Wednesday, October 30, 2013

Pruthu, the Incarnation of Lord Narayana

நான் அறிந்தது திருமாலின் அவதாரங்கள் மீனத்தில் தொடங்கி கல்கி வரை பத்து அவதாரங்கள் என்ற செய்தி. ஆனால் ஸ்ரீமத் பாகவதத்தைப் புரட்டிப்பார்த்தால், ப்ருது மகராஜன் அவதாரத ரகசியத்தைப் படித்தால், ப்ருது மஹாராஜன் திருமாலின் மற்றுமொருஅவதாரம் என்பது தெரியவரும். மேலும் பூமிக்கு ஏன் ப்ருத்வி என்ற பெயர் காரணம், ஜீவராசிகள் உற்பத்தி என்ற பல அறிய செய்திகள் நமக்குத் தெரியவருகிறது. எவ்வாறு ப்ருது மஹாராஜன் பூமா தேவி என்ற பசுவின் மூலம் உலக ஸ்ருஷ்டியை சம்பவித்தார் என்பது பாகவதத்லிருந்து நாம் அறியலாம்.
இந்தப் பதிவின் மூலம் ஹரியும் ஹரனும் ஒன்றே என்றும், நாஸ்திகன் என்பனை எவ்வாறு அடையாளம் காணலாம். ப்ருது மஹாராஜன் காலத்தில் எவ்வாறு, இந்திரனே நாஸ்திகனாய் இருந்துள்ளான் என்ற பல அறிய செய்திகளைப் படிக்கலாம்.
ஆத்மானம் யஜதி மகைஸ்த்வயி த்ரிதாமன்
ஆரப்தே ஸத்தமவாஜிமேத யாகே
ஸ்பர்தாலு: ஸதமக ஏத்ய நீச வேஷோ

ஹ்ருத்வாஸ்வம் தவ தனயாத்பராஜிதோபூத்
யாகத்தால் ப்ரதானமாக ஆராதிக்கப்படும் தேவதை ஸ்ரீமத் நாராயணன். வேறு யாராவது யாகம் செய்தால் ஸ்ரீமன் நாராயணனை ஆராதிக்கலாம். இங்கு ஸ்ரீமன் நாராயணனே ப்ருதுவாக வந்து யாகம் செய்வதால், தன்னையே பூஜிப்பதாக நாம் சொல்ல முடியாது. ஒருவன் தனது பெயருக்கே மரியாதை நிமித்தம் செய்வது போல் ஆகிவிடும். இங்கு த்ரிதாமன் என்று கூறுவதன் நோக்கம் ப்ரும்மா, விஷ்ணு, சிவன் என்பதன் பொருள். ப்ருதுவான நாராயணன் த்ரிதாமனை பூஜித்து நூறாவது அஸ்வமேத யாகத்தை செய்ய விழைந்தான்.
மாயை இந்த்ரனின் கண்களை மறைத்தது. ப்ருது யார் என்று அறியாமல் யாகக் குதிரையைக் கவர்ந்தான். இந்த்ரன் பல வேஷங்களுடன் வந்து யாகக் குதிரையை களவாடினான். அந்த உருவங்கள் யாவையும் நாஸ்திக உருவங்களே. கருப்பு வஸ்திரம் நாஸ்திகனைக் குறிக்கும். நானே எல்லாம் என்பவனே நாஸ்திகன். உடல், மனது முழுவதும் பலவிதமான அகங்கார நோக்கங்கள். உடல் முழுவதும் எல்லாவித ஆசைகளுள்ள பலவிதமான கண்கள். இறைவனை விட நான் மேலானவன் என்ற செருக்கு. இன்றும் நம்மிடயே நாஸ்திக பெருமக்கள் பலர் உள்ளர். கருப்பு வஸ்திரம் தறித்த இந்நாஸ்திகர்கள் பிறர் அறியாவண்ணம் கடவுளை தொழுபவர்கள்தான்
இக்கலியிலும் பக்தர்கள் மஹாவிஷ்ணுவை ஆராதிக்கும் பொழுது, மூவரில் ஒருவனே என்பர். திருவஹீந்தபுரத்தில் உள்ள தேவநாதன் நெற்றியில் கண்ணும், தலையில் ஜடையுமுடன் இருப்பது தெய்வங்களிடத்தில் ஒருவிதமான பேதங்கள் இல்லை என்பதே.  மேலும் ராமன் சேது நிர்மாணத்தின் போது ஈஸ்வரனை வணங்கிய பின் தொடங்குவது, தெய்வங்களிடையே பேதங்கள் இல்லை என்பதைக் குறிக்கும்.
மனிதர்களாகிய நம்மிடையே தான் பேதங்களும், தான் என்ற உணர்வு. நாம் தான் உலகத்தை உய்விக்கின்றோம் என்ற மமதைகளெல்லாம். நம்மை சீரிய வழியில் கொண்டு செல்ல நம் முன்னோர் ஆராதித்த தெய்வங்களை இடைவிடாது உபாஸித்து வருவதே சாலச் சிறந்தது. அதனால் தான் அன்றய காலம் தொட்டு குல தெய்வ உபாசனையை கொண்டுள்ளார். நாமும் அதனை கடைபிடிப்போம். நம் சந்ததிகளுக்கும் போதிப்போம்.
திரு.M.D.ராமநாதன் அவர்களின் இந்தப் பாடல் மேலே சொன்ன செய்திகளின் சாரமாய்த் திகழ்கிறது. வேகமாய்ச் செய்திகளைச் சொன்னால் நம்மவர்கள் புரிந்துகொள்ளமாட்டார்களோ என்று அஞ்சி மிகவும் விளம்பகாலத்தில் நிறுத்தி நிதானமாக அருமையாகப் பாடிய பாட்டு இது.

JAYA KAILASAPATHE SIVA SANKARA

ஜய கைலாபதே சிவ சங்கர
சாம்ப ஸதாசிவ சம்போ
பர்த்தீஸ்வர ஸாயி சிவ சம்போ
சைலேஸ்வர கருணாமயி சங்கர

லிங்கோத்பவ கர சிவ சம்போ
த்ரிஸுலஜடாதர கங்காதாரி
ஹாலா ஹலதர சம்போ
சாம்ப ஸதாசிவ சம்போ
பர்த்தீஸ்வர ஸாயி சிவ சம்போ

இந்தப் பாடல் மிகவும் அழகான ஜனரஞ்சகமான கீரவாணி ராகத்தில் கம்பீரமான விதத்தில் அமைத்துள்ளனர். ஆனாலும் இந்த அதிரூபஸுந்தரரான ஈஸ்வரனைத் துதிப்பதால் ஏற்பட்ட மயக்கமோ அல்லது மோஹமோ தெரியவில்லை இசைஅமைத்தவர் நடபைரவியையும் சேர்த்துக் குழைத்துக் கொடுத்துள்ளார்கள். கணினியின் உத்தியால் இந்தப் பாடலில் முன்னணிப் பாடகர் போல் என்னை மாற்றிக் கொண்டுள்ளேன்.

Tuesday, October 29, 2013

Twenty Five Golden Points for Child Caring

One of my friend has sent a e-mail with this forward. We may all know all these advices. But somebody has compiled in a very good manner which should be shared among us. Do not just ignore after reading these points. Try to share with all and if possible cut and paste and send it to friends this blog post.
ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பா 
படிக்க வேண்டிய பயனுள்ள விடயங்கள்! ! ! !
1. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, 
சோம்பலிலோ, வேறு வேலையிலோகுழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!
2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் 
தெரியலாம், எல்லோருக்கும் அப்படியேதெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.
3. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று 
அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின்ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து 
விடாதீர்கள்!
4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோபிற குழந்தைகளுடனோ 
அனுப்பினால்,  அந்த வாகன ஓட்டுனரின் முழுவிவரமும் தெரிந்து கொள்ளுங்கள், 
அவர் வீட்டு முகவரி உட்பட.
5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!

6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, 
மரியாதையின்றி பேசுவதும், தொடக்கூடாத இடங்களை தொடுவதும், 
சில இடங்களில் நடக்கிறது.
7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று 
குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்
8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் 
அறிந்திருத்தல் நலம்.
9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் 
மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயதுவித்தியாசம் எப்படி இருந்தாலும்!
10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் 
திணிக்காதீர்கள்.
11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் 
போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ,நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!
12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், 
குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ,அல்லதுஅவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் 
வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.
13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் 
சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.
14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!
15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை 
சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடிமாறிவிட மாட்டார்கள். 
உங்களுக்கு பொறுமை அவசியம்.
16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய 
அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில்இருத்தல் வேண்டும்!
17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி 
பேசலாம்.
18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. 
நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!
19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற 
ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.
20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். 
விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"
21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் 
சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள்கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள்,
 தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி
கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது 
அவசியம்.
22. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் 
குழந்தை நிற்கவைக்கப்பட்டாலோ,பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ 
வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.
23. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும்"Good touch", "bad touch" 
எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக்கொடுங்கள்.
24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!
25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் 
கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!
I really welcome, if  anybody can translate these 25 points in English and add it as a reply for this mail, I will be really grateful to them, as some of our NRI relatives can’t read Tamil.