Tuesday, December 8, 2009

Are you more than 50


“Are you now more than 50?  Try to spend some time before computer.  Spend atleast few hours in browsing, hear some soft divine music, watch some videos and pictures. Then only the neurons in the brain cell will start functioning actively which will solve or minimize the sufferings from the deceases. This is being tried in Western Coutries and scientists agree with this fact”.  I read this article in one of the newspaper. Try and be benefited!

Monday, December 7, 2009

Women Are Happier Than Men


Women usually enjoy the things that they do with their time more than men do. Experts found that the biggest negative for women is doing household chores. They spend about 90 minutes in the kitchen  everyday. Women seem more happier and satisfied in their lives than the men. Dr. Patulny tries to find out the reason and believes that men tend to be more socially disconnected because they spend less time with family and friends and are more likely to see themselves as loners.
Read more here about their happiness.

என்னுடைய சங்கீத குருநாதர்

அன்றொரு நாள் காலைப் பொழுது துளசிங்கப் பெருமாள் கோயில் முட்டு சந்திற்கு எதிரே உள்ள வீட்டின் கூடத்தில் சிறியவரும் பெரியவ்ருமாக இருபது பேர் நெருக்கி உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்தனர். சங்கீத கலாநிதி டாக்டர் ராமநாதன் அனுபவித்து இசையை போதிக்க சிஷ்யர்கள் மனம் உருகி அந்த இசையை பயின்று கொண்டிருந்தனர்.  அதன் நடுவே ஒரு சத்தம். பட பட பட பட .... கட கட கட கட .....அங்கு அருகே உள்ள மாடிப் படியில் ஒரு பிளாஸ்டிக் குவளை உருண்டு வந்தது. உடனே அங்கிருந்த ஒரு வயலின் விதுஷியை "இது என்ன தாளம்" என்று வினவி ஒரு குழந்தைத்தனமான ஒரு சிரிப்பு.  மற்றொரு குழந்தை உள்ளே வருகிறாள். உனக்கு இன்று என்ன சொல்லித் தரவேணும் என்று வினவ அந்தக் குழந்தை நெளிந்துகொண்டே சண்டை வரிசை. உடனே அவர் "யாருடன் சண்டை?" உடனே கொல் என்று ஒரு சிரிப்பு. மாஸ்டர் அவர்களும் ஒரு சிரிப்பு.  இன்று எல்லோரும் கல்யாணி ராகத்தில் ஜண்டை வரிசையை பாடலாம். ஆல் இந்தியா ரேடியோவில் பாடும் எ கிளாஸ் பாட்டு விதுஷிகியும் எங்களுடனும் அந்த குழந்தையுடனும்  பாடுகிறார்கள்.
கேட்பதற்கு ரம்யமான பாட்டு. பார்பதற்கு அதை விட ரம்யமான காட்சி. அனுபவிக்க ஒரு தெய்வீகமான ஒரு சூழ்நிலை . ஆஹா இந்த நிகழ்வு இனிமேல் கிடைக்குமா.
அவரைப் பற்றி மேலும் சில தகவல்களை நமக்கு அவரது பெண் கீதா பென்னெட் அவர்கள்  கல்கியில் அளித்த சில தகவல்களை இங்கே பார்க்கலாம்

சிரித்தருள்வாயே - பாடல்


இது ஓர் சங்கீதக் காலம் 
இன்றைய பாடல் "சிரித்தருள்வாயே"
அரங்கேறும் இடம் சென்னை


பாடல்களை புனைந்தவர் கோபுலு 
ராகம் ஹாச்யப்ப்ரியா 
தாளம் குறும்புசாபு

நீயா நானா


ஆண்கள் பேசும் பத்து பாயிண்ட்ஸ் 
1.நீ சொல்றது மூளை கெட்டதனமாய் இருக்கிறது.
2.உப்புச் சப்பு இல்லாத விஷயத்துக்கு கவலைப் படுகிறே.
3.ஒண்ணுமில்லாததை ஊதிப் பெரிசாக்கரே.
4.நீ சொல்றது ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது.
5.நான் அதைச் சொல்லவே இல்லே.
6.ஆனா அந்த அர்த்தத்திலே சொல்லலே.
7.இது இவ்வளவு பிரச்சனையாக ஆக்கி இருக்கவேண்டாம்.
8.இது நியாயமே இல்லே .
9.ஏன் இதை நாம் அனுபவிக்கவேணும்?
10.பேசாம விவாகரத்து பண்ணிக்கலாம்.


பெண்கள் பேசும் பத்து பாயிண்ட்ஸ் 
1.நான் சொல்றதை காதுலே போட்டுக்கவே மாட்டேங்கறீங்க.
2.என்னை புரிஞ்சிக்கவே மாட்டேங்கறீங்க.
3.நீங்க எப்படி ….அப்படிச் சொல்லலாம்.
4.நீங்க நெனைச்ச மாதிரி நான் நினைக்கலே 
5.ஒரு பொண்ணோட இடத்துலே இருந்தாதான் என் ப்ரச்சனைய புரிஞ்சிக்க முடியும் 
6.ஒங்க கூட பேசவே பயமா இருக்கு.
7.……….வீட்டுகாரரெல்லாம் எத்தனை வேலையை இழுத்துப் போட்டுண்டு பண்றார்.
8.நீங்க ஏன் பண்ணலை
9.நீங்க அதை என்கிட்டே ஏன் சொல்லலை.
10.உங்ககூட இனிமே என்னாலே குப்பை கொட்ட முடியாது.


உணர்வுகளுக்கு அதிக இடம் கொடுக்கும் ஆண் மூளைக்கு பெண்ணின் ஒவ்வோர் செயலும் கேலிக்கு உரியதாகி விடுகிறது. உணர்வு ரீதியாக எதையும் எதிகொள்ளும் பெண்ணின் மூளைக்கு ஆணும் தன்னைப்போலவே சிந்திப்பான் என்ற எதிர்பார்ப்பும், அதனால் ஏமாற்றமும் மிஞ்சி சண்டையும் பின் விவாகரத்து வரை கொண்டு செல்லும் விளைவும் ஏற்படுகிறது  உணர்வுகளை எல்லாம் கொட்டித் தீர்த்துவிட்டால் பெண் மனம் அமைதி அடைந்து விடுகிறாள். உணர்வுகளுக்கு அதிக இடம் கொடுக்காமல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது ஆணுக்குப் பிடிக்கும். கவலைப் படவும் ஆதங்கப் படவும் உனக்கு உரிமை இருக்கு. மொதல்ல நீ சொன்னதை யோசிச்சுப் பார்கிறேன். அப்புறம் இதைப்பத்தி ரெண்டுபேரும் பேசுவோம். எனக்கு கொஞ்சம் டைம் கொடு. இது போன்ற வார்த்தைகள் பிரச்சனையை எளிதாக்கும். 
கல்கி இதழிற்காக Dr.A.V.ஸ்ரீனிவாசன் கூற அதனை கற்கண்டாக லக்ஷ்மி மோகன் எழுத்தில் கொடுத்ததை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் 

Friday, December 4, 2009

ராமநாம மகிமை



வீரமணி என்ற அரசன் சிறந்த சிவ பக்தன். மிகுந்த பலசாலி. சிவன் அவனுக்கு நேரே காட்சி தருவதுண்டு. ராமர் அஸ்வமேத யாகம் செய்யும் தருணத்தில் யாகத்தில் விடப்பட்ட குதிரையை எல்லா தேசங்களிலும் பவனி வந்தபோது அனைத்து அரசர்களும் அதை வணங்கினார்கள். அனால் வீரமணி பணிய மறுத்தான்.  குதிரையுடன் வந்த பரதன்,சத்ருக்னன், ஆஞ்சநேயர் என அனைவரையும் எதிர்த்தான். மற்றவர்கள் மூர்சையாகிவிழுந்தபோது ஆஞ்சநேயர் வீரமணியை எதிர்த்து போராடி விரட்டி அடித்தார். வீரமணி பரமசிவனையே அழைத்து வந்து அனுமனிடம் போரிடச்செய்தான். அனுமன் ராம நாமத்தையே துணையாகக் கொண்டதால் ஈஸ்வரனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. முடிவில் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று ஈஸ்வரன் கேட்க அனுமன் "கீழே மூர்ச்சையாகிக் கிடக்கும் உடல்களை பாதுகாத்துக் கொண்டிருங்கள்.  நான் சஞ்சீவி பர்வதத்தை கொண்டுவருகிறேன் என்றார். சிவன் சிரித்துவிட்டு உன்னிடம் உள்ள ராம நாமத்தினாலேயே இவர்களை எழுப்பலாமே என்றார். அனுமன் வெட்கித் தலை குனிந்தார்.
"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
 
திண்மையும் பாபமும் சிதைந்து தேயுமே 
 ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே
 இம்மையே ராமா என்ற இரண்டெழுத்தினால்"  - கம்பர் 

Thursday, December 3, 2009

அனுமனின் வாலின் பெருமை


வாயுகுமாரனின் வாலில் பொட்டு வைத்து வணங்குவதன் பெருமை என்ன?
அனுமன் சூரியனிடம் சிக்ஷை பெற்று பாடம் கேட்டு வலம் வந்த போது மற்ற க்ரகங்கள் சூரியனையும் அனுமனையும் வலம் வந்தன.
இலங்கையில் ராவணன் அனுமனின் வாலுக்கு தீ வைத்தபோது சீதாபிராட்டி வேண்டியதால் வெம்மையும் குளிர்ச்சியாகவே இருந்தது. நெருப்பினால் ஏற்படும் காயங்களிலிருந்து குணம் அடைய அனுமனை ஆராதியிங்கள்.
ராவணனின் சபையில் அனுமன் தன் வாலால் ஏற்படுத்திய சிம்மாசனத்தில் அமர்ந்தார். அமர்ந்து ராவணின் கர்வத்தை அடக்கினார்.
பீமன் திரௌபதிக்காக சௌகந்திமலர் கொண்டுவர சென்ற போது அனுமன் பீமனின் கர்வத்தை தன் வாலின் மூலம் உணர்த்தி அவன் வீரம் பெருக ஆசீர்வதித்தார்.
அனுமனின் பெருமை அவரது வாலைப் போலே நீண்டுள்ளது. 
இந்தப் பெருமைகள் பக்தியில் நான் பக்தியோடு படித்தது. 
அனுமனின் வாலிற்கு மேலும் எத்தனையோ சிறப்புகள் உள்ளன. நீங்களும் இதனுடன் சேர்க்கலாம்.