Friday, July 25, 2014

இனிது! இனிது! மழலைச் சொல் இனிது!


நற் செய்திகளைப் படிக்கும் பொழுது, அந்த செய்தி பிறர் அறிந்துருப்பினும், நாம் பிறருடன் அதனைப் பகிர்ந்து கொள்வதால், அந்தச் செய்திகளை மனதில் உள் வாங்கி அதனை அசைபோடுகிறோம். இச் செய்திகளை அறிந்திராத சிலர், என்னுடன் அதனை அனுபவித்து மகிழ்வர் என்ற நோக்கத்துடன் 
"தினம் ஒரு செய்தி
"பாகவதத்தின் ஏடுகள் சில" 
என்ற தலைப்புகளில் எழுதலாம் என்றுள்ளேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஊக்கம் இதனை மேன்மேலும் சிறப்புடையச் செய்யும்.


"திருமாலையை" தொண்டரடிப் பொடியாழ்வார் அவர்கள் அருளிச் செய்கையில் அரங்கன் தெரிந்து கொண்டே, கேட்டு அனுபவித்தாராம். எவ்வாறு என்றால்

கிம் ம்ருஷ்டம் ஸுதவசனம்
புனரபி ம்ருஷ்டம் ததேவ ஸுதவசனம்
ம்ருஷ்டாதபி ம்ருஷ்டதரம்
ததேவ பரிபக்வம் ஸுதவசனம்

சிறு குழந்தையின் மழலையைக் கேட்டு தகப்பனார் மகிழ்கிறார். பின் அவன் பாலகனாய் பேசும் போது மகிழ்ந்து அவனை ஊக்குவிக்கிறார். அதே பாலகன் யுவனாக உறையாற்றும் போது பெருமைப் படுகிறார். அதே போல் அரங்கன் தகப்பன் ஸ்தானத்தில் இருந்து கொண்டு, தனது யுவனான ஆழ்வாரின் திருமாலையைக் கேட்டு உகவை கொண்டாதாகச் சொல்வர்.

No comments:

Post a Comment