Friday, April 5, 2013

Agoris - Unique sadhus


வடமொழிச் சொற்களை நாம் கையாளும் பொழுது சொற்களின் அர்த்தங்களை சரியாக உணராமல் பயன்படுத்துகையில் அர்த்தங்கள் அனர்த்தங்களாக மாறுகிறது. துற்நாற்றத்தை முகர்ந்த நம்மவர்கள் நாற்றமடிக்குது என்பர். நாற்றம் என்பது மணத்தைக் குறிக்கும் சொல். கேவல் என்ற வடமொழிக்கு “மேல்நிலையானது என்று பொருள்படும். அதனை கேவலம் என்று தமிழில் தாழ்ந்த நிலைப்பாட்டிற்குச் சொல்லுவர். அதே போல் அகோரம் என்ற சொல் ரம்மியமான ரசிக்கத்தக்க நிலையினை உணர்த்தும். ஆனால் நாம் அகோரம் என்ற சொல்லை நடைமுறையில் தவாறாக கையாள்கிறோம்.
வடநாட்டு யோகிகளை அகோரிகள் என்பர்.அவர்களை கேவலமானவர்களாகச் சொல்லுவர். அதாவது தனித்தன்மை வாய்ந்தவர்கள். அவர்கள் கோரமற்றவர்கள். அதாவது அ-கோரி. அகோரிகள் பிணம் தின்னும் சாதுக்கள் என்றும் கூறுவர். தங்களை காணாமல் இருப்பதற்காகவும், எவரும் தங்களை பின்தொடர்ந்து அவர்களாது ஏகாந்தமான சூழ்நிலையைக் கெடுக்காமல் இருப்பதற்காகவும் அவர்கள் செய்யும் யுக்திகளில் ஒன்று பிணம் தின்பது போல் ஒரு ப்ரமிப்பை உண்டாக்குவது என்று ஒரு சாரார் கருத்து தெரிவித்துள்ளர்
நான் வங்காளத்தை ஆண்ட மன்னன், நான் இறந்த பிறகு எனது ஆட்சியை எனது மகனுக்கு கொடுக்காமல் எனது மைத்துனன் எடுத்து கொண்டான். பிரிடீஷ்  வைஸ்ராய் இதில் தலையிட்டு நீதி வழங்க வேண்டும்.  
விசித்திரமான இந்த வழக்கை கண்டு நீதிபதி குழம்பினார். தான் இறந்துவிடேன் என சொல்லும் அரசன் உயிருடன் இருக்கிறான் என்றால் யாருக்கு தான் குழப்பம் வராது. சொன்னவர் ஒரு அகோரி.
நான் வலையில் படித்த சுவையான செய்தியை இங்குள்ள பெட்டியில் கொடுத்துள்ளேன். படித்து ரசியிங்கள். இதனை எளிய தமிழில் எழுதி நாம் படிப்பதற்காக தொகுத்து அளித்தவர்க்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment