Sunday, September 29, 2013

SARAGUNA PALIMPA - POOCHI SRINIVASA IYENGAR

பூச்சி ஸ்ரீநிவாச ஐய்யங்கார் என்றவுடன்,   சரகுண பாலிம்ப என்ற பாடலும்,   HMV 78 RPM க்ராமபோன் தட்டுகளும் தான் நினைவுக்கு வருகின்றது. 
இந்த பாடலின் பிண்ணனி நிகழ்ச்சி ஒரு வாழைப் பழத்தோலினால் உண்டானது என்றால் நம் எல்லோருக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கும். கறிகாய் அங்காடிக்குச் சென்று வரும் சமயம் வாழைப்பழத்தின் தோலில் வழுக்கிவிழுந்து, மிகவும் நோய்வாய்ப்பட்டு வெங்கடேசப் பெருமாளை நினைத்து மனமுருகிப் பாடின பாட்டு. அன்று ஆதிமூலமே என்று கதறிய யானைக்கு காட்சி தந்தாய். எனக்கு அருள் புரியமாட்டாயா என்று மனமுருகிப் பாடிய பாட்டு.
ஸம்ஸக்ருத மொழியிலும், தெலுங்கிலும் பளிச்சென்ற க்ருதிகள், வேகமான சிட்டைஸ்வரங்கள், ஹுசேனி, நவரஸ கன்னடா, தேவமனோஹரி, கீரவாணி, சுத்த ஸாவேரி என்ற ரஸமான ராகங்கள், மத்யம கால ஸாஹித்யங்கள் என்று அன்றயகால அபூர்வ பாடாந்திரம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அப்படிப்பட்ட வாக்கேயக்காரர் ராமநாதபுரம் ஸ்ரீநிவாஸ ஐயங்கார் என்ற பூச்சி ஸ்ரீநிவாச ஐயங்கார்.
பூச்சி என்ற அடைமொழி ஏன் அவருக்கு வந்த்து. பூச்சியின் ரீங்காரம் போன்றது அவர் சாரீரம். அந்த நாட்களில் முதலில் 4 ½ (F#) ஸ்ருதியிலும் பின்பு 3 (E) ஸ்ருதியிலும் பாடி வந்தார் என்று அவர் சிஷ்யர்கள் சொல்லி வாய் வழி வந்த செய்தி. அவரது ரீங்காரமான சாரீரத்தை மெச்சி அவருக்கு இந்த பெயர் வந்ததாக சிலர் கூறுவர். மற்றுமொரு ரசமான செய்தி. அவர் உணவு உண்ட பின் செரிமானத்திற்காகவும், உடல் நறுமணத்திற்காகவும் சந்தனம் பூசினதாக ஒரு செய்தி. சந்தனம் பூசிய / ஜவ்வாது பூசிய ஐய்ங்கார், பூச்சி ஸ்ரீநிவாச ஐய்யங்காராக பெயர் திரிந்தது.  அவர் பாடல்களில் ஒரு துடிப்பு, பொருள் செறிவு, வேகமான நடை, சுருங்கச் சொல்லி எளிதில் விளங்க வைக்கும் நயம் போன்ற காரணத்தினால் பூச்சி போல் துரு துருவென்ற ஸாஹித்யம் என்று சொல்லி, அவர் பூச்சி ஸ்ரீநிவாச ஐய்ங்காரானார்.
பட்டிணம் சுப்பிரமணிய ஐய்யரின் ப்ரதம் சிஷ்யரான இவர், குரு கடாக்ஷத்துடன் வியாழக் கிழமை ஆவணி மாதத்தில் பிறந்ததாகச் சொல்வர்.
ராமநாதபுர சமஸ்தானத்தை அலங்கரித்த இவருக்கு அரியக்குடி ராமானுஜ ஐய்யங்கார், கடயநல்லூர் ஸ்ரீநிவாச ஐய்யங்கார், சேலம் துரைஸ்வாமி ஐய்யங்கார், காரைக்குடி ராஜாமணி, குற்றாலம் ஸ்ரீநிவாச ஐய்யர் என்ற பெரும் பாடகர்கள் இவரது ப்ரதம சிஷ்யர்கள்.
இவர் வர்ணம், ஜாவளி, தில்லானா என்ற அங்கங்களில் பல உருப்படிகள் கொடுத்துள்ளார். வராளி ராக வர்ணமும், லக்ஷ்மீச தாளம் என்ற ஒரு அறிய தாளத்தில் ஒரு தில்லானாவும் இவரை கர்நாடக சங்கீதத்தில் ஒரு உன்னதமான இடத்தில் இன்றும் அவரை அமரச் செய்திருக்கிறது.  ஸ்ரீரகுகுல நிதிம் என்ற ஹுசேனி ராக க்ருதி மிகவும் அறிதான க்ருதி. ஹுசேனி ராகத்தின் முழுமையான பரிமாணத்தைக் இக் க்ருதியில் காணலாம் / அனுபவிக்கலாம். 

Saturday, September 28, 2013

ASPARTAME - DIABETES FRIEND OR FOE?


Phenylalanine is an essential amino acid (that is an amino acid which our bodies cannot make and which we must obtain from our diet.) It is also one of the amino acids which is used to make aspartame. Phenylalanine is found in all protein-containing foods including milk, cheese, eggs, meat and fish.
Products which contain aspartame have a lable says “Contains a source of phenylalanine”. This label is there to help people with a rare inherited genetic disorder called “PHYNYLKETONURIA (PKU). These people cannot metabolise phenylalanine from any source and need to follow a strict diet to control their intake of this amino acid. The disorder affects approximately 1 in 10,000 babies and is identified by screening shortly after birth.
சர்க்கரை வ்யாதி. 
நாம் எல்லோரும் அறிந்ததே. நம்மில் பலர் இதனை சீதனமாக நம் மூதாதையர்களிடமிருந்து வாங்கிக்கொண்ட ஒரு அறிய வரம். நாம் வேண்டாமல் நமக்குக் கிடைத்த பரிசு.
பல பொருள் அங்காடிக்குச் சென்றிருந்தேன். என் கண்ணில் பட்டது Sugar Free Gold“. இதனை வாங்கி வந்தேன். பிறகு அதில் உள்ள பொருள்களின் உள்அடங்கல் என்ன என்று புரட்டிப் பார்த்ததில் “ASPARTAME“ என்ற வேதியல் (Chemical)பொருளில் தயாரிக்கப்பட்டது என்பதை அறிந்தேன். இது மதக்கிளவரியம் என்ற ஒரு வேதியல் பொருள் என்பர்.
Mediamanage என்ற வலைத்தளத்திலிருந்து நான் அறிந்தது, 125 ஆண்டுகளாக உபயோகத்தில் இருந்ததை 1977ல் இதனை உபயோகத்திலிருந்து தடை செய்தார்கள். னால் மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கும் நோக்குடன் இதனை மறுபடியும் 1991லிருந்து ஒரு எச்சரிக்கையுடன் வ்யாபாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர். இப்பொழுது அதன் பெயரை மாற்றி “அமினோ ஸ்வீட் என்ற புதுப் பெயருடன் வ்யாபாரம் செய்கின்றனர்.
நான் “FaceBook“ லிருந்து படித்த ஒரு கட்டுரை.
நாம் பலவிதமான உணவுப் பொருட்களை, தீமைதரும் என்றாலும் உண்ணுகிறோம். ஆனால் இது கொடிய விஷம் என்று தெரிந்தும் நாம் உண்டால் நம்மை ஆண்டவனாலும் காப்பாற்றமுடியாது

Friday, September 27, 2013

HR REPRESENTS SOUTH INDIA IN TED.COM

டெட் என்ற ஒரு உலகப் புகழ் நிறுவனம் பெற்ற (தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, வடிவமைப்பு) மிகவும் மதிப்புள்ள கருத்துக்களை வழங்கும் தனியார் நிறுவனமாய் அமைந்துள்ள, எந்தவிதமான லாபங்களை எதிர்ப்பார்க்காத ஒரு அறக்கட்டளை. இது ஒரு உலக தொகுப்பு ஆகும்.
டெட் ஒரு இனிய நிகழ்வின் மூலம் 1984 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. முதல் ஆண்டு மாநாட்டில் மாண்டெர்ரி என்பவர்  கலிபோர்னியாவில்  1990 ஆம் ஆண்டு தொடங்கினார். டெட்டின் ஆரம்ப முக்கியத்துவம் சிலிக்கான் பள்ளத்தாக்கிலே. அதன் தோற்றம், அதற்கு இசைவானதாகவும் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் இருந்தது.
டெட்டின் முக்கிய மாநாட்டின் நிகழ்வு  லாங் பீச் என்ற இட்த்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்  மற்றும் அதன் தோழமை நிருவனம் “TEDActiveன் நிகழ்வு  பாம் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் நடைபெறும். இரண்டு மாநாடுகள் 2014 இல் நடைபெற உள்ளன. அது முறையே, லாங் பீச் மற்றும் பாம் ஸ்பிரிங்ஸில் இருந்து வான்கூவர் மற்றும் விஸ்லரை வரை அதன் பயணம் செல்ல வேண்டும். டெட் நிகழ்வுகள், பேச்சு வார்த்தைகளின் தொகுப்புகள் நேரடி ஸ்ட்ரீமிங்கில் வழங்கி, அமெரிக்கா முழுவதும், ஐரோப்பா மற்றும் ஆசியாவிலும் நடத்தப்படுகின்றன. அதில் பங்கு கொள்ளும் பேச்சாளர்கள் பெரும்பாலும் கதைசொல்லல் மூலம், அறிவியல் மற்றும் பண்பாட்டு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி உள்ள தலைப்புகளை ஒரு பரவலான உரையாற்றல் மூலம் அவர்கள் மிகவும் புதுமையான மற்றும் ஈர்க்கும் வழிகளில் தங்கள் கருத்துக்களை முன்வைக்க 18 நிமிடங்கள் அதிகபட்சமாக வழங்கப்படும். கடந்த சொற்பொழிவுகளில் பங்கேற்றவர்களில் பில் கிளின்டன், குட்டால், மால்கம் கிளாட்வெல், அல் ​​கோர், கார்டன் பிரவுன், ரிச்சர்ட் டாக்கின்ஸ், பில் கேட்ஸ், கூகுள் நிறுவனர்கள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின், மற்றும் பல நோபல் பரிசு வென்றவர்களும் அடங்குவர். டெட் தற்போதைய பொருட்காட்சி நிலைய பல்கலைகழகத்தின் மேற்பார்வையாளர் பிரிட்டிஷ் முன்னாள் கணினி பத்திரிகையாளர், பத்திரிகை வெளியீட்டாளர் கிறிஸ் ஆண்டர்சன். நமது நாட்டின் ப்ரதிநிதியாக டாக்டர் ஹெக்டே மேலைநாட்டு மருந்துகள் இல்லாமல் எவ்வாறு மருத்துவம் செய்யலாம் என்ற அரிய தலைப்பில் சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.

TED.com மூலம் ஜூன் 2006 முதல் ஒரு பேச்சுவார்த்தை ஒதுக்கீட்டின் மூலம் “நான்கமர்ஷியல் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ், இலவசமாக  ஆன்லைனில் பார்க்கும் உரிமம் வழங்கப்பட்ட்து.  இலவச ஆன்லைனில் மே 2013 வரை, 1,500 க்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் கிடைக்குமாறு வலைத்தளத்தைப் படைத்துள்ளனர்.. ஜனவரி 2009லிருந்து  நவம்பர் 13, 2012 வரை 50 மில்லியன்வரை இந்த வலைத்தளத்தை கண்டு கேட்டு பயனடைந்துள்ளனர். டெட் பேச்சுவார்த்தைகள் உலகளவில் ஒரு பில்லியன் மடங்கு பார்த்தோம் என்றும் இன்னும் வளர்ந்து வரும் உலக பார்வையாளர்களை பிரதிபலிக்கும் என்றும் அதன் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
தூர்தர்ஷனின் முன்னாள் இயக்குனர் திரு.H.ராமக்ருஷ்ணனின் ஒளிப் பதிவினை TED.comல் கண்டேன்; கேட்டேன்; ரசித்தேன்; அவர் தனது வாழ்க்கையில் பல சாதனைகளை ஆற்றியுள்ளார். 
மனோ திடம், முயற்சியில் அயராமை, பொது வாழ்வில் கிடைத்த புகழ்ச்சியால் இறுமாப்பு அடையாது எளிய வாழ்க்கை வாழுதல் என்ற பல நற்பண்புகள் உடைய எங்களது திரு.HR அவர்கள்  தொலைத் தொடர்பு கண்காட்சியில் உலகளாவிய புகழ் பெற்ற ஒரு நிறுவனம் [TED - Technology Entertainment Design  (Ideas Worth Spreading)] இவரது சாதனைகளைக் கண்ணுற்று இவருக்கு அளித்த ஒரு சந்தர்பத்தை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, பிறர் பயனடையுமாறு ஒரு சிறப்புரை ஆற்றியுள்ளார்.
ஆட்டோமாமா என்று எனது குடும்ப உறுப்பினர்களும், நண்பர் குழாமும் அன்புடன் அழைக்கும் திரு ராமக்ருஷ்ணன், நகைச்சுவையுடன் இனிமையாகப் பழகும் ஒரு அரிய மனிதர்.
திரு.HR அவர்கள், பூஜயஸ்ரீ நாதமுனி நாராயண ஐய்யங்காரின் முக்கிய சீடராக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதில் மிகவும் பெருமைப்படும் இவர், உலகம் அறியும் வண்ணம், இவருக்குக் கிடைத்த இந்த அறிய சந்தர்ப்பத்தை எல்லோரும் மெச்சும் வண்ணம் இந்த நிகழ்ச்சியினை தொகுத்து அளித்ததற்கு எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள். உலகளாவிய புகழ் உங்களுக்குக் கிடைத்ததை கண்டும், நிகழ்ச்சியை தொகுத்து அளித்த்தை கேட்டும் நாங்கள் எல்லோரும் பெருமைப் படுகிறோம். 

VIRACHITHA CHADUVA - 20th ASHTAPATHI

20வது அஷ்டபதி
ஸுசிரம் அனுநயனே ப்ரீணயித்வா ம்ருகாக்ஷீம்
கதவதி க்ருதவேஷ கேஸவே குஞ்ஜ ஸய்யாம்
ரசித ருசிர பூஷாம் த்ருஷ்டி மோக்ஷே ப்ரதோஷே
ஸ்புரதி நிரவஸாதாம் காபி ராதாம் ஜகாத
இந்த அஷ்டபதியை ஆரம்பிக்கும் பொழுது, நாடக பாணியில் ஒரு முன்னுறையாக இரவின் வருகையையும், ராதையின் அலங்காரத்தையும் விவரித்து, சிறிது காலம் பிரிந்த ராதையும் க்ருஷ்ணனும் எவ்வாறு பிரிவை விடை கொடுத்து அனுப்புகிறார்கள் என்பதே சாரம்.
இது வஸந்த ராகத்தில் யதி தாளத்தில் பாடப் படவேண்டுமென்று மூலக்ரந்தத்தில் சொல்லப்பட்டதாக 1940ல் ப்ரஸுரித்த ஒரு சுவடி ரூபத்தில் உள்ள புத்தகத்தில் உள்ளது. மேலும் அந்த புத்தகத்தில் உள்ள சாரம்சம் பின்வருமாறு:
இந்த அஷ்டபதியுடன் முடிவடையும் “ஸ்ரீஹரிதாள ராஜி ஜலதர விலஸிதமென்ற 20வது ப்ரபந்தத்தின் லக்ஷண ஸ்லோகத்தில் இதற்கு நந்தமென்ற ராகம் ஏற்படுத்தியிருக்கிறது. தாளங்கள் முறையே ஆதி, ப்ரதிமண்டம், சதுர்மாத்ர மண்டம், அட்டம், வர்ணயதி, நவமாத்ரா மண்டம், நிஸ்ஸாரு, ஜம்பை, த்ருதமண்டம், ரூபகம், ப்ரதிதாளம், த்ரிபுட, ஏகதாளி என்று காணப்படுகிறது. கரஹளி, துண்டகிளி, புக்தா, கொம்பு (ஸ்ருங்கம்), சங்கு(சங்கம்), படஹம், ஹுடுக்கம், முரஜம், கரடா, ருண்டா, டமரு, டக்கா, பாடாவென்ற வாத்யங்களில் வாசிக்கப்படவேண்டும்.
எங்கள் குருநாதர் பஜனை ஸம்ப்ரதாயத்தில் பாடியபடி நான் பாடியுள்ளேன். இத்தனை வாத்யங்களை சொல்லியிருப்பதால், ஒரு மாதிரிக்கு, கேரள செண்டை வாத்யத்தின் ஒலிப் பதிவினை ஒரு குறுந்தகடு வாயிலாக சேர்த்து, அந்த லயத்திற்கு தகுந்தார்போல் பாடியுள்ளேன். இந்த முயற்சியில் ஸ்ருதி, தாள பேதங்கள், தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

Wednesday, September 25, 2013

Greatness of Thulsi in Narayana Theerthar's "Tharagam"

நாராயண தீர்த்தர் தனது தரங்களில் பல பாடல்களில் பல புராணங்களின் சாரத்தை பாடல் வடிவில் நமக்கு எளிய முறையில் அளிக்கிறார். முன் செய்த பிறவியின் செய்த நற்பயனால் ஆயர்பாடியில் மங்கையாகப் பிறந்த கோபிகை, கண்ணனை குறித்து நமஸ்காரம் செய்து இவ்வாறு கூறுவதாக இந்தப் பாடலை எழுதியுள்ளார்.

 ராகம் பிலஹரி                தாளம் ஆதி
பல்லவி
பூரய மம காமம் கோபாலா
அனுபல்லவி
வாரம் வாரம் வந்தனமஸ்து தவ வாரிஜதளநயன
சரணங்கள்
1. மன்யேத்வாமிஹ மாதவ தைவம்
மாயா ஸ்வீக்ருத மானுஷ பாவம்
தன்யைராக்ருத தத்வஸ்வபாவம்
தாதாரம் ஜகதாமதிவிபவம்.

2. ப்ருந்தாவனசர பர்ஹாவதம்ஸ
பக்த குஞ்ஜவன பஹுதரவிலாஸ
ஸாந்த்ராநந்த ஸமுத்கீர்ணஹாஸ
ஸங்கதகேயூர ஸமுதிததாஸ

3. மத்ஸ்யகூர்மாதிதச மஹிதாவதாரா
மதனுக்ரஹாதர மதன கோபாலா
வாத்ஸல்யபாலித வர யோகிப்ருந்த
வரநாரயணதீர்த்த வர்த்திதமோத
துளஸியின் மேன்மை பத்ம புராணத்திலும், ஹரி பக்தி விலாஸ நூலிலும் கூறப்பட்டுள்ளன. அதன் சாரத்தை தரங்கிணியில் இந்த பாடலின் இரண்டாவது சரணத்தின் மூலம் நினைவு படுத்திகிறார்.
இதன் மூலம் நாம் அறிந்த்து.
துளஸிச் செடியின் 
v  கீழ் பாகத்தில் கங்கை முதலான புண்யதீர்த்தங்கள் உள்ளன.
v  நடுபாகத்தில் அனைத்து தெய்வங்கள் வாசம் பண்ணுகின்றன.
v  மேல் பாகத்தில் எல்லா வேதங்களும் ஒலிக்கின்றன.
v  ப்ருந்தாவனம் அனைவராலும் பூஜிக்கப் படுகின்றன.
v  ப்ருந்தாவனம் உலகத்தையே தூய்மைப்படுத்துகிறது.
v  இலை மலர்களுள் மிகச் சிறந்த்தாகும்.
துளஸிச் செடியினை / இலையினை
v  ஒருவன் பார்த்தால் அவனது பாவக்குவியல்கள் அகலுகின்றன.
v  தொட்டவன் உடல் தூய்மை அடைகிறது.
v  வணங்கினால் பிணிகள் அகலுகின்றன.
v  நீரை ஊற்றினால் யமபயம் அகலுகிறது
v  வளர்த்தால் க்ருஷணரின் அருகாமையை அடைகிறோம்.
v  க்ருஷ்ணரின் திருவடிகளில் சேர்த்தால் மோக்ஷத்தை அளிக்கிறது.
v  கார்த்திகை மாத முப்பது நாட்களில் துளஸியை நட்டு வளர்க்கவோ, பார்க்கவோ, தொடவோ, த்யானிக்கவோ, வணங்கவோ, பூஜிக்கவோ செய்தால் ஒரு யுகத்தில் செய்த பாவம் அகலுமாம்.
துளஸி இதழின் / இதழ்களால்
v  நடுவில் கேசவனும்
v  நுனியில் ப்ரம்மதேவனும்
v  அடிகாம்பில் சிவபெருமானும் எப்போதும் இருக்கின்றார்கள்
v  விஷ்ணுவையும், சிவனையும் பூஜித்தால் மோக்ஷத்தை அடைகிறான்.

v  தானம் செய்தால் பித்ருக்களுக்கு அக்ஷய த்ருப்தியை அளிக்கும். கயா சிராத்த பயனைக் காட்டிலும் அதிக மடங்கு பலன் அளிக்கும்.

திருவொற்றியூர் நாராயணன்- (TIRUVOTTIYUR NARAYANAN)


திருவொற்றியூர் நாராயண நம்பூதிரி அவர்கள் 24 செப்டம்பர் 2013 அன்று இறைவனடி சேர்ந்தார். இவரைப் பற்றி கூறும்போது நம் நினைவுக்கு வருவது அவரது இனிமையான சங்கீதம், தைலதாரை போன்ற அவரது இனிமையான குரல் வளம், ஹார்மோனியத்துடன் இழைந்த சங்கீதம், திரு GNB அவர்களின் பல அபூர்வ ஸாஹித்யங்கள், இனிமையான பேச்சு, மற்றவர் மனதை புண்படுத்தாத ஒரு மனதிற்கு இதமான உரையாடல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

பிறர் ஆதரிக்காத தெரு நாய்கள், பூனைகள், சிறகு அடிபட்டு கீழே விழுந்த கழுகு என்று பல வாயில்லாத ஜீவன்களுக்கு இடம் அளித்து வளர்த்து வந்தார். அவரின் கருணை அறிந்து அவருடன் இருந்த நாய்களும் பூனைகளும் சண்டையிடவில்லை. அவருடன் இருந்த கிளியும் அந்த கழுகுடன் ஒற்றுமையாக இருந்தது என்றால் அவர் எவ்வாறு அந்த வாயில்லாத ஜீவன்களை வளர்த்து வந்தார் என்று நாங்கள் வியந்தோம்.

எங்களது குருநாதர் பூஜ்யஸ்ரீ நாராயண ஐயங்கார் அவர்களது நெருங்கிய நண்பர். திரு.ஜீ.என்.பாலசுப்பிரமணியன் அவர்களின் முக்கிய சிஷ்யர்களில் ஒருவர். திரு.H.ராமக்ருஷ்ணன், தூர்தர்ஷனின் முன்னாள் இயக்குனர், இவரின் சங்கீத ஆர்வலர். இவர் சங்கீதா (The Master Recording Company) மூலமாக “சங்கீதானந்தா என்ற பெயரில் திரு நாராயணன் அவர்களின் பாடல்களை ஒரு அருமையான ஒலி நாடா மூலம் பதிவு செய்துள்ளார். கீழ் கண்ட இணைய தளத்தின் மூலம் பெறலாம்/கேட்கலாம்.
திருவொற்றியூர் நாராயண நம்பூதிரி அவர்களின் மறைவு நம் எல்லோருக்கும், சங்கீத ஆர்வலர்களுக்கும் ஒரு பெரிய இழப்பு. இவரது ஆன்மா சாந்தி அடைய நாம் எல்லோரும் இறைவனைப் ப்ரார்த்திப்போம்.

Wednesday, September 18, 2013

Shree Ramachandra Kripalu Bhajamana - Goswami Thulasidass

காசியில் கங்கையில் மூழ்கி விசுவநாதரை தரிசித்தபின் ஓயாமல் ராம நாம ஜபம் செய்தார் துளசிதாசர். இரவில் தசாஸ்வமேத கட்டிடத்தில் படிகட்டில் உட்கார்ந்து ராமாயணம் சொல்வார். ஸாதுக்களும் அறிஞர்களும் கூடிக் கேட்டனர். ராமாயணத்தில் உள்ள ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் அவருக்கு விஸ்வரூபம் எடுத்து காட்சி தந்தன.உள்ளத்தில் ஒரே ஏக்கம் ராமனைக் காணவேண்டும் என்பதே. மக்கள் ப்ரவசனத்தில் வரும் நிகழ்ச்சிகளை நேரே நடந்த்து போல் உண்ர்ந்து பாகாய் உருகினர். 
தினமும் சரீர சுத்திசெய்தபின் மீதியுள்ள ஜலத்தை ஆலமரத்தில் கொட்டிவிடுவார். அந்த மரத்தில் வசித்து வந்த, துர்மரணம் அடைந்த ஆவி ஒன்று அந்த நீரைக் குடித்து விவேகம் அடைந்த்து. அந்த ஆவி அவருக்கு உதவி செய்ய நினைத்து வினவ அவரது ஒரே எண்ணமான ராமனை தரிசிப்பது என்பதைக் கேட்டார். அது மிகவும் சுலபமாயிற்றே. தினமும் வரும் அனுமானைக் கேளுங்கள் என்றது. துளசிதாஸருக்கு அதிசயம் ஆச்சரியம். ஆவி தொடர்ந்து கூறியது. உடம்பெல்லாம் வெண்குஷ்டம் வந்தவர் போல் வரும் அவர் நீங்கள் வரும் முன்னரே வந்து, கதை முடிந்து ஜனங்கள் திரும்பும் போது ஒவ்வொருவரையும் வீழ்ந்து வணங்கி விட்டு கடைசியில் செல்வார். அவரைப் பிடித்தால் உன் ராமரைக் காணலாம் என்றது.
அன்று இரவு சொற்பொழிவு ஆரம்பத்திலேயே துளசிதாஸர் கவனித்து விட்டார். தலையில் முக்காடுபோட்டுக் கொண்டு கடைசி வரிசையில் உட்கார்ந்து ப்ரவசனத்தில் மூழ்கியிருந்தார். அன்று ப்ரசங்கம் சபரி ராமரைக் காண சபரி வருவோரிடமெல்லாம் வினவும் கட்டம். எல்லோரிடமும் வினவி புலம்புகிறாள் என்றும்  ராமா என்னை ஏமாற்றிவிடாதே. எனக்கு நீதான் கதி. வழி காட்டமாட்டாயா என்று கதறுகிறாள் என்றும்  சொல்லி துளஸிதாசரும் கதறிவிட்டு  மூர்ச்சை அடைந்துவிட்டார். இதனைக் கண்ணுற்ற அனைவரும் ராம ராம என்று கோஷம். இட்டனர். வெகு நேரம் கழித்து  கண்விழித்துப் பார்த்தால் கண் முன்னே அனுமான் உள்ளார். அவரது காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, “அஞ்சனி புத்திரா எனக்கு ராமனைக் காட்டமாட்டாயா என்று கதறுகிறார். வேறு வழியில்லாது அவரை தோளில் சுமந்து கொண்டு விடு விடு என்று நடந்து வெளியெ செல்லுகிறார். பொழுது விடிந்த்து துளஸிதாசரை கீழே இறக்கிவிட்டு, “இதுதான் சித்திர கூடம். இந்த இடத்திற்கு  ராமகிரி என்று பெயர். ராமன் முதன் முதலில் வனவாசம் செய்த இடம். அதோ பாரும் மந்தாகினி. இங்கே உட்கார்ந்து ராம ஜபம் செய்யும் ராம தரிசனம் கிடைக்கும் என்றார்.
அனுமான் மறைந்து விட்டார். துளஸிதாசர் ராம ஜபம் சொன்னாரே தவிர அவரது மனம் பல சந்தேகங்களுடன் ராம ஜபத்தை ஜபித்தது. ராமர் மரஉரி தரித்து வருவாரா? ரதத்தில் வருவாரா. பீதாம்பரம் அணிந்திருப்பாரா. இலக்குவனுடன் வருவாரா? அனுமன் பொய் சொல்கிறாரா? என்ற பல சிந்தனைகளுடன் ராம ஜபம் நடந்தது.
மலைப்பாதை. ஒற்றையடிப் பாதை. இருபுறமும் புதர். அப்பால் ஒரு பாறாங்கல். அதன் மேல் நின்று கொண்டு ராம ராம என்று நர்த்தனமாடி கொண்டிருக்கிறார். அப்பொழுது இரண்டு குதிரைகளில் இரண்டு ராஜாக்கள்  வந்து கொண்டிருந்தனர். தலையில் தலைப்பாகை, அதைச் சுற்றி முத்துச் சரங்கள், கொண்டைமீது வெண்புறா இறகுகள். வேகமாய் வந்து சிரித்தபடி போய்விட்டனர். அவர்களைப்பார்த்த துளசிதாஸர் என் ராம லட்சுமணர்களுக்கு இவர்கள் ஈடாவாரா? என்று ராமனை த்யானித்தவாறே ராம நாமம் சொன்னார். சற்று நேரம் கழித்து அனுமன் வந்தார். ராம லட்சுமணர்களைப் பார்த்தீரா? உங்கள் முன் குதிரை சவாரி செய்து சென்றனரே?”
ஐயோ ஏமாந்து போனேனே என்று கதற ஆரம்பித்தார்.
ராமன் உம்மிஷ்டப்படி தான் வருவாரா என்ன? அவர் இஷ்டப்படி வரக் கூடாதா? என்று அனுமன் வினவினார்.
வாயுகுமாரா இன்னும் ஒரு முறை தயவு செய்யும். அவர்கள் எந்த வடிவத்தில் வந்தாலும் பார்த்து விடுகிறேன் என்றார்.
மந்தாகினி நதியில் நீராடி ராம ஜபம் செய்து அவர்களது வரவை எதிர்பாரும். ராமபிரான் உமக்கு அருளுவார் என்றார்.
மந்தாகினியில் குளித்து ராம ஜபம் செய்து கொண்டு ஆவலுடனும், பதட்ட்த்துடனும் இருந்தார். இரண்டு இளைஞர்கள் மந்தாகினி நதியில் ஸ்நானம் செய்து விட்டு இவரை நோக்கி வந்தனர். ஒருவன் நல்ல கருப்பு நிறம். மற்றவன் தங்க நிறம். தலையில் புது சடை. முகத்தில் பத்து பதினைந்து நாள் தாடி மீசை..
ஸ்வாமி! கோபி சந்தனம் இருக்கிறதா? இருவரில் ஒருவர் கேட்கிறார்.
இருக்கிறதே. தருகிறேன் துளஸீதாசர் பதில்
ஸ்வாமி எங்களிடம் கண்ணாடி இல்லை. நீங்களே எங்கள் நெற்றியில் இட்டு விடுங்களேன்.
அன்று அம்மாவாசை தினம். கருப்பான பைய்யனின் மோவாயைப்  பிடித்து கோபீ சந்தனம் இடுகிறார். அவன் கண்களில் இருந்த ஒளி அவரை மெய் மறக்கச் செய்த்து. அந்த வாலிபன் அவர் கையிலிருந்த சந்தனத்தை விரலில் எடுத்து தன் நெற்றியில் தீட்டிக் கொண்டு அவருடைய நெற்றியிலும் தீட்டினான்.
அவர்கள் உட்கார்ந்திருந்த துறைக்கு அருகே ஒரு மாமரம். அதன் மீது ஒரு கிளி கூவி பேச ஆரம்பித்த்து.
சித்திர கூடகே காடாபரப இ ஸந்தந் கீ பீர
துளஸிதாஸகே சந்தந கிஸே திலக தேத ரகுபீர
(சித்திரக் கூடத்துக் கரையில் சாதுக்கள் கூட்டம். துளஸீதாஸர் சந்தனம் இழைக்கிறார். ராமன் திலகமிடுகிறார்).
தாஸருக்கு சுயநினைவு வருகிறது. அவர்கள் இருவரையும் கட்டி அணைக்கிறார். மறுகணம் ராம் லட்சுமணர்களைக் காணோம்.
கிளி வடிவத்தில் வந்து ராம தர்சனத்தை உணர்த்தியவர் ஹனுமான்.
துளஸீதாஸர் தரையில் விழுந்து புரண்டு ஐயோ வந்தவர்களை சேவிக்கவில்லையே என்று அலற ஆரம்பித்தார்.
கவலைப்படாதே இனி உம்மை ராமன் விடமாட்டார். அவர் எப்படி இருந்தார் சொல்லும் பார்ப்போம் என்றார்.
துளஸீதாஸர் பாடினார்.
ஸ்ரீ ராம சந்த்ர க்ருபாளு பஜமன ஹரண பவ பய தாருணம்
நவ கஞ்ச லோசன, கஞ்ச முக, கர கஞ்ச பத கன்ஜாருணம்
கந்தர்ப அகணித அமித சபி நவ நீல நீரத ஸுந்தரம்
பட பீத மானோ  தடித ருசி சுசி நௌமி ஜனக ஸுதாவரம்
பஜ தீன பந்து தினேச தானவ தைத்ய வம்ச நிகந்தனம்
ரகு நந்த ஆனந்த கந்த கோஸல சந்த தசரத நந்தனம்
ஸிரமுகுட குண்டல திலக சாரு உதார அங்க விபூஷணம்
ஆஜானு புஜ சர சாப தர ஸங்ராம ஜித கர தூஷணம்
இதி வததி துளசிதாஸ சங்கர ஸேஷ முனி மன ரஞ்ஜனம்
மம ஹ்ருதய கஞ்ச நிவாஸ குரு காமாதி கல தல கஞ்ஜனம்
स्रिरामचन्द्र क्रुपालु भजु मन, हरण भव भय दारुण्
नवक्न्ज लोचन कन्ज मुख, कर कन्ज पद् कन्जारुण्
कन्द्र्प अगणित अमित छबि नव नील नीरद सुन्दरम
पट पीत मानहु तडित रुचिशुचि नौमि जनक सुता वरम
भजु दीनबनधु दिनेश दानव-दैत्य वम्श निकन्दनम्
रघुनन्द आनद कन्द कोसल चन्द दशरथ नन्दनम्
शिर मुकुट कुण्डल तिलक चारु उदार अन्ग विभुष्णम्
आजानु भुज शर चाप धर स्न्गाम जित खरदूषणम्
इति वदति तुलसीदास शन्कर शेष मुनिमन रन्जनम्
मम ह्रुदय कन्ज निवास कुरु कामादि खल दल गन्जम्


Sunday, September 1, 2013

Thiruppaavai - 24 - Andruiv_vulagam

திருப்பாவை-24 -அன்று இவ்வுலகம்
அன்று இவ் வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.