Tuesday, February 16, 2010

ராகஸ்ரீ ஸாஹித்யம்

ராகஸ்ரீ  ஸாஹித்யம்
ராகம் சாரமதி    தாளம் ஆதி
பல்லவி
உன்னருள் மழை பொழிந்தால் இந்த
உலகெங்கும் மகிழ்ந்தாடுமே – அம்மா
அனுபல்லவி
விண்ணும் மண்ணும் வணங்கும் ஈஸ்வரியே
மின்னும் சுடர் ஒளியே மதுரை மீனாக்ஷியே
சரணம்
அன்பு பயிர் தழைக்க அறமாம் செல்வம் கொழிக்க
இன்பமெனும் தென்றல் என்றும் இசை அளிக்க
புன்னகயோடென்றும் புவியோர் எல்லாம் விளங்க
புத்தம் புதுமை எங்கும் பூத்து குலுங்கவே


Download அவர் அருள்!

1 comment:

  1. சாரமதியில்அழைத்தால் மதுரை மீனாக்ஷியின்
    அருள் மழை பொழிவது திண்ணம்
    எண்ணத்தில் நிறைந்து வண்ணமயமாய் அமரும் அருமையான பாடல் வரிகள்

    ReplyDelete