Thursday, January 3, 2013

திருப்பாவை 15.எல்லே இளங்கிளியே!

எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்;
வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!
வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!
ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?’
எல்லோரும் போந்தாரோ?’ ‘போந்தார், போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.

No comments:

Post a Comment