gopabala

முரளி கான லோலா
முரளி கான லோலா நந்த கோப பாலா
ராவோ ராவோ ராதா லோலா ராதா லோலா
த்ரேதாயுகமுன சீதா ராமுடை 
த்வாபரயுகமுன ராதா லோலுடை
கீதனு த்ராபின தாரக நாமுடை 
யுகயுக மந்துன தகுரூபதாரியை