Tuesday, November 12, 2013

RADHA VADHANA - 22 - ASHTAPATHI

ராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம்
22வது கல்யாண அஷ்டபதி
ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன
ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப்ரவிவேச நிவேஸனம்
सा ससाध्वससानन्दं गोविन्दे लोललोचना।
शिञ्जानमञ्जुमञ्जीरं प्रविवेश निवेशनम्
மத்யமாவதி ராகத்தில் அமைந்த இந்த 22வது அஷ்டபதி 22வது மேளகர்த்தா ராகமான கரஹரப்ரியாவின் ஔடவ ஜன்ய ராகமாகும். மதுமத் ஸாரங் என்ற ஹிந்துஸ்தானி ராகம் இதன் ஒற்றுமையான ராகம். இனிமையான சூழலில் பாடப்படும் ராகம். கல்யாண காலத்தில் இசைக்க வேண்டிய ராகம். இசைக் கச்சேரிகளில், முடிக்கும் தருவாயில் இநத ராகத்தை கையாளுவர். க்ரஹ பேதம் என்று சொல்லும் முறையில் இந்த ராகத்தினை இசைத்தால் மோஹனம், ஹிந்தோளம், ஸுத்த ஸாவேரி மற்றும் உதயரவிசந்த்ரிகா என்ற ராகங்களின் அமைப்புகளை காட்டலாம். இந்த ராகத்தில் சிறிய மாற்றங்களைச் செய்தால் கேதாரகௌளை, மணிரங்கு, ரேவதி, ப்ருந்தாவன ஸாரங்கா, ஆந்தோளிகா என்ற ராகங்களை இசைக்கலாம். இந்த ராகத்தில் காந்தாரம் மற்றும் தைவதம் இல்லாததால், சாருகேசி, நடபைரவி மற்றும் ஹரிகாம்போதியிலிருந்து பிறந்ததாகவும் சிலர் சொல்லுவர்.
ராதை என்ற அழகுப் பதுமை, கருநிறமேகம் போன்ற கூந்தலை உடையவள், இருகைகளிலும் குலுங்கும் வளையல்களை அணிந்தவள், நாணத்துடன் சாமரத்தை வீசி க்ருஷ்ணனை இன்புறச் செய்யப் பாடும் இந்தப் பாடலை ஒரியாவில் வரதி என்ற ராகத்தில் இசைத்தனர் என்பர்.

No comments:

Post a Comment