Wednesday, November 27, 2013

Raamaa ninnu namminavaaramu - Tygaraja


திரு.நாராயணஸ்வாமி நாராயணன் என்ற ஒரு அன்பர் புட்டபர்த்தியில் நடந்த ஒரு இசைத்தொகுப்பினை எனக்கு அனுப்பியிருநதார். இதனை உங்கள் அனைவருடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். நெற்றியில் குங்குமம் ஏன் வைத்துக் கொள்ளவேண்டும்? விநாயகர் முன் குட்டிக் கொண்டு, தோப்புக் கரணம் ஏன் போட்டுக் கொள்ளவேண்டும், விறட்டி கொண்டு ஏன் ஹோமம் செய்யவேண்டும் என்று கேட்கும் நம் குழந்தைகள், மேல் நாட்டிற்குச் சென்று, மேலை நாட்டவர் அதனை ஏன் செய்யவேண்டு, எப்படிச் செய்யவேண்டும் என்று ஆய்வுக்கட்டுரை எழுதியவுடன் அதனை நம்மவர் சிலர் பின்பற்றும் அவலம் நம்மிடயே உள்ளது. பலர் அதனை தெரிந்து கொண்டு செயல்படுகின்றனர். இன்றும் மேலை நாட்டில் நம்மவர் பலர் அன்று முதல் இன்றுவரை ஹிந்துமத கலாசாரங்களைப் பின்பற்றுகிறார்கள். பின்பற்றாத ஒரு சிலருக்கு இந்த கண்ணொளி ஒரு பாடமாக இருக்கும். அருமையான உச்சரிப்பு, நேர்தியான ஸ்ருதி சுத்தமான சங்கீதம். 
உலகத்தவரின் மங்கவரும் ராமா! நாங்கள் உன்னையே நம்பியுள்ளவர்களல்லவா? பாமரருக்கு எட்டாதவனே! உத்தம குணங்கள் நிரம்பியவனே! தயை பொழியும் கடைக்கண் பார்வையுடைவனே! மங்கள ஸ்வரூபனே! முனிவர் இதயமெனும் தாமரையை வட்டமிடும் வண்டு போன்றவனே.
உலகில் உள்ள அனைவர் இதயத்தாமரையை இப்பொழுது இந்த பாட்டின் மூலம் ராம நாமம் என்ற ரீங்காரம் எழுகின்றது. மேலும் பரவட்டும். 

No comments:

Post a Comment