Saturday, April 27, 2013

OH GOD! WHERE ARE YOU?


பலன் கொடுப்பது கடவுளே
சிறிது நாட்கள் முன் நான் எனது பால்ய நண்பர் நாராயணன் என்பவருடனும், யோகா குரு ஸ்ரீதர் அவர்களுடனும் களஞ்சேரியில் உள்ள வேத வித்யா குருகுலத்திற்குச் சென்றிருந்தோம். 
வேதங்களைப் பற்றிய பல உண்மைகளை, விஷயங்களை அங்கு கற்று கேட்டு அனுபவிக்கலாம். திரு.நாராயணன் அவர்கள் திரு. சீதாராம ஸாஸ்த்ரி என்பவரை அங்கு எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.  “ஸ்ருதி, ஸ்ம்ருதி, புராண ஸாரத்தைப் பற்றி பல புத்தகங்களை ஸாஸ்த்ரி அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். எந்தவிதமான ஆரவாரமோ விளம்பரமோ சிறிதும் இல்லாமல் ஒரு குருகுலத்தையும் நடத்தி பல புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். மாதிரிக்கு ஒரு புத்தகத்தை எனக்கு அளித்திருந்தார்கள். இருநூற்று அறுபது பக்கங்கள் கொண்ட அப்புத்தகம், பல ஆண்டுகள் குருகுல வாசம் செய்து கற்க வேண்டிய பல விஷயங்களை எளிய முறையில் நமக்கு தெரிவித்துள்ளது.
அதில் வந்துள்ள ஒரு விவாதம். அதன் மூலம் நமக்கு ஒரு செய்தி. கடவுள் எங்கே காட்டு என்று சொல்லும் ஒரு படித்த மடையனை மாடு துரத்தியது. தற்காப்புக்காக கோவிலுக்குள் நுழைந்தான். பலநாட்களாய் ஏங்கி எதிர்பார்த்த ஒரு நல்ல விஷயம் நடந்தேறிற்று. மெதுவாக கடவுளை நம்ப ஆரம்பித்தான். ஈஸ்வரனே பலன் கொடுக்கிறாரென்றால் பலன் ஏற்படும் காலத்தில் அவரே நேரில் வந்து கொடுக்கட்டுமே என்று கேட்கக் கூடாது. அப்படியே அவர் நேரே வந்தாலும் நம்மால் அவரை அடையாளம் தெரிந்து கொள்ளமுடியாது. சில பக்தர்களுக்கு அவரவர் உபாஸ்யமூர்த்தியாக ஆவிர்ப்பவித்து அனுக்ரஹம் செய்திருப்பதாகவும் புராணங்களிலும் பக்த சரித்திரங்களிலும் தெரிந்துள்ளது. இதற்கு ஏற்ற ஒரு நிகழ்வினை வெகு நயம் பட தமிழில் கொடுத்துள்ளார். பலரும் படிக்க ஏதுவாய் அதனது ஆங்கில மொழி பெயர்ப்பை கீழே கொடுத்துள்ளேன். நான் ரசித்தேன். உங்களது கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment