Monday, August 29, 2016

FAITH - HTIAF


Faith is like WIFI
IT IS INVISIBLE
BUT IT HAS THE POWER
TO CONNECT YOU
TO WHAT YOU NEED

31.देवे तीर्थे द्विजे मन्त्रे देवज्ञे भेषजे गुरो
यादृशी भावना यस्य सिध्दिर्भवति तदृशी

தெய்வம், புண்யதீர்த்தம், ப்ராமணன், மந்த்ரங்கள், ஜோதிடர்கள், மருத்துவர், குரு இவர்களிடம் ஒருவன் எப்படிப்பட்ட நம்பிக்கை வைக்கிறானோ, நம்பிக்கைக்கு ஏற்ற  வெற்றி கிடைக்கும்.


கடவுளிடம் நம்பிக்கை என்பதற்கு ஒரு நிகழ்வு ஒன்று இன்று நடந்தது. எங்களது குருநாதர் பூஜ்யஸ்ரீ நாதமுனி நாராயணன் ஸ்வாமிகள் பல ஆண்டுகளாக பூஜித்து வந்த “வேல் பிள்ளையார் செய்த அதிசயம், நம்பிக்கை பலனை அளிக்கும் என்ற பழம் சொல்லுக்கு இலக்கணமாக வழிவகுத்தது.

நாங்கள் வசிக்கும் அடுக்கு மனைகளில், ஒரு மனையில் குடியிருப்பவர்; ஒரு நடுத்தர வயதினர்; பொருளாதார ரீதியில் சற்று பின் தங்கியவர்; கடவுள் அளித்ததை நிறைவாகக் கொண்டு வாழ்ந்து வருகையில், அவருக்கு கடவுள் ஒரு சிறிய சோதனையை முன் வைத்தார். திடீரென்று நோய்வாய்ப்பட அவரை நகரத்திலுள்ள ஒரு பெரிய வைத்தியசாலையில் சேர்த்தனர். மூளையில் ஒரு இரத்த அடைப்புள்ளதென்று மருத்துவர்கள் சொல்ல, கவலையில் ஆழ்ந்தனர்.


எங்களுக்குத் தெரிந்த வைத்தியம் “வேல் பிள்ளையார் ஒருவர் தான். அந்த தம்பதியினரும் “வேல் பிள்ளையாரின் விபூதியை உள்ளும் வெளியிலும் உட்கொள்ள, மருத்துவ செலவையும் குறைத்து, நோயின் தன்மையையும் குறைத்து அவர்கள் வாழ்வில் மறுபடியும் ஒரு நல்ல வசந்தம் வந்தார்ப் போல செய்தார் எங்கள் “வேல் பிள்ளையார். பிள்ளையார் சதுர்த்தி இதோ வருகிறது. நாமும் அவரை துதிப்போம்.

Saturday, July 16, 2016

Nathamuni Narayana Iyengar Aaradhanam - 19th July 2016 - நாதமுனி நாராயண ஐயங்கார் ஆராதனை




 शरीरं सुरूपं तथा वा कलत्रं यशश्र्चारु चित्रं धनं मेरुतुल्यं
मनश्र्चेन लग्नं गुरोरङ्घ्रिपद्मे ततः किं ततः किं ततः किं ततः किं ||1
One’s physique may be superb, one’s consort likewise, one’s reputation resplendent and renowned, and one’s riches as high as Mount Meru; yet if one’s mind be not centred upon the lotus feet of the Guru, what then, what then, what then?
कलत्रं धनं पुत्रपौत्रादि सर्वं गृहं बान्धवाः सर्वमेतद्धि जातम्
मनश्र्चेन लग्नं गुरोरङ्घ्रिपद्मे ततः किं ततः किं ततः किं ततः किं ||2
Wife, wealth, sons, grandsons and all such; home and kindred; all these things maybe there; yet if one’s mind be not centred upon the lotus feet of the Guru, what then, what then, what then?
षडङ्गादिवेदो मुखे शास्त्रविद्या कवित्वादि गद्यं सुपद्यं करोति
मनश्र्चेन लग्नं गुरोरङ्घ्रिपद्मे ततः किं ततः किं ततः किं ततः किं || 3
The Vedas with their six limbs and the knowledge of all sciences may be on one’s lips; one may possess the poetic gift and may compose fine prose and poetry; yet if one’s mind be not centred upon the lotus feet of the Guru, what then, what then, what then?
विदेशेषु मान्यः स्वदेशेषु धन्यः सदाचारवृत्तेषु मत्तो न चान्यः
मनश्र्चेन लग्नं गुरोरङ्घ्रिपद्मे ततः किं ततः किं ततः किं ततः किं ||4
“I am honoured in other lands and I am prosperous in my homeland; in the paths of righteous conduct there is none who surpasses me”, thus one may think; yet if one’s mind be not centred upon the lotus feet of the Guru, what then, what then, what then?
क्षमामण्डले भूपभूपालवृन्दैः सदासेवितं यस्य पादारविन्दं
मनश्र्चेन लग्नं गुरोरङ्घ्रिपद्मे ततः किं ततः किं ततः किं ततः किं ||5
 One may be constantly extolled and one’s presence highly honoured by hosts of emperors and rulers of this world; yet if one’s mind be not centred upon the lotus feet of the Guru, what then, what then, what then?
यशो मे गतं दिक्षु दानप्रतापा जगद्वस्तु सर्वं करे यत्प्रसादात्
मनश्र्चेन लग्नं गुरोरङ्घ्रिपद्मे ततः किं ततः किं ततः किं ततः किं || 6
“My repute has travelled in all directions through my philanthropy and prowess; all the things of this world are in my hands as rewards for my virtues”, yet if one’s mind be not centred upon the lotus feet of the Guru, what then, what then, what then?
न भोगे न योगे न वा वाजिराजौ न कान्तामुखे नैव वित्तेषु चित्तं
मनश्र्चेन लग्नं गुरोरङ्घ्रिपद्मे ततः किं ततः किं ततः किं ततः किं ||7
The mind may have turned away from external delights through dispassion and from attainments like Yogic concentration, possessions like horses and the like, the enchanting face of the beloved, in short, the entire wealth of the earth; yet if one’s mind be not centred upon the lotus feet of the Guru, what then, what then, what then?
अरण्ये न वा स्वस्य गेहे न कार्ये न देहे मनो वर्तते मे त्वनर्घ्ये
मनश्र्चेन लग्नं गुरोरङ्घ्रिपद्मे ततः किं ततः किं ततः किं ततः किं ||8
The mind may have lost its charm to live in forests, and likewise in the house; may have lost all desire to achieve whatever; even the concern for the body’s welfare may have been outlived; the most invaluable treasure of the world may not hold any allurement; yet if one’s mind be not centred upon the lotus feet of the Guru, what then, what then, what then?
गुरोरष्टकं यः पठेत्पुण्यदेही यतिर्भूपतिर्ब्रह्मचारी च गेही
लभेद्धाञ्छितार्थं पदं ब्रह्मसंज्ञं गुरोरुक्तवाक्ये मनो यस्य लग्नं ||
Whoever reads, studies and recites this collection of eight verses on Guru and remains devoted and attentive to the sayings of the Guru, he, no matter if he is a holy person, ascetic, king, neophyte, or householder, attains his coveted object, namely the supreme abode of Brahman, the unassailable seat of immortality.



Thursday, June 30, 2016

Shadow and Friendship

आरम्भगुर्वी क्षयिणी क्रमेण लघ्वी पुरा वृद्धिमती च पश्चात् ।
दिनस्य पूर्वार्धपरार्धभिन्ना छायेव मैत्री खलसज्जनानाम्  ॥

ஒருநாளின் முற்பகுதி என்ற காலையில் பெரிதாய் இருந்து க்ரமமாய் சிறிதாகியும்,  பிற்பகுதி என்ற மாலையில் சிறிதாக இருந்து பின்பு வ்ருத்தியடையும் நிழல் மாதிரி, கெட்டவர்கள் நல்லவர்கள் நட்பு அமையும் 
பர்த்துருஹரி என்ற ஸ்மஸ்க்ருத புலவர் 
தனது நீதி ஸஹஸ்ரத்தில் அன்றே சொன்னதை 
மேலை நாட்டவர் இன்று வண்ணமயமாய் 
வார்த்தை ஜாலங்களுடன் கூறுவர்.

Tuesday, April 19, 2016

BAGWAN KRISHNA alone can solve puzzles - Sisupal Vadham

Courtesy "Amar Chitra Katha"
இந்தப் படத்தைக் கண்டவுடன் நம் நினைவில் வருபவை அந்நாளில் நாம் தொலைக்காட்சியில் கண்ட சிசுபால வதம். நம் கண்முன் பார்ப்பது போல் ஒரு நிகழ்வைக் கொண்டுவந்துள்ளது. மொழி ஹிந்தியானாலும் நம்மால் ஒவ்வொரு சம்பாஷணையையும் நம்மால் உணரமுடிகிறது என்றால், காட்சி என்பது நம்மை எவ்வாறு ஈர்க்கின்றது என்பதை அறிந்து கொள்ளலாம். 
உடனே நம் மனதில் எழுபவை.
நல்லதொரு யாகத்தில் சிசுபாலனுக்கு அப்படியரு நிலைமை ஏன் ஏற்பட வேண்டும்? ஜோதிட சாஸ்திர வல்லவனான சகாதேவன்தானே யாகத்துக்கு நாள் குறித்தான்? இப்படியரு உயிர்ப்பலி
நிகழக் காரணமான கெட்ட நாளில், கெட்ட வேளையில் அவன் ஏன் நாள் குறிக்க வேண்டும்? அதே நேரம், சிசுபாலன்தான் முறை தவறி நடந்தான் என்றாலும், தர்மபூமியான யாகசாலையை கண்ணன் ஏன் யுத்த பூமியாக்கி ரத்தம் சிந்த வைக்க வேண்டும்? சிசுபாலனைக் கொல்ல அதுவா இடம்? அதுவா தருணம்? இது தர்மமா?
இப்படியெல்லாம் பல கேள்விகள், தருமன் நடத்திய ராஜசூய யாகம் முடிந்ததுமே எழுந்தன

ஆனால், கண்ணன் அந்தக் கேள்விகளுக்கு அப்போது பதிலளிக்கவில்லை. அதே கேள்விகளைத்தான் ராஜசூயம் நடந்து, பல வருடங்கள் கழித்து உத்தவர் கேட்டார். அப்போது கண்ணன் தெளிவான பதில் தந்தான்.
சிசுபாலன் பிறப்பால் உயர்ந்தவன். வாழ்க்கை அமைப்பாலும், தீய ஒழுக்கங்களாலும் பண்பிழந்தவன். அவன் தாய் நல்லவள். கண்ணனிடம் நன்மதிப்பும் பக்தியும் கொண்டவள். தன் மகன் எப்படியாவது திருந்தி நற்கதி பெற வேண்டும் எனத் தவம் செய்தாள். 'அவன் தவறாக நடந்தாலும், அவனுக்குக் கொடிய தண்டனை தர வேண்டாம்'' எனக் கண்ணனிடம் கேட்டுக் கொண்டாள். 'அவன் நூற்றெட்டு முறை தவறு செய்வதைப் பொறுப்பேன். அதற்கு மேலும் தவறிழைத்தால் தண்டனை தப்பாது' என்று கண்ணன் சிசுபாலனின் தாயிடம் கூறியிருந்தான்.
'அப்படியே என் மகன் சிசுபாலன் தண்டனை பெற்றாலும், அவனை மன்னித்து மோட்ச சாம்ராஜ்யம் நல்க வேண்டும்'' என்று அடுத்ததாக வரம் கேட்டாள் சிசுபாலனின் தாய். விசித்திரமான வரமானாலும், அந்த வரத்தைத் தந்து வாக்களித்தான் கண்ணன்.
இதை நிறைவேற்றுவது எளிதல்ல. தீமைக்குத் தண்டனையும், நன்மைக்கு உயர்வும் நல்குவதே தர்ம நெறி! சிசுபாலனோ நன்மை எதுவுமே செய்யாதவன். அவனுக்கு மோட்சம் கிட்டுவது எப்படி? இதுதான் பிரச்னை.
கண்ணன் ஒருவனால்தான் இந்தப் பிரச்னைக்கு முடிவு காண முடியும். ராஜசூயம் எனும் சிறப்பான யாகத்தில் சிசுபாலன் பங்கு கொள்ளும் வாய்ப்பைப் பெற்றான். முனிவர்கள் ஓதிய மந்திர பலத்தாலும், தூவிய அட்சதையாலும், வழங்கிய ஆசீர்வாதத்தாலும், தெளித்த புனித நீராலும், ஓரளவு புனிதப்பட்டிருந்தான் சிசுபாலன். யாக அக்னியில் தோன்றிய தேவதைகளின் அனுக்கிரகம், அவன் மீதும் விழுந்திருந்தது. சேர்த்த புண்ணியங்களை அவன் கரைத்துவிடும் முன்பே, அவனைக் கரையேற்ற விரும்பினான் கண்ணன். அப்போதுதான் சிசுபாலன் கண்ணனைத் திட்ட ஆரம்பித்தான். அவன் திட்டிய வார்த்தைகளை, தன்னை பூஜித்த மந்திரமாக, - நூற்றெட்டு அர்ச்சனைகளாக ஏற்றுக் கொண்டான் கண்ணன்.
இதன்மூலம் நிந்தனையையே ஸ்துதியாக ஏற்றுக்கொண்டு, அந்தப் புண்ணியமும் சிசுபாலனைச் சேர வழி செய்தான் கண்ணன். காலம் கடந்தால் அவன் மேலும் பாவம் செய்துவிடுவான்; அதோடு, அவன் மோட்சம் செல்லும் தகுதி பெற புனிதமான இடத்தில் உயிர் நீக்க வேண்டும். புனிதமான ஆயுதத்தால் மடிய வேண்டும். மகா சுதர்சனம் அவன் சிரத்தை அறுக்க, அவன் உடல் ராஜசூயமான பூமியில் விழ, அந்தப் புண்ணிய பலனால், அவன் ஆன்மா மோட்சமடைந்தது. தீமைக்கும் நன்மை செய்யவே யாக பூமியை யுத்த பூமியாக்கினான் கண்ணன். உத்தவர் கேட்ட மற்ற கேள்விக்கும் கண்ணன் பதில் தந்தான்.
'ராஜசூயத்துக்கு நாள் பார்த்தவன் சகாதேவனில்லை; கண்ணனேதான்!’ - இதுதான் அந்தப் பதில்.
சகாதேவனுக்கு தன் சாஸ்திரக் கணக்கைவிட கண்ணனின் சங்கல்பக் கணக்கில் நம்பிக்கை இருந்தது. அதனால் கண்ணன் குறித்த நாளையே ராஜசூயத்துக்கு ஏற்பாடு செய்தான்.
'கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், கண்ணன் சொல்வதும் செய்வதுமே மெய்என்ற உண்மையை ஏற்கெனவே உணர்ந்திருந்த உத்தவர், அதனை மேலும் உறுதிப்படுத்திக்கொண்டார்.
-  நன்றி தினமலர் 
-----  நன்றி அமர் சித்ரகதா