Sunday, December 16, 2012

Margazhi Thingal - Tiruppavai 01


இன்று நந்தன வருட தனுர் மாதம் ஆரம்பம். 
மார்கழி மஹோத்ஸவம் இன்று தொடக்கம். 
ஆண்டாளின் முதல் பாசுரத்துடன் தொடங்கி நாமும் கொண்டாடலாம்.
01.திருப்பாவை
மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,
நீராடப்போதுவீர், போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வ சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏர் ஆர்ந்தகண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச்செங்கண், கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோரெம்பாவாய்.


1 comment:

  1. Beautiful singing and lovely slideshow chingappa. Thank you for a beautiful start.

    ReplyDelete