Sunday, December 21, 2014

Hanumath Jayanthy - 2014

ஹரி நாமமும் ஹர நாமமும் சேர்ந்ததே ராம நாமம். ஹரியின் அவதாரமான ராமனுக்கு உறுதுணையாக இருக்க ஹரனின் அம்சமாக ஹனுமான் அவதரித்தார். பராசர பட்டர் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் ஸ்ரீராம சரித்ரத்தைச் சொல்லும் நாமங்கள் வருமிடத்தில் தன் வ்யாக்யானத்தில் “அத ம்ருதஸஞ்ஜீவநம் ஸ்ரீராம சரிதம் ப்ரஸ்த்தூயதே” என்றார். இனி மரித்தவர்களையும் பிழைக்கச் செய்யும் ஸஞ்ஜீவினி மருந்து ராமநாமம் என்கிறார். த்யாகராஜர் தனது க்ருதிகள் மூலமாக கோடி ராமநாமங்களைச் சொன்ன பேறு பெற்றார். ராமனைக் காணவேண்டுமென்றால் அனுமனை பஜிப்போம். அனுமனை வரவழைத்தால் ராமர் அங்கு ப்ரஸன்னமாகுவார். இதனை துளஸிதாஸர் மூலம் அறிவோம்.
இன்று ஹனுமத் ஜயந்தி. ராமஜபம் செய்து ஹனுமனை இங்கு வரவழைபோம். இ ங் கு ராமனும் ப்ரஸன்னமாவார். நாராயணீயத்தில் இரண்டு ஸர்கங்கள் மூலம் இருபது ஸ்லோகளால் ராமாயணம் என்ற ரமணீயமான மாலையை நாராயண பட்டத்ரி அருளியதை எனது தந்தையார் “ராகஸ்ரீ” அருமையாக தமிழில் தொடுத்து ரஞ்சகமான ராகங்களின் கலவைகளினால் அதற்கு அழகு ஊட்டியுள்ளார். அதனைப் பாடி உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமர் கோவிலில் 7 அக்டோபர் 2014ல் நடந்த பவித்ர உத்ஸவத்தில் இரண்டாம் நாள் அன்று மாலையில் நடைப்பெற்ற ஹோமத்தின் போது பூர்ணாகுதியின் பொழுது ப்ரதான அக்னி குண்டத்தில் ஹனுமான் ப்ரத்யக்ஷமாக அருள்பாலித்த அற்புதக் காட்சியினை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

Saturday, December 20, 2014

Vyasa Depicts Bagawatha to Sukha - a beginning


Some of my blog followers who can speak and understand tamil but could not read, requested bagawatham translated in English. My sincere thanks to Mr.Sridharan, Yogacharya of KYM, Chennai for his crisp clear translation. The translated version is more interesting than the Tamil version. I am requesting Mr.Sridharan to continue helping me, in bringing out the English version of Bagawatham in future.
-----------------------------------------------------------------------------------------------------------------
Narada, son of Kalavati, attained pure glory by  hearing and singing  the captivating stories of Lord Vasudeva everyday.  He attained that path leading to the lotus feet of Lord Vishnu which Sadhus reach through Jnana.  The mother of the young lad (Narada) died bitten by snake.  After the death of his mother, the boy proceeded in the northern direction. In dreadful forest which was the living place of snakes, owls and jackals, he drank water from a lake and sat under a Peepul tree and started meditating on the Supreme Being as per vedic injunctions.  At that time Lord Vasudeva entered and took place in his mind.  After some time, loosing sight of Him, he became sad and called the Lord.  But he could not see Lord Vasudeva in that life and his last days came.

At the end of Brahma Kalpa, taking back the three worlds when Lord Narayana entered the Yoganidra in the great deluge, the soul of the young man entered the breath of Lord Brahma who wanted to go to sleep.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 सहस्रयुगपर्यन्ते उत्थायेदम् सिस्रुक्ष्त:
मरीचीमिस्रा रुषय: प्राणेप्योहम् च जजिरे
स्रिमथ्भागवथम् 1.6.31
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
As per the calendar of Brahma at the end of 1000 yugas, from the breath of Brahma who rises up from sleep to create, nine sages including Marichi were born.  Then Narada was also born.
देवदत्तामिमाम् वीणाम् स्वरबर्ह्म्मविभूषिताम्
मूर्च्छ्यित्वा हरिकथाम् गायमानस्चराम्यहम्
स्रिमथ्भागवथम्  1.6.33
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Narada started wandering singing the stories of Lord Vasudeva by playing on the Veena which decorated with the Nada Brahmam of Nishadam, etc and given by Lord himself.  After hearing the story of Narda, Vyasa who mind was dispelled of disturbances composed ‘Srimad Bhagavadam’ in the Ashramam called ‘Samyaprasa” which was full of Badari (jujube) trees.
-----------------------------------------------------------------------------------------
यस्याम् वै स्रुयमाणायाम् क्रुष्णे परमपुरुषे
भक्तिरुत्पद्यते सोह पुम्स: शोकमोहभ्यापहा
स सम्हिताम् भागवतीम् क्रुत्वानुक्र्म्य सात्मजम्
शुकम्ध्यापयामास निव्रुत्तिनिरतम् मुनि:

स्रिमथ्भागवथम्  1.7.7,8
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
That story of the Lord (Bhagavadam) which on hearing dispels sorrow, delusion and fear and induces devotion, was instructed to Suka his son by Sage Vyasa.

Sunday, December 7, 2014

Vyasa Depicts Bagawatha to Sukha - a beginning

அங்கு மனோகரமான ஸ்ரீவாஸுதேவனின் கதைகளைக் தினந்தோறும் கேட்டும் கானம் செய்தும் பரிசுத்தமான கீர்த்தியை கலாவதியின் பாலகனான நாரதர் அடைந்தார். எந்த ஞானத்தால் விஷ்ணுபதத்தை ஸாதுக்கள் அடைந்தார்களோ அந்த மார்கத்தை அந்த பாலகன் அடைந்தான். அந்தப் பாலகனின் தாயார் ஒரு நாள் இரவு பாம்பு தீண்டியதால் இறந்தாள். அவளது மரணத்திற்குப் பின் அந்த பாலகன் வடக்குத் திக்கை நோக்கிப் புறப்பட்டான். ஸர்ப்பங்கள், கோட்டான்கள், நரிகள் இவைகளின் இருப்பிடமாக உள்ளதும் மிகக் கோரமான பெருங்காட்டில் ஒரு தடாகத்தில் நீர் அருந்தியபின், அரச மரத்தடியில் உட்கார்ந்து, பரமாத்மாவை மனத்தினால் வேத முறைப்படி த்யானித்தார். அப்பொழுது ஸ்ரீவாஸுதேவன் மெதுவாக அவனது மனத்தினில் அமர்ந்தார். சிறிது நேரம் கழித்து அது மறைந்தவுடன் மிகவும் மனம் வருந்தி அந்த பகவானை அழைக்க, அந்தப் பிறவியில் அந்தப் பாலகன் பகவான் வாஸுதேவனைப் பார்க்க இயலாததால் மரண காலமும் தோன்றிற்று.
ப்ரும்ம கல்பத்தின் முடிவில் இந்த மூன்று உலகையும் தன்னுள் அடக்கிக் கொண்டு ப்ரளய சமுத்திர ஜலத்தில் ஸ்ரீநாராயணன் படுக்கும் பொழுது துயில் கொள்ள விரும்பிய ஸ்ரீப்ரும்மதேவனின் மூச்சுக் காற்றோடு அந்த பாலகனின் ஆத்மா உள்ளே ப்ரவேசித்தது.
-----------------------------------------------------------------------------------------------------
ஸஹஸ்ரயுக பர்யந்தே உத்தாயேதம் ஸிஸ்ருக்ஷத:
மரீசிமிஸ்ரா ருஷய: ப்ராணேப்யோஹம் ச ஜஜ்ஞ்சிரே 
ஸ்ரீமத்பாகவதம்  1.6.31
----------------------------------------------------------------------------------------------------------------
ப்ரும்மாவின் கணக்குப்படி ஆயிரம் யுகங்களின் முடிவில் எழுந்து இந்த அகில் உலகத்தையும் படைக்க விரும்பிய ப்ரும்மாவினது ப்ராண வாயுக்களிலிருந்து மரீசி முதலிய ஒன்பது மகரிஷிகள் ஜனித்தார்கள். பிறகு நாரதரும் ஜனித்தார்.
-------------------------------------------------------------------------------------------------------------
தேவதத்தாமிமாம் வீணாம் ஸ்வர ப்ரஹ்ம விபூஷிதாம்
மூர்ச்சயித்வா ஹரிகதாம் காயமான ஸ்சராம்யஹம்
ஸ்ரீமத்பாகவதம் 1.6.33
----------------------------------------------------------------------------------------------------------------
பகவானால் நேரில் கொடுக்கப்பட்டதும் “நிஷாதம் முதலிய நாத ப்ரும்மத்தால் அலங்கரிக்கபட்டதுமான வீணையை மீட்டிக் கொண்டு ஸ்ரீவாஸுதேவனது சரிதத்தை கானம் பண்ணுகின்றவராய் நாரதர் ஸஞ்சரிக்கத் தொடங்கினார்.
நாரதரது இந்த வ்ருத்தாந்தத்தை கேட்டபின் மனது சஞ்சலம் நீங்கி இலந்தைமர ஸமூகங்களால் அலங்கரிக்கப்பட்ட “சம்யாப்ராஸம்” என சொல்லப்படும் ஆஸ்ரமத்தில் “ஸ்ரீமத் பாகவதம்” என்ற ஸம்ஹிதத்தை செய்தார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ ஸம்ஹிதாம் வை ஸ்ரூயமாணாயாம் க்ருஷ்ணே பரம் பூருஷே
பக்தி ருத்பத்யதே பும்ஸ: ஸோகமோஹ பயாபஹா
ஸ ஸம்ஹிதாம் பாகவதீம் க்ருத்வானுக்ரம்ய சாத்மஜம்
ஸுகமத்யாபயாமாஸ நிவ்ருத்திநிரதம் முனி:
ஸ்ரீமத்பாகவதம் 1.7.7,8
-------------------------------------------------------------------------------------------------------------
எந்த பாகவதக் கதையானது கேட்டபொழிதினிலேயே ஜனங்களுக்கு க்ருஷ்ண பரமாத்மாவிடத்தில் “துக்கம், மோஹம், பயம்” இவைகள் போகக்கூடிய பக்தி ஏற்படுகிறதோ அந்த ஸம்மிதையை பரிசோதனை செய்தும் முற்றும் துறந்த தனது பிள்ளையான சுகருக்கு கற்பித்தார்.

Garuda - King of Birds

நமது பாட்டி தாத்தா நமக்கும் நமது குழந்தைகளுக்கும், நமது பேரக் குழந்தைகளுக்கும் சொல்லும் கதைகளில் முக்கியமானது, “கஜேந்த்ர மோக்ஷம்”.
பாண்டிய கண்டாதி ராஜன் இந்திரத்யும்னன் மலய பர்வதத்தில் பகவானை த்யானித்துக் கொண்டிருக்கும் போது, அகஸ்தியர் அங்கு வர, அவரை கவனியாததால் ஏற்பட்ட சாபம் கஜேந்த்ரனாக அவதரித்து த்ரிகூடமலையில் வருணனுடைய குளத்தில் தனது ஸஹாக்களுடன் இருக்கையில், ஹூஹூ என்ற கந்தர்வன் தேவலர் என்ற மகரிஷியின் சாபத்தால் அங்கு முதலையாக அவதரித்து, கஜேந்திரனின் கால்களைப் பீடிக்கயில், பல வருடங்கள் தனது கால்களை அதனுடைய பிடியிலிருந்து காப்பாற்ற முடியாமல் “ஆதிமூலமே” என்று அறற்றி ஸ்ரீமன் நாராயணன் கருடன் மேல் அமர்ந்து வந்து அவர்கள் இருவருக்கும் மோக்ஷம் அளித்ததாக வ்ருத்தாந்தம்.
---------------------------------------------------------------------
ஸவை ந தேவாஸுர மர்த்ய திர்யங்
ந ஸ்த்ரீ ந ஷண்டோ ந புமான் ந ஜந்து
நாயம் குணம், கர்ம ந ஸன் ந சாஸன்
நிஷேதஸேஷோ ஜயதாத ஸேஷ
ஸ்ரீ மத் பாகவதம்  8-3-24
--------------------------------------------------------------------------
என்று கஜேந்த்ரன் ஸ்தோத்திரம் செய்த்தாகச் சொல்வர். 
சிறுவயதில் இக்கதை நம்மைத்தூங்கவைக்கவும், உணவு உண்ணவும் ஏதுவாக இருந்தது. வயது முதிர்ந்தவுடன் இதனை ஆராய்ச்சி செய்கிறோம்.
  1. யானை 100 வருடங்கள் எவ்வாறு குளத்தில் இருக்கும்.
  2. அதனுடன் சண்டை புரியும் முதலை எவ்வாறு அங்கு வந்தது.
  3. சாபம் என்றால் என்ன, விமோசனம் என்றால் என்ன.
  4. ஆதிமூலமே என்று கூட்டால் கடவுள் எப்படி பறந்து வருவார்.
  5. கருடன் மேல் எவ்வாறு அமரமுடியும். சூரியனது கிரணங்கள் அவர்களை ஒன்றும் செய்யாதா?
  6. கருடன் பாம்புகளை சாப்பிட்டு உயிர் வாழ முடியுமா.
மேலே சொன்ன ஸ்லோகப்படி கடவுள் என்பவன் ஒரு பரம்பொருள். அவன் தேவனும் அல்ல, அஸுரனும் அல்ல, மனிதனுமல்ல, மிருகம், பக்ஷி, புழு, பூச்சி முதலியவுனும் அல்ல. ஸ்திரீயுமல்ல, புமானுமல்ல, ஸத்துமல்ல, அஸத்துமல்ல, இத்தனையும் இல்லாமல் எதுவோ அது தான் பரம்பொருள். 
கருட தண்டகத்தின் சாராம்சம்
கருடன் தான் அமரும் இடமும் வாழும் கூடும் வேதங்களே.
வைகுண்டத்திலிருந்து ஸ்ரீமன் நாராயணனை அழைத்துச் செல்லும் வாகனம். பகவான் அதன் முதுகில் உட்கார்ந்து சத்ரு ஸம்ஹாரம் செய்து பக்தர்களை காப்பாற்றுகிறார். ருத்ரை, சுகீர்த்தி என்று இரண்டு மனைவிகள உடையவர். அவரது இறக்கைகள் முள் போன்று கூர்மையாக உள்ளதால், “இரண்டாகப் பிளந்த நாக்குகளையுடைய பாம்புகளைக்” கொல்ல வசதியாக உள்ளது. அந்த இறக்கைகளே அவருக்கு ஒரு அணிகலனாய் உள்ளது. கருடனுக்கு வெற்றியைத்தருவது அவரது இறக்கைகளே. பெரிய பாம்புகளே அவரது உணவு. ஒரு சமயம் தேவலோகத்திலிருந்து தாயின் அடிமைத்தனத்தைக் காப்பாற்ற அம்ருதத்தை எடுத்து வரும் பொழுது, இந்திரனுடன் சண்டையிட்டு, அவனது வஜ்ராயுதத்தால் ஏற்பட்ட வடு ஒரு ஆபரணாமாக அமைந்த்து. கருடன் உண்மையில் மறு உருவம். ப்ராணா, அபானா, சமானா, உதானா வ்யானா என்ற ஐந்து காற்றுகளின்/வாயுக்களின் உருவம். ரிஷிகளின் நண்பன். உனது இறக்கைகளின் வேகத்தால் கடலில் அலைகள் உண்டாகின்றது. அப்பொழுது ஏற்படும் ஓசை பாதாள லோகத்தில் பூமியைத்தாங்கும் யானைகளின் காதுகளை அடைத்து ஒரு சலனத்தை ஏற்படுத்துகிறது. உனது கால்களில் உள்ள நகங்களும், உனது வலிமையான மூக்கும் எதிரிகளுக்கு பயத்தை உண்டாக்குகிறது. உனது பற்கள் இந்திரனின் வஜ்ராயுதத்தைவிட கூர்மையானது. ஓம் ஸ்வாஹா என்று அக்னியில் கொடுக்கும் ஆஹூதியை பகவான் நாரயணனுக்கு அளிக்கவல்லவன். வாலகியா என்ற ரிஷிகளின் சாபத்திலிருந்து இந்திரனை காப்பாற்றியவர்.


விஞ்ஞான ரீதியாக

 கருடனைப் பற்றின ஒரு தொகுப்பு

Friday, December 5, 2014

Bhopal gas tragedy - 30 years later


போப்பால் பேரழிவு அல்லது போப்பால் துன்பம் டிசம்பர் 3, 1984 ல் இந்தியாவில் உள்ள போபாலில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வளிமக் கசிவினால் (வாயுக் கசிவினால்) ஏற்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளை நினைவுகூறும் ஒரு துன்ப நிகழ்வாகும்.


யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் மீத்தைல் ஐசோ சயனேட் எனும் நச்சு வளிமம் கசிந்ததினால் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். உடனடி உயிரிழப்பாக ஏறத்தாழ 2,259 பேர் நச்சு வளிமம் தாக்கி இறந்தனர். அதற்கடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 8,000 பேர் இறந்தனர். இன்னும் 8,000 பேர் வளிமத்தின் தாக்கத்தினால் ஏற்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர். போப்பால் பேரழிவு உலகில் உள்ள தொழிற்சாலைகளால் ஏற்பட்ட பேரழிவுகளில் மிக அதிகப் பாதிப்பை ஏற்படுத்திய பேரழிவாகக் கருதப்படுகிறது. இதனால் அங்குள்ள பாதிப்புகளை ஆராய 1993 ஆம் ஆண்டு அனைத்து நாடு மருத்துவக்குழு ஆணையம் இங்கு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வுக்குக் காரணமான யூனியன் கார்பைடு இந்தியா லிமிடட் என்ற நிறுவனம் 51% உரிமையுடன் 1969 ல் போப்பாலில் நிறுவப்பட்டதாகும். இதன் உரிமை யூனியன் கார்பைடு கார்ப்பொரேசனுக்கு சொந்தமானதாகும். இதன் 49% உரிமை இந்திய நிர்வாகத்திற்குச் சொந்தமானதாகும். இந்நிறுவனத்தின் முக்கிய குற்றவாளியாக சித்தரிக்கப்பட்ட யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அப்போதைய முதன்மை செயல் அதிகாரி வாரன் அண்டர்சன் இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். விபத்து நடந்தபின் இந்தியாவில் வைத்துக் கைது செய்யப்பட்ட வாரன் அண்டர்சன், அப்போதைய அரசியல் தலையீடுகளால் இந்தியாவை விட்டு கௌரவத்தோடு விமானத்தில் ஏற்றி அவரது தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். [1] பிணையம் பெற்று வெளிவந்த அண்டர்சன் அமெரிக்காவிற்கு திரும்பிய பின் மீண்டும் இந்தியா வர மறுத்தார். அமெரிக்கக் குடிமகனான ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க அரசு மறுத்து வந்தது.செப்டம்பர் 29, 2014 அன்று அமெரிக்காவில் இவர் இறந்தார்.[2]
இந்நிகழ்வுக்குக் காரணமானவர்களை தண்டிக்கக் கோரியும், போதுமான நட்ட ஈடு வழங்கக் கோரியும் தொடர்ந்து மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Bhopal gas tragedy - 30 years later