Monday, November 19, 2018

Ragasri 108


108 வருடங்களுக்கு முன் இந்தப் புவியில் அவதரித்து, தான் வாழ்ந்த 54 வருடங்களில் 300க்கும் மேல், GNB, மஹாராஜபுரம் விஸ்வநாத ஐய்யர், ஆதிசேஷய்யர், ஆண்டவன் பிச்சை, திருபுகழ் மணி என்ற சங்கீத வல்லுனர்களின் உந்துதலுடன், சமகால  க்ருதிகள் பல புனைந்து கர்நாடக சங்கீத உலகத்திற்கு அளித்துள்ளார். முருகக் கடவுளும், குருவாயுரப்பனும் அவரது மடியில் தவழ்ந்து, ராகஸ்ரீ ராகவனை பல க்ருதிகளை படைக்க வைத்து அனுபவித்ததை, நம் போன்றவர்கள் இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்லவேண்டி வலைத் தளத்தின் மூலம் அளிக்கிறேன். முருகனை ஆராதித்து பல க்ருதிகளை இயற்றி ஆதிசேஷய்யர், ஆண்டவன் பிச்சை, திருபுகழ் மணி, முருகதாஸ் இவர்களது முன்னிலையில் எனது தமக்கை பூமா நாராயணன், அண்ணன் திருவையாறு க்ருஷ்ணன் இவர்களால் 1956-1960 வருடங்களில் முருகன் படி உற்சவத்தில் அறங்கேற்றபட்ட எண்ணற்ற பாடல்கள் தூய நதி நீராக தவழ்ந்து, கர்நாடக சங்கீதம் என்ற ஸாகரத்தில் கலந்து எல்லோரும் இன்புற்றிருக்க இன்றும் ரீங்காரம் செய்கிறது. அவர்களிடமிருந்து கேள்வி ஞானத்தால் அறிந்து, கேட்டு நானும் பாடி பரவசப் பட்டு உங்களுடன் அனுபவிக்கிறேன்.