Monday, November 4, 2013

Gujarati Vikram Samvat 2070 Begins

தீபாவளி என்றவுடன் நாம் அறிந்த இதிஹாஸபுராணம் நாராயணன் நரஹாஸுரனை வதம் செய்த நாள் என்று. எனது நண்பர் அலுவலகத்தில் தீபாவளிக்கு முதல் நாள் பல இதிஹாஸ புராணங்களை படங்களுடன் வண்ணமயமாக சித்தரித்து அதற்கு பரிசுகள் வழங்குவது வழக்கமாம். ஒருவர் ராமாயணகாலத்தில் எவ்வாறு தீபாவளியை கொண்டாடினார்கள் என்று சித்தரித்தாராம். மற்றவர்கள் நகைத்தார்களாம். தீபாவளி க்ருஷ்ணாவதாரதில் தான் நடந்த்து. எந்தக் குழந்தையைக் கேட்டாலும் சொல்லும். இவருக்கு என்ன புத்தி பேதலித்து விட்டதா என்று வினவினார். தீப ஒளிப் பண்டிகையே தீபாவளி என்பர். ராமர் வனவாசம் முடித்து நாடு திரும்புகிறார். ராமர் இல்லாத அயோத்தியில் மக்கள் வசிக்க விரும்பாது நந்திக்ராமத்தில் இருந்த்தாக ஒரு செய்தி. ராமர் வனவாசம் முடிந்து பட்டிணப் ப்ரவேசம் செய்த நாளன்று தீப ஒளியால் அலங்கரித்து கொண்டாடினார்கள். அந்த நாளே தீபாவளி என்றார். சொல்லும் விதம் நன்றாக உள்ளது, சொல்லிய செய்தி மிகவும் கோர்வையாக உள்ளது. புதிய வ்ருத்தாந்தம்.
எனது உறவினர் ஒருவர் இன்றய நாளின் மகத்வத்தை வட நாட்டு பஞ்சாங்கத்தில் எவ்வாறு சொல்லுகிறார்கள் என்று சுட்டிக்காட்டினார். துலாமாத அமாவாசை மறுநாள் க்ருஷ்ணர் கோவர்தன மலைக்கு பூஜை செய்து இந்திரனின் கோபத்திற்கு உள்ளாகி கோவர்த்தன் மலையை தன் சுண்டு விரலால் தூக்கி கோபர்களை காப்பாற்றின புராணத்தை இன்றும் என்றும் சொல்லுவர்.
இன்றுதான் மஹாபலி பாதாள உலகத்திலிருந்து வெளியே வந்து பூலோகத்தை கண்ட நாள். இது விஷ்ணு அவருக்குத்தந்த வரம். அதனை பாலிபத்யாமி என்பர்.
நாம் எவரும் அமாவாசை ப்ரதமை தினத்தில் எந்த சுபகாரியத்தையாவது செய்வோமா? ஆனால் விக்ரமாதித்ய மஹாராஜா இன்றுதான்  முடிசூடினான் என்றும் ஒரு செய்தி உண்டு.
இன்று தான் குஜராத்திய மாநிலத்தின் விக்ரம ஸம்வாத் 2070 தொடங்குகிறது
நாம் கணினியின் வலைத்தளத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். இவ்வாறு எளிதில் செய்திகளை சேகரிக்க உதவுவதற்காக!

No comments:

Post a Comment