Sunday, September 28, 2014

Dasavathara by Srimath Bagawatham

ரூபம் ஸ ஜக்ருஹே மாத்ஸ்யம் சாக்ஷுஷோததி ஸம்ப்லவே
நாவ்யாரோப்ய மஹீ மய்யாம்பாத் வைவஸ்வதம் மனும்
சாக்ஷுஷ மன்வந்தரத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் அந்த பகவான் மத்ஸ்ய உருவத்தை எடுத்துக் கொண்டு, பூமி ரூபமான ஓடத்தில் வைவஸ்வத மனுவை ஏற்றிக் கொண்டு காப்பாற்றினார்.
ஸுராஸுராணாம் உததிம் மத்நதாம் மந்தராசலம்
தத்ரே கமடரூபேண ப்ருஷ்ட ஏகாதஸே விபு:
தேவர்களும் அஸுரர்களும் பாற்கடலைக் கடைகின்றவேளையில் மந்த்ரபர்வதத்தை ஆமை உருவேடுத்து முதுகில் தரித்து பதினோராவது அவதாரமாகப் பகவான் தோன்றினார்.
தான்வந்த்ரம் தாவதஸமம் த்ரயோதஸம மேவ ச
அபாயயத்ஸுராநன்யான் மோஹின்யா மோஹயன் ஸ்த்ரியா
பாற்கடலைக் கடைந்தபொழுது உதித்து எழுந்த பன்னிரண்டாவது அவதாரம் தன்வந்தரி ரூபம். பின்பு வந்த அம்ருதத்தை தேவா ஸுரர்களுக்கு கொடுப்பதற்காக, மோஹினி என்ற பெண் உருவத்தால் அஸுரர்களுக்கு மோஹத்தை ஏற்படுத்தி தேவர்களை அமிருதத்தை குடிக்கச் செய்தது பதிமூன்றாவது அவதாரம்.
சதுர்தஸம் நாரஸிம்ஹம் பிப்ரத் தைந்யேந்த்ர மூர்ஜிதம்
ததார கரஜைர் வக்ஷஸ்க்யேரகாம் கடக்ருத் யதா

பதினான்காவது அவதாரத்தில் நரஸிம்ம ஸ்வரூபத்தை தரித்தவராய் மிகவும் பலம்வாய்ந்த ஹிரண்யகசிபுவை பாய்முடைபவன் கோரையைக் கிழிப்பது போல் கையில் உண்டான நகங்களால் மார்பைப் பிளந்தார்.
பஞ்சதஸம் வாமனகம் க்ருத்வாகாதத்வரம் பலே:
பதத்ரயம் யாசமான: ப்ரத்யாதித்ஸூஸ் த்ரிவிஷ்டபம்
பகவான், ஸ்வர்கத்தை பலியிடத்திலிருந்து ஸ்வீகரிக்க இச்சை கொண்டவராய், மகாபலியின் யாகசாலையை, வாமனரூபமொடு, பதினைந்தாவது அவதாரமாய் எடுத்து வந்து, மூன்றடிகளை யாசித்தார்.
அவதாரே ஷோடஸமே பஸ்யன் ப்ரஹ்மத்ருஹோ ந்ருபான்
த்ரி:ஸப்தக்ருத்வ: குபிதோ நி:க்ஷத்ராமகரோன் மஹீம்
பதினாறாவது அவதாரத்தில் அரசர்களை ப்ரும்மத்வேஷிகளாகப் பார்த்தவராய் கோபத்தை அடைந்து இருபத்தோரு தடவை க்ஷத்ரியர்கள் இல்லாததாகச் செய்தார்.
தத: ஸப்ததஸே ஜாத: ஸத்யவத்யாம் பராஸராத்
சக்ரே வேததரோ: ஸாகா த்ருஷ்ட்வா பும்ஸோல்பமேதஸ:
பிறகு பதினேழாவது அவதாரத்தில், ஜனங்களை மந்த புத்தியை உடையவர்களாய்ப் பார்த்து, பராசரர் ஸத்யவதியிடத்தில் வ்யாசராய் உருவெடுத்து, வேதமாகிய பெரிய வ்ருக்ஷத்தின் கிளைகளைச் செய்தார். இந்த அவதாரத்தில் வேதவிபாகம் செய்தார்.
ஏகோநவிம்ஸே விம்ஸதிமே வ்ருஷ்ணிஷு ப்ராப்ய ஜன்மனீ
ராமக்ருஷ்ணாவிதி புவோ பகவாநஹரத் பரம்
பத்தொன்பதாவதும் இருபதாவதுமான அவதாரத்தில் ஸாக்ஷாத் பகவான் பூ பாரத்தை குறைக்க “வ்ருஷ்ணி” வம்சத்தில் ராமன் க்ருஷ்ணன் என்ற நாமங்களுடன் அவதாரம் செய்யப்போகிறார். 

தத: கலௌ ஸம்ப்ரவ்ருத்தே ஸம்மோஹாய ஸுரத்விஷாம்
புத்தோ நாம்நா ஜனஸுத: கீகடேஷு பவிஷ்யதி
இருபத்தோராவது அவதாரத்தில் கலியுகம் ஆரம்பித்த போது அஸுரர்களை மயக்குவதற்காக கயாப்ரதேசத்தில் தனது பெயாரால் புத்தர் என்பவராய் அஜன சுதராக அவதரிக்கப் போகிறார்.
(ராமக்ருஷ்ண அவதாரங்களுக்கு முன்னமே இந்த பாகவதம் வ்யாசரால் ஸுகருக்குச் சொல்பட்டதால், இருபத்தொன்று இருபத்திரண்டு அவதாரங்கள் வரப் போவதாகச் சொல்லப்பட்டன)
அதாஸௌ யுகஸ்ந்த்யாயாம் தஸ்யு ப்ராயேஷு ராஜஸு
ஜனிதா விஷ்ணுயஸஸோ நாம்நா கல்கிர் ஜகத்பதி:
பிறகு இந்த லோகபதியான ஸ்ரீபரமாத்மா கலியுக முடிவில் அரசர்கள் யாவரும் கொள்ளைக்காரர்களாக ஆகியவளவில் கல்கி என்ற பெயருடன் இருபத்திரண்டாவது அவதாரத்தில் விஷ்ணுயசஸ் என்ற ப்ராமணனுக்குப் பிறக்கப்போகிறார்.
 வற்றாதான குளத்திலிருந்து ஆயிரம் வாய்க்கால் கிளைகள் தோன்றுமோ, அதுபோல் ஸத்வஸ்வரூபியான மகாவிஷ்ணு அவாதாரங்கள் பல எடுத்து, ஒவ்வொரு யுகத்திலும் இந்திரனுடைய சத்ருக்களால் பீடிக்கப்பட்ட உலகத்தை காப்பாற்ற அவதரிக்கிறார். எந்த மனிதன் பரிசுத்தாமாய் காலையிலும் மாலையிலும் இறைவனது இந்த பரம ரகசியமான ஸ்ரீபகவதவதாரத்தை பக்தி ஸ்ரத்தையுடன் சொல்கிறானோ கஷ்டங்கள் பலவற்றிலிருந்து விடுதலை அடைகிறான். 

Friday, September 26, 2014

From Kapila to Pruthu - கபிலர் தொடங்கி ப்ருது வரை

அனர்த்தோபஸமம் ஸாக்ஷாத் பக்தியோகமதோக்ஷஜே

லோகஸ்யாஜானதோ வித்வாம்ஸ்க்ரே ஸாத்வத ஸம்ஹிதாம்
ஸ்ரீவாஸுதேவனிடத்தில் செய்யப்படும் பக்தியோகமானது நேரிடையாகவே ஜீவனுக்கு ஏற்படும் கஷ்டத்தைப் போக்கவல்லது என்ற உண்மையைக் கண்டு கொண்டதால் வ்யாசமுனி மக்கட்கு “ஸ்ரீமத் பாகவதம்” என்ற இதிஹாஸத்தைச் சொன்னார்.
இனி வருவது கபிலர் அவதாரம் தொடங்கி ப்ருது வரை இந்தப் பதிப்பில் காணலாம்.
பஞ்சம: கபிலோ நாம ஸித்தேஸ: காலவிப்லுதம்
ப்ரோவாசாஸுரயே ஸாங்க்யம் தத்வக்ராம விநிர்ணயம்
ஐந்தாவதாக ஸித்தர்களுக்கெல்லாம் ஈசனான கபிலர் என்று ப்ரஸித்தாராய் காலக்ரமத்தில், அழிந்துபோகும் தருவாயில் உள்ள தத்வங்களின் சமூகத்தை நிர்ணயித்து தருவதான “ஸாங்க்யம்” என்ற சாஸ்திரத்தை ஆஸூரி என்ற ப்ராம்மணனுக்கு சொன்னார்.
ஷஷ்டே அத்ரே ரபத்யத்வம் வ்ருத: ப்ராப்தோன்ஸூயயா
ஆன்விக்ஷிகீ மலர்காய ப்ரஹ்லாதாதிப்ய ஊசிவான்
அத்ரிமகரிஷியின் பத்னியால் வரிக்கப்பட்டவராய் ஆறாவதான அவதாரத்தில் அத்ரி மகரிஷிக்கு குழந்தையாயிருக்கும் தன்மையை அடைந்தவராய், அலக்கனுக்கும்,ப்ரஹ்லாதன் முதலானவர்களுக்கும் ஆத்மவித்யையை உபதேசம் செய்தார்.
தத: ஸப்தம ஆகூத்யாம் ருசேர் யஞ்ஜோப்யஜாயத
ஸ யாமாத்யை: ஸுரகணைரபாத் ஸ்வாயம்புவாந்தரம்
ஏழாவதான அவதாரத்தில் ருசியிடத்திலிருந்து ஆகூதியிடத்தில் யக்ஞன் என்ற பெயரோடு உண்டானார். அப்படிப்பட்டவர் யாமன் என்ற தனது குழந்தைகளான தேவக் கூட்டங்களோடும் ஸ்வாயம்புவ மன்வந்தரத்தை தானே காப்பாற்றினார்.
அஷ்டமே மேரு தேவ்யாம் து நாபேர்ஜாத உருக்ரம
தர்ஸயன் வர்த்ம தீராணாம் ஸர்வாஸ்ரம நமஸ்க்ருதம்.
எட்டாவதான அவதாரத்தில் எல்லா ஆஸ்ரமத்தினராலும் வணங்கத்தக்க வீரர்களின் மார்க்தத்தை காண்பிக்கின்றவராய் உரூக்ரமன் என்ற பெயரை உடையவராய் நாபியிடத்திலிருந்தும் மேருதேவியிடத்தினிலும் ரிஷபர் என்ற பெயரை உடயவராய் தோன்றினார்.

ருஷிபிர்யாசிதோ பேஜே நவமம் பார்திவம் வபு:
துக்தேமாமோஷதீர் விப்ராஸ்தேநாயம் ஸ உஸத்தம:
மகரிஷிகளால் வேண்டப்பட்டவராய் ஒன்பதாவதாக ப்ருது ரூபமான அரச ஸரீரத்தை அடைந்தார். பூமியிடத்திலிருந்து, அந்தந்த வஸ்துக்களின் தேவர்களை கன்றாக ஆரோஹித்து பூமியின் எல்லா வஸ்துக்களையும் கறந்து, எல்லா அவதாரங்களிலும் விரும்பத் தக்கதுமான அவதாரமாகச் சொல்லப்பட்டது.
ஸ வேத தாது: பதவீம் பரஸ்ய துரந்த வீர்யஸ்ய ரதாங்கபாணே
யோமாயயா ஸந்த தயாநுவ்ருத்யா பஜேத தத்பாத ஸரோஜகந்தம்
எவனொருவன் கபடமில்லாததுமான இடைவிடாது அனுவ்ருத்தியால் இறைவனது பாத கமலங்களின் வாஸனையை ஸேவிக்கின்றானோ, அவன் பகவானையும் அதிக வீர்யம் உடையவரான ஸ்ரீசக்ரபாணியின் ஸ்வரூபத்தை அறிகிறான்; அடைகிறான்.
மத்ஸ்யம் முதல் கலிவரை உள்ள எஞ்சிய அவதாரங்களை அடுத்த பதிப்பில் ஸேவிக்கலாம்.

Wednesday, September 24, 2014

Bagwan Vaasudeva's Twenty two Avatharams

இதம் பாகவதம் நாம புராணம் ப்ரஹ்மஸம்மிதம்
உத்தமஸ்லோக சரிதம் சகார பகவான் ருஷி:
நிஸ்ரேயஸாய லோகஸ்ய தன்யம் ஸ்வஸ்த்யயனம் மஹத்:
புகழத்தக்க புண்ய புருஷரான ஸ்ரீமன் நாராயணனின் புராணமான வேதமயமான் இந்த பாகவத புராணத்தை வ்யாஸர் உலகக்ஷேமார்த்தமாகச் செய்தார். பின் அதனை சுகருக்குக் கற்பித்தார். சுகர் மஹரிஷிகளால் சூழப்பட்ட பரீக்ஷித் மஹாராஜனுக்கு கேட்கும்படிச் செய்தார்.
க்ருஷ்ணே ஸ்வதாமோபகதே தர்மஞாதிபி: ஸஹ
கலௌ நஷ்டத்ருஸாமேஷ புராணார்கோதுநோதித
க்ருஷ்ண பகவான் தனது இருப்பிடமான வைகுண்டத்தை அடைந்த அளவில் கலியில் பார்வையை இழந்த மக்களுக்கு பாகவதம் என்ற ஸூர்யன் உதித்தது. இந்த பாகவதத்தை ஸூதமகரிஷி பகவானின் விராட்ஸ்வரூபத்தில் ஆரம்பித்து கலிவரை உடைய பகவானின் கல்யாண குணங்களை இருபத்திரண்டு அவதாரங்களாக விவரிக்கிறார்.
 
ஜலத்தில் பள்ளிகொண்டு யோகநித்ரையில் உள்ள வாஸுதேவன் நாபி கமலத்திலிருந்து ப்ரும்மா உண்டானார். ப்ரும்மாண்டமான் விராட் ஸ்வரூபத்தில் பலவிதமான அவதாரங்களும் அதனுள் ப்ரும்மாவும் அவரின் அம்சமான தக்ஷன், நாரதர், மரீசி முதலானவர்களால் தேவன் மனிதன் ம்ருகங்கள் முதலானவைகள் சிருஷ்டிக்கப்படுகின்றனர்.
ஸ ஏவ ப்ரதமம் தேவ: கௌமாரம் ஸர்கமாஸ்தித
சசார துஸ்சரம் ப்ரஹ்மா ப்ரஹ்மசர்யமகண்டிதம்
முதலில் கௌமார ரூபமான ப்ராம்மணராக பாவித்து ப்ரம்மசர்யத்தை அனுஷ்டித்தார். 
 த்விதீயம் து பவாயாஸ்ய ரஸாதலகதாம் மஹீம்
உத்தரிஷ்யந்நுபாதத்த யஜ்ஞேஸ்: ஸௌகரம் வபு:
யாகங்களுக்கெல்லாம் அதிபதியான இவர் இவ்வுலக க்ஷேமத்திற்காக பாதாளத்தை அடைந்த பூமியை மேல் எடுக்கின்றவராய்க் கொண்டு பன்றி உருவமான சரீரத்தை இரண்டாவது அவதாரமாக அவதரித்தார்.
த்ருதீயம்ருஷிஸர்கம் ச தேவர்ஷித்வமுபேத்ய ஸ்:
தந்த்ரம் ஸாத்வத மாசஷ்ட நைஷ்கர்ம்யம் கர்மணாம் யத:
மகரிஷிகளிடத்தில் ஆவிர்பாவத்தை அடைய எண்ணி தேவரிஷியான நாரதஸ்வரூபத்தை அடைந்து எதிலிரிந்து கர்மாக்களின் நிஷித்தக் காம்யத்தன்மை ஏற்படுமோ அப்படிப்பட்ட பாஞ்சராத்ரம் என்ற ஆகமத்தைச் சொன்னார்.
துர்யே தர்மகலாஸர்கே நரநாராயணா வ்ருஷீ
பூத்வா ஆத்மோபஸமோபேத மகரோத் துஸ்சரம் தப:
தர்மனின் பத்னியின் ஸ்ருஷ்டி ரூபமான நான்காவதான அவதாரத்தில் நரன் நாராயணன் என்ற இரு ரிஷிகளாகத் தோன்றி ஆத்ம நிக்ரஹத்தோடு, மற்றவரால் அனுஷ்டிக்கமுடியாததுமான தவத்தை செய்தார். 
அடுத்தப் பதிப்பில் கபிலாவதாரத்திலிருந்து கலிவரைக் காணலாம்

வாஸுதேவனே ப்ரும்மம், பரமாத்மா - Maharishi Sootha elaborates Bagwan Vasudeva

பாவத்யேஷ ஸத்வேன லோகான் வை லோகபாவன:
லீலாவதாரானுரதோ தேவ திர்யங் நராதிஷு
இந்த உலகரக்ஷகனான வாஸுதேவன் தனது சக்தியால் தேவன், நரன், மிருகம் முதலியனவாகக் கொண்ட லீலாவதாரங்களில் பற்று கொண்டு உலகம் அனைத்தயும் ரக்ஷிக்கின்றார். அவர்
வாஸுதேவபரா வேதா வாஸுதேவபரா மகா:
வாஸுதேவபரா யோகா வாஸுதேவபரா: க்ரியா:
வாஸுதேவபரம் ஞானம் வாஸுதேவரம் தப:
வாஸுதேவபரோ தர்மோ வாஸுதேவ பராகதி:
இப்படிப்பட்ட வாஸுதேவனை பூஜிப்பதை விட்டு ரஜோகுணம், தமோகுணம், இவற்றை உடையவர்களும், இதற்கு சமமான குண்ங்களை உடையவர்களும் லக்ஷ்மீ, சந்தானம், ஐஸ்வர்யம் இவைகளை விரும்பி பித்ருக்கள், பூதங்கள், யமன் முதலியர்களையே சேவிக்கின்றனர். ஆனால் மோட்சத்தை அடைய விரும்புவர்கள் பயங்கர உருவத்தை உடைய மற்ற க்ஷூத்ர தேவதைகளை விட்டு மற்ற தேவதைகளிடத்தில் அசூயை அற்றவராய் ஸ்ரீமன் நாராயணனை பூஜிக்கின்றனர்.
ஸத்வம், ரஜஸ், தமஸ் என்று சொல்லக்கூடிய மூன்று குணங்கள் உலகின் ஆக்கல், அளித்தல், அழித்தல் இவைகளின் பொருட்டு அதற்கான ஸ்ரேஷ்டர்களான ப்ரும்மா, நாராயணன், சிவன் என்ற பெயர்களைத் தருகிறார்கள். அவைகளில் மத்தியில் ஸத்வகுணரூபியான வாஸுதேவனாலேயே உலகிற்கு மங்களம் உண்டாகிறது.
விறகிலிருந்து புகையும், அப்புகையிலிருந்து கார்ஹபத்யம் ஆஹவனீயம் தக்ஷிணாக்னி என்ற மூன்றான அக்னி உண்டாகிறது. தமோ குணத்திலிருந்து ரஜஸ் என்ற குணமும், அந்த ரஜஸிலிருந்து பரப் பிருஹ்ம்ம ஞான ஹேதுவான ஸத்வ குணம் உண்டாகிறது. இக் காரணத்தால் மகரிஷிகளும் அக்காலத்தில், பகவான வாஸுதேவனையே சரணமாக அடைந்தனர்.
வதந்தி தத்தத்வ விதஸ்தத்வம் யஜ்ஞான மத்வயம்
ப்ரஹ்மேதி பரமாத்மேதி பகவாநிதி ஸப்த்யதே
என்று ஸுதர் கூறினார். வாஸுதேவனே ப்ரும்மம், பரமாத்மா. அந்த உண்மையே ஞானம் என்றும் கூறினார்.
(இதி ஸ்ரீமத் பாகவதே மகாபுராணே ப்ரதமஸ்கந்தே 
நைமீஷீபாக்யானே த்விதீயோத்யாய)
பின் பகவானின் அவதாரங்களை வர்ணிக்கிறார். எவ்வாறு?.................

Tuesday, September 23, 2014

Sounaka from naimisaranyam - Srimath Bagawatham retold by Sukha


மஹாபாரதத்தை நாரதர் சொல்ல வ்யாஸர் எழுத, சுகர் ஏனைய ரிஷிகளுக்கு அதனைக் கூற, பரீக்ஷித் மஹாராஜன் கேட்கப்பட்டதாக படைக்கப் பட்ட காவியம். விதுரர் தர்மத்தின் அம்சம். அவருக்கு தெரியாத பாகவதம் இல்லை. இருந்தும் மைத்ரேயர் சொல்லி அனுபவிக்கிறார். சொல்வதால் கேட்பவரும் சொல்பவரும் பயன் அடைவதால், நாமும் அதனை பிறருக்குச் சொல்லி அதன் பலனை நுகருவோம்.
உற்பத்தி, வளர்ச்சி, நாசம் மற்றும் தேஜஸ், ஜலம், ப்ருதுவி மேலும் தமஸ், ரஜஸ், ஸத்வம் இவைகளுடைய பூதம், இந்திரியம், தேவதை இவைகள் எல்லாம் பரமாத்மா. அந்த பரமாத்மா உபதேசித்த பாகவதத்தில் அஸூயை அற்றவர்களாக இருப்பதும், க்ஷேமத்தை அளிப்பதும், சாஸ்திரங்களால் அறியமுடியாததையும் கூட அறிவிப்பது. அப்படிப்பட்ட அமிர்தமான பழத்தினை, மகாவிஷ்ணுவின் ப்ரதேசமான நைமிசாரத்தில் சௌனகர் முதலான மஹரிஷிகள் ப்ராதக் காலத்தில் ஸ்வர்க்கத்தை அடையும் பொருட்டு ஆயிரம் ஆண்டுகள் அனுஷ்டிக்கத்தக்க ஸத்ர யாகத்தை அனுஷ்டித்தும் பிறகு சுகர் என்ற கிளி, ரஸமான பாகவதம் என்ற கனியை ருசித்து அதன் ரஸத்தைச் சொல்ல அதனை அனுபவித்தும் மோக்ஷத்தை அடைந்ததாகக் கூறுவர். 
நிகம கல்பதரோர் களிதம் பலம் 
சுகமுகாதம்ருதத்ரவ ஸம்யுதம்
பிபத பாகவதம் ரஸமாலயம்
முஹுரஹோ ரசிகா: புவி பாவுகா  
இந்தக் கலியில் ஜனங்கள் சோம்பல் மிகுந்தவராகவும், அற்ப ஆயுள் உள்ளவர்களாகவும், தீவினைப் பயன் உடையவர்களாகவும், வ்யாதியால் பீடிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். முறையான அனுஷ்டிக்க வேண்டிய அனேக கர்மாக்களை அனுஷ்டிக்காவிட்டாலும் பரவாயில்லை பகவன் நாமாவை பஜித்தாலே பரிசுத்தமடைவார்கள் என்று சுகர் கூற ஏனைய மகரிஷிக்கள் ஸ்ரவணம் செய்ய அந்த பாகவதம் என்ற இதிஹாஸத்தை நாமும் கேட்டு பயனடைவோம்.
த்வம் ந: ஸந்தர்ஸிதோ தாத்ரா துஸ்தரம் நிஸ்திதீர்ஷதாம்
கலிம் ஸத்வ ஹரம் பும்ஸாம் கர்ணதார இவார்கணம்.
மக்களின் சக்தியை அபஹரிக்கக் கூடியதும், கடக்கமுடியாததுமான கலியுகமாகிய கடலை கடக்க முயலுகின்றவர்களான நம் போன்றவர்களுக்கு ப்ரும்மாவினால் படகோட்டி போல் சுகர் இருந்து காட்டுவதாக ஐதீகம்.



.............................இனி வரும் அஞ்சல்கள் மூலமாக படகில் அமர்ந்து ஏனைய காட்சிகளை ரசிக்கலாம்.
நாராயணம் நமஸ்க்ருத்ய நரம் சைவ நரோத்தமம்
தேவீம் ஸரஸ்வதீம் வ்யாஸம் ததோ ஜயமுதீரயேத்