Friday, January 25, 2013

A Blissful Voyage Beyond Sixty

One of my E-mail Paul, 
explained through his forward about
“The Beauty & The Beast”
After sixty.
In thanking him, I am sharing with you all
who are in 60 or entering 60.
Don't worry about what will happen after you are gone, 
because when you return to dust, 
you will feel nothing about praises or criticisms.
Don't worry too much about your children 
for children will have their own destiny and find their own way. 
Don't be your children's slave.

Don't expect too much from your children. Caring children, though caring, would be too busy with their jobs and commitments to render any help.
Uncaring children may fight over your assets even when you are still alive, and wish for your early demise so they can inherit your properties.
Your children take for granted that they are rightful heirs to your wealth; but you have no claims to their money.

60-year old like you, don't trade in your health for wealth anymore; 

because your money may not be able to buy your health……… 
When to stop making money, and how much is enough 
(hundred thousands, million, ten million)?
Out of thousand hectares of good farm land, 
you can only consume three quarts (of rice) daily; 
out of a thousand mansions, 
you only need eight square meters of space to rest at night.

So as long as you have enough food and enough money to spend, 

that is good enough. So you should live happily. 
Every family has its own problems. Just do not compare with others for fame and social status and see whose children are doing better, etc. but challenge others for happiness, health and longevity…. Don't worry about things that you can't change because it doesn't help and it may spoil your health.

You have to create your own well-being and find your own happiness; As long as you are in good mood, think about happy things, do happy things daily and have fun in doing, and then you will pass your time happily every day. One day passes, you will lose one day; One day passes with happiness, then you gain one day. 

In good spirit, sickness will cure; in happy spirit, sickness will cure fast; 
in good and happy spirit; sickness will never come.

With good mood, suitable amount of exercise, always in the sun, 

variety of foods, reasonable amount of vitamin and mineral intake, 
hopefully you will live another 20 or 30 years of healthy life. 
Above all learn to cherish the goodness around …and FRIENDS…… 
they all make you feel young and wanted"…
without them you are sure to feel lost!!
Wishing you all the best
Please share this with all your friends who are 60 plus;
Those who will be 60 plus after some time;

Tuesday, January 15, 2013

Sivalaya Marathon

சிதம்பரம் நடராஜர் கோவிலின் வாசலில் காவல் தெயவமாக் வழிபடும், இந்த வினோதமான மிருகத்தின் பெயர் “புருஷமிருகம். எகிப்திய வழிபாட்டில் உள்ள “ஸ்பின்க்ஸ் (sphinx) , பெண் புருஷமிருகம் என்று அழைக்கப்படும். 
த்ரிபுவனத்தில் உள்ள வரதராஜர் பெருமாள் கோவிலின் சுவர்களில் இந்த பெண் புருஷமிருக சிலை உள்ளது


மேலே சொன்ன செய்தியான புருஷ ம்ருகத்திற்கும், சிவாலய ஒட்டத்திற்கும் என்ன சம்பந்தம். முதலில் சிவாலய ஓட்டம் என்ன என்று பார்ப்போம்.
மாரதான் ஓட்டம் பற்றி கேட்டுள்ளோம். அதன் இலக்கு 45 கிலோ மீட்டர் தூரம் தான். 
சிவாலய ஓட்டம் பற்றி கேட்டுள்ளீர்களா. அது 100 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். சிவராத்ரி பண்டிகையின் போது குமரி மாவட்டத்தில் உள்ள திருநட்டா சிவத்தலத்தில் தொடங்கி, திருமலை மகாதேவர், திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திகரை, பொன்மனை தீம்பிலாங்குடி, திருபன்றிபாகம், கல்குளம்நீலகண்ட ஸ்வாமி, மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருபன்னிக்கோடு, திருநட்டாலம் சங்கரநாராயணன் கோவில் வரை ஓடி வலம் வருவர். பதினோரு சிவத்தலத்தில் திருநீறு தருவர். திருநட்டாலத்தில் சந்தனம் வழங்கப்படும். 
இந்த ஓட்டம் மூன்று தத்துவங்களைச் சொல்கின்றது. 1. அகந்தை கூடாது. 2. ஹரியும் ஹரனும் ஒன்று, 3. நீதி அனைவருக்கும் சமம். இன்றய காலகட்ட்த்தில் இந்த மூன்றையும் அநேகமாக பலரும் மதிப்பதில்லை. மகாபாரத்தின் ஒரு நிகழ்வு, இந்த செய்தியின் பின்னணியாக உள்ளது.
தருமபுத்திரர் செய்த யாகத்திற்கு, மனிதன் தலையும் புலியின் உடலும் கொண்ட புருஷ ம்ருகத்தின் பால் தேவைப்பட்டது.
புருஷ ம்ருகம் மனிதத் தலையும் புலியின் உடலமைப்பையும் உடையது. அதனைப் பிடித்துவர பீமன் காட்டிற்குக் சென்றான். புருஷ ம்ருகம் ஒரு சிவபக்தை. தனது எல்லைக்குள் வருபவர் எவரானாலும் அவர்களைக் கொன்று தின்ன சிவபிரான் அதற்கு வரம் அளித்திருந்தார். பீமன், புருஷம்ருகம் இருவரது “நான் என்ற கர்வத்தை அடக்க க்ருஷ்ணபிரான் ஒரு யுக்தியைக் கையாண்டார். பீமனிடம் 12 சிவ லிங்கங்களை கொடுத்து அனுப்பினார். “என்னிடம் அகப்படாமல் என்னைத் தாண்டிச் சென்றால் உனக்கு வேண்டியதை தருவதாக ம்ருகம் ஒத்துக் கொண்டது. ஒவ்வொரு தடவையும் பீமன் அந்த ம்ருகத்திடம் பிடிபடும் பொழுதும் ஒரு லிங்கத்தை அங்கே வைக்க, புருஷ ம்ருகம் அங்கே சிவ பூஜையைத் தொடங்கும். பீமனும் அதன் எல்லையை தாண்ட, ஒட வேண்டும். இவ்வாறு பன்னிரண்டு தடவை ஓடி எல்லையை விட்டு வெளியே வர யத்தனித்தான். பன்னிரண்டாவது தடவை எல்லைக் கோட்டிற்குள் அவனது கால் இருந்த்தால், அந்த ம்ருகம் பீமனை பிடித்தது. பீமன் அதன் எல்லையை தாண்டியதாக வாதிட்டான். அதனை நிரூபணம் செய்ய தருமபுத்திரரை அழைத்தது. தருமரும் பீமன் தோற்றதாக உண்மையை உரைத்ததால், மகிழ்ந்து பீமனை விட்ட்து. வேண்டியதை அளித்தது. பீமனின் செருக்கும் அகன்றது. ம்ருகத்தின் வீர்யம் அழிந்து சிவனடி அடைந்தது. பீமன் வைத்த 12 சிவலிங்கங்களே இன்றும் பூஜிக்கப் படுகிறது. அவன் ஓடிய ஓட்டம் தான் இன்றும் சிவாலய ஓட்டமாக கொண்டாடப் படுகிறது.

Lakshminarasimha receives Varadharaja at Pazhayaseevaram

Today being Kanuppongal, Utsava murthy of Varadharaja Swamy Koil will do “Parivettai” to Pazhaya Seevaram. The  residing deity Laskhminarasimhar will  receive him  in festive manner. This small town today will be flooded with cars and two wheelers 
Pazhaiya Seevaram is a small village located about 20 kms from Kanchipuram on the road going towards Chengalpattu. While going from Chengalpattu, one can reach Pazhaya Seevaram  5kms before Walajabad.

Pazhaya Seevaram has an ancient temple for Sri Lakshmi Narasimhar, amidst picturesque location. This temple is located on a small hill on the banks of the river Palar. It is said that 3 rivers namely, Palar (Ksheera Nadhi), Cheyyar (Bahu Nadhi) and Vegavathi (Saraswathi) merge here to become one and it is called Triveni Sangamam. It is considered equally sacred as Ganges here.

According to the Sthala Puranam, once in Naimisaaranyam, a Rishi by name Vishnu Siththar enquired with the other Rishis about a best place where he can get the Dharshan of Lord Vishnu as result of the penance. Another Rishi called Mareecha Muni explained the him about the existence of such a place on the earth, where one’s penance (Thapas) will get fulfilled with the Dharshan of Lord Narayana and guided him to this place which was called Padmagiri. He also told the story of Athri Rishi, who got the Dharshan of the Lord in this place in the form of Sri Lakshmi Narasimhar, after his severe and dedicated penance. It is said that, Athri Rishi, after having Dharshan of the Lord, prayed the Lord to stay in this place and bless the people worshipping here. The Lord accepted his wish and stayed here in the same form to bless the mankind.



Monday, January 14, 2013

Pongal Wishes - பொங்கல் வாழ்த்துக்கள்



திருப்பாவை 20.முப்பத்து மூவர்

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்;
செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்;
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்.

திருப்பாவை 19.குத்து விளக்கெரிய


குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்;
மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்,
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்,
தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்.

திருப்பாவை 18..உந்து மதகளிற்றன்

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்,
நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்;
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்;
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

Thursday, January 10, 2013

Mahaperiyava's wish will always be God's wish


மஹா பெரியவாளைப் பற்றி தினமும் பல செய்திகளை பலர் பலவிதமான உபகரணங்கள் மூலம் பகிர்ந்து கொள்கிறார்கள். ஐம்பது மணிநேர ஒலித் தட்டுகள் தெய்வத்தின் குரலில் விரைவில் வர உள்ளது. சமீபத்தில் எனக்கு ஒருவர் அனுப்பிய ஒரு செய்தி என்னை மிகவும் கவர்ந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் இன்புறுகிறேன்.

ஆந்த்ராவில் யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தபோது, பெரியவாளுடன் கூட போகும் சிஷ்யர்கள் ரொம்ப குறைவு.  எந்தவிதமான படாடோபமோ, ப்ருதாவளியும் கிடையாது. உள்ளடங்கிய பகுதிகளில், பெரியவா வந்திருப்பதை கூட தெரிந்து கொள்ள முடியாது.  முன்னாடியே போய் பெரியவா தங்க வசதியான இடங்களை பார்த்து வைப்பதெல்லாம் கிடையாது.  காடோ, மேடோ, பொந்தோ, பாழடைந்த மண்டபமோ, மரத்தடியோ………பெரியவா இங்க தங்கிக்கலாம்என்று உத்தரவு போட்டு விட்டால், அதுதான் க்ஷேத்ரம்!
வழியில் ஒரு கிராமத்தில் ஒரு புராதனமான சிவன் கோவில் இருந்தது. பெரியவா அங்கே தங்கி கொஞ்சம் ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிக் கொண்டார்.  கிராமத்து ஜனங்கள் வந்து தர்சனம் பண்ணினார்கள். பக்கத்து கிராமங்களுக்கு காட்டுத்தீயாக பெத்தச்ச தேவுடுவந்திருக்கும் செய்தி பரவியது. உச்சிக்கால பூஜை முடிந்தது. பெரியவா அங்கு மூலையில் இருந்த மண்டபத்தில் படுத்துக் கொண்டுவிட்டார். சிஷ்யர்களும் அங்கங்கே ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிக் கொண்டனர்.

கோவில் அர்ச்சகர் வீட்டுக்கு போவதிலேயே குறியாக இருந்தார் போல ! உச்சிக்கால பூஜை முடிந்ததும், பெரியவா உள்ளே தங்கி இருப்பதைக் கூட நினைவில் கொள்ளாமல், கோவிலை பூட்டிக் கொண்டு போயே போய் விட்டார்! பக்கத்து கிராமங்களிருந்து பக்தர்கள் பெரியவாளை தர்சிக்க வேகாத வெய்யிலில் நண்டு,சிண்டு, குழந்தைகளை இடுப்பிலும், தோளிலும் தூக்கிக்கொண்டு, போறாததற்கு  கையில் தங்களால் இயன்ற காணிக்கைகளை தூக்கிக் கொண்டு வந்து பார்த்தால்……………கோவில் வாசலில் பெரிய பூட்டு தொங்கியது!
இந்த பட்டைபடைக்கிற வெய்யிலில் பெத்தச்ச தேவுடுஎங்க போயிருப்பார்? தெய்வமே! நம்ம கிராமத்துப் பக்கம் அவர் வந்தும், நம்மால தர்சனம் பண்ண முடியாமல் போயிடுத்தே! …………இப்படியாக பாவம் பலவிதமாக எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டு, திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள். உள்ளே கர்ப்பக்ரஹத்துள் இருக்கும் முக்கண்ணன்மண்டபத்தில் கண்களை மூடி ஓய்வெடுப்பது போல் படுத்திருந்தாலும்தன்னை ஆசையோடு பார்க்க வந்த பக்தர்கள் அதுவும், எந்த சுக சௌகர்யங்கள் இல்லாமல், வெய்யிலில் குழந்தை குட்டிகளோடு வந்திருக்கும் உண்மையான பக்தர்களை பரிதவிக்க விடுவானா?
சிட்டிகை போட்டு சிஷ்யர்களை எழுப்பினார்……..” ஏண்டா! வெளில பாவம் எல்லாரும் காத்துண்டிருக்காளா, என்ன?”
சிஷ்யர் பார்த்துவிட்டு ஆமாஆனா, வெளில கோவில் கதவு சாத்தி பூட்டியிருக்கு பெரியவா” அடடா……….ஜனங்கள் வந்து பாத்துட்டு ஏமாந்து போய்டுவாளேடா!………சரி இந்தா! குமரேசா! நீ டக்குனு அந்த கல்லுல ஏறி  அங்க தொங்கற மணியை பலமா அடி!
மணி ஓசை கேட்டது ! திரும்பி போக யத்தனித்த ஜனங்கள் மணி ஓசை கேட்டதும், சந்தோஷமாக கோவிலுக்கு ஓடி வந்தனர்.  காவல்காரரும் ஓடி வந்தார்! பூட்டு தொங்குவதைப் பார்த்து திகைத்தார்!  தன்னிடமிருந்த மாற்று சாவியால் கதவை திறந்து விட்டார். படிப்பறியாத பாமர ஜனங்கள் தங்களுடைய அன்பான பெத்தச்ச தேவுடுவைப் பார்த்து பரவசம் அடைந்தனர் ! எப்படிப் பட்ட பிரத்யேகமான தர்சனம்! தங்களை திரும்ப அழைக்க பெரியவா கையாண்ட யுக்தியைக் கேட்டு, “எதுவுமே தெரியாத எங்களையும் கூட ஒரு பொருட்டா நெனச்சு, கூப்பிட்டு தர்சனம் குடுத்திருக்காரே !என்று எண்ணி எண்ணி மாய்ந்து போனார்கள்.
பெரியவாளுக்கு படித்தவனும், பாமரனும் ஒன்றுதான்.

Wednesday, January 9, 2013

ஹரியை அழைப்போம்; அருள வருவார்;

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்யா ப்ரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ருதயம் அஸ்நாமி ப்ரயதாத்மஹ.


அன்றொறு சமயம் வேட்டுவக் குலத்தில் அவதரித்த செஞ்சு லக்ஷ்மியை மணந்து பாவன நரசிம்ஹனாய், அஹோபிலத்தில் எழுந்தருளிய மாலோலன் மட்டப்பள்ளியில் லம்பாடி இனத்துக் கிழவனிடம் செய்த லீலையை முக்கூர் ஸ்வாமிகள் விவரித்ததை படித்தேன். அதன் சுருக்கம் பின்வருமாறு. இன்று ப்ரதோஷ நாள். இந் நாளில் இதனை உங்களுடன் கேட்டு, படித்து பகிர்ந்துகொள்கிறேன் .

மட்டப்பல்லிக்கு நரசிம்மனை தரிசிக்க வந்த லம்பாடி இனக் கிழவர்க்கு, எம்பெருமானே நேரில் அர்ச்சகர் வடிவில் வந்து அருளிய செய்தி இன்றும் செவி வழியாகச் சொல்லப்படுகிறது.
காடுகள் சூழ்ந்த மட்டப்பல்லிக்கு அருகே உள்ள காட்டில் வசிக்கும் காட்டு வாழ் ஜாதி ஏழைக் கிழவன் ஒருவன் நரசிம்மனை தரிசிக்க வருகிறான். காட்டில் கிடைத்த தேன், தினை மாவு, அரிசி, பருப்பு, பழங்கள் என்று தனக்குப் பிடித்த எல்லாப் பொருட்களையும் ஒரு மூங்கில் கூடையில் வைத்துக் கொண்டு அங்கு வருகிறான். அந்த மண்டபத்தில் வந்து அமர்கிறான். அப்பொழுது முன்இரவு. எங்கும் இருள் சூழ்ந்த அந்த நேரத்தில் பூட்டிய சன்னதியைப் பார்த்து மிகவும் மனம் உருகி சிங்கவேள் ஹரியை அழைக்கிறான்.
திடீர் என்று அர்ச்சகர் தன் தோளில் கோவில் சாவிக் கொத்தை அணிந்தவாறு வந்து, தெலுங்கில் கேட்கிறார் “ராவைய்யா! இந்த சேபு ஏமி சேசாவு! ரா தொந்தரகா! நீகு தர்சனம் சேயிஸ்தானு. சொன்னதுடன் நில்லாமல், கிழவனை உள்ளே அழைத்துச் சென்று, தரிசனம் செய்வித்து, நைவேத்ய மிச்சத்தை அவனிடம் கொடுத்து திரும்பிச் சென்றுவிட்டார்.  உண்ட களைப்புடன் நன்கு கண் அயர்ந்தான். விடியர் காலை அர்ச்சகர் வருகிறார். தூங்கும் அவனை திட்டி எழுப்புகிறார். இது என்ன சத்திரமா அல்லது மடமா தூங்குவதற்கு என்று சொல்லி துரத்துகிறார். ஒன்றும் புரியாமல் அவன் அருகில் உள்ள குளத்திற்கு குளிக்கச் செல்கிறான். 
உள்ளே சென்ற அர்ச்சகருக்கு ஒன்றும் புரியவில்லை. எம்பெருமான் மீது தேன், தினமாவு, பூக்கள், இலைகள். பரம த்ருப்தியாக எம்பெருமான் உட்கார்ந்துள்ளார். மேலும் அவர் அருகில் அந்தக் கிழவன் தென்படுகிறான். ஓடி குளக்கரைக்கு அருகில் வந்தால் அவன் நீராடுவதைப் பார்த்து, எம்பெருமான் நடத்திய நாடகத்தை அறிகிறார். அந்தக் கிழவனுக்குக் கிடைத்த எம்பெருமான் தரிசனம் தனக்குக் கிடைக்கவில்லையே என்று விக்கித்து தலைகுனிந்து லம்பாடிஜாதிக் கிழவனை வணங்குகிறார். கிழவனுக்கு ஒன்றும் புரியவில்லை. எம்பெருமானே நேரில வந்து தனக்கு தரிசனம் கொடுத்ததை அர்ச்சகர் வாயிலாக அறிந்து அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைகிறான்.
அந்த நரஹரியே நம்மை அழைத்து தரிசனம் கொடுத்தாலே அன்றி நம்மால் அவனைக் காண இயலாது. மனம் நெகிழ்ந்து அவனை துதித்தால் அவனருள் கிட்டும்.



Tuesday, January 8, 2013

Chip off the Old Block


தாய் எட்டடி பாய்ந்தால் குழந்தை பதினாறு அடிபாயும் காலகட்டம் இப்பொழுது. திரு ஸ்ரீவத்ஸன் ஹெம்மிக்கே, தனது இசை மூலம் நமக்கு அவரது குருநாதர் திரு கே.வீ.நாராயணசாமியை நம் கண், செவி முன் நிறுத்துகிறார். அவரின் மகனோ அன்று ஸ்ரீவத்ஸன் குருநாதருக்கு பக்கமாக இருந்தது போல் வயலின் வாத்யத்தில் மிளிர்கிறார். பார்க்க, கேட்க ஒரு அருமையான காட்சி. 

ஸுகரனை அடைய ஸூகரமான மூன்று உபாயங்கள்

ஸ்ரீ ப்ருத்யுவாச
அஹம் சிஷ்யாச தாஸீச பார்யாச த்வயீ மாதவ
மத் க்ருதே ஸர்வ பூதாநாம் லகூபாயம் வத ப்ரபோ 

தாயார், குழந்தைகள் எல்லோரும் கிணற்றில் விழுந்து விட்டார்கள். தந்தை வந்து தாயாரைக் காப்பாற்றி விட்டார். என்னைக் காப்பாற்றியது போல் குழந்தைகளையும் காப்பாற்றக் கூடாத என்று தாயார் கேட்பது போல் ஜகன்மாதாவான பூமாதா பகவானிடத்தில் நமக்காக ப்ரார்த்திக்கிறாள். ஸூகரமான மூர்த்தியான வராஹப் பெருமாள், ஸூகரமாகச் சொன்ன அதாவது எளிதில் செய்யகூடியதான மூன்று விஷயங்களை மூன்று முடிச்சாகப் போட்டு அதனை தனது குழந்தைகளுக்குப் போதிக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்.
அது தான்
பரமாத்மாவின் திருவடியிலே புஷ்பத்தை அர்ச்சிப்பது
பரமாத்மாவின் திருநாமத்தை உரக்கச் சொல்வது
பரமாத்மாவின் திருவடியிலே ஆத்ம சமர்பணம் செய்வது

பகவத் கீதையை அர்ஜுனன் மூலமாக உபதேசித்தும் மக்கள் பயன் பெறாததைக் கண்ணுற்ற பரமாத்மா, பூமாதேவியை கலியில் ஆண்டாளாக உத்தாரணம் செய்து,  திருப்பாவை மூலம், பரமாத்மா, நம்மை கிணறு போன்ற கலியின் பிடியிலிருந்து காப்பாற்ற கோதை மூலம், அர்ச்சனம், நாமம், ஆத்ம நிவேதனம் என்ற மூன்று உபாயத்தை திருப்பாவை மூலம் தெரியப்படுத்துவதை கேட்டு, தெரிந்து, அறிந்து பயன் அடைவோம்.


 - கருத்து முக்கூர் லக்ஷ்மீ நரஸிம்மாச்சாரியார்

Monday, January 7, 2013

சிதம்பர / வைகுந்த ரகசியம்


ஹரனின் அம்சமான ஹனுமனும், ஹரியும் நடத்திய ஒரு நாடகம். ஹரியும் ஹரனும் நம்மை இயக்குகிறார்கள். எந்த ஒரு செயலும் அவனின்றி நடப்பதில்லை என்ற செய்தியை இந்த நிகழ்வால் நாம் அறியலாம். இது ஒரு சிதம்பர வைகுந்த ரகசியம்

நன்றி தினமலர்


Friday, January 4, 2013

திருப்பாவை 17.அம்பரமே, தண்ணீரே

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்த கோபாலா! எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்;
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்;
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோர் எ ம்பாவாய்.