Sunday, December 30, 2012

Welcome 2013 A Happy & Prosperous Year for All


நம்பிக்கை என்பது நாம் பிறந்த மண், நாம் இருந்த கருவறையின் விசேஷம். நம்மை வளர்த்த பெரியவர்கள் நமக்கு கொடுத்த சீதனம். அதனை பல சமயம் பகுத்தறிவு, சீர் தூக்கிப்பார்க்கும் முதிர்ச்சி என்ற தவறான போர்வையில் நம்மை மாற்றிக்கொள்கிறோம்; தவறு ஏமாற்றிக் கொள்கிறோம். நம்மில் சிலரிடம் கேட்டபொழுது, எனக்கு சோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்று கூறுவார்கள். ஆனால் பிறர்க்குத் தெரியாமல் தன்னையும் தன் சுற்றார் நலன் பற்றி சோதிடரை அணுகி ஆராய்வார்கள். புது வருடம் பிறக்கப் போகிறது. இரண்டாயிரத்து பதிமூன்றாம் வருடக் குழந்தையின் க்ரஹ நிலையை கணித்து இங்கே கொடுத்துள்ளேன். நம்மில் தெரிந்தவர் பலனை எழுதலாம். அது மற்றவர்களுக்கு மனதிற்கு இதம் அளிக்கலாம். அது அவரவர் மனப்பக்குத்தைப் பொருத்தது.
(சென்னைப் பட்டினத்தின் விவரங்களை வைத்து குறிக்கப்பட்டுள்ளது)
எங்கள் குருநாதர் கூறுவார், “அதனை தெரிந்து கொள்வதால் தவறில்லை. எதிரே உள்ள பள்ளத்தில் எப்படி இருந்தாலும் விழுந்து அடி கிடைக்கப் போகிறது. அது அவரவர் வாங்கி வந்த வரன். க்ரஹ நிலை தெரிந்து அதற்குத் தக்கவாறு நடந்தால், அதனால் வரும் சிரமம் சிறிது குறைவாகத்தெரியும். அல்லது அதனின்று வெளிவர ஒரு வாய்ப்பை நமக்கு ஈசன் அருளுகிறான்என்பார்.
இதைப் பற்றி “இந்திரா சௌந்தர்ராஜன் எழுதியுள்ள ஒரு கட்டுரை என்னை மிகவும் கவர்ந்த்து. தினகரன் நாள் ஏட்டில வந்த இந்த கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி தினகரன்
2013 என்கின்ற புதுக்குழந்தையை 
நாம் எல்லோரும் வரவேற்கலாம்

நான் உங்களுடன் புது வருட வாழ்த்துக்களை பறிமாரிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பெரியவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். என்னைவிட சிறியவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த மாதம் நான் பாடிய திருப்பாவை திருவெம்பாவப் பாடல்களை இங்கே கேட்டு நீங்கள் ஆய்வு செய்யலாம். அனுபவிக்கவும் செய்யலாம்.





No comments:

Post a Comment